ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர் -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)
இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற 8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
7-ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று கிழமை ) அடுத்த வார நிகழ்ச்சிக்கான நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.
நிழல் படம் எண் : 385இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/385.jpg)
தங்கமே உன்னை தான் !!!
ஹே தங்கமே !!! சாரி டி மணிச்சுக்கோ டி !!!
சின்ன சண்டை தானடி இது...இதுக்காக ஏன் என்கிட்ட பேசாம இருக்க ??
நீ பேசாம கஷ்டமா இருக்கு என்று கெஞ்சி கேட்டபடி அவளை பின் தொடர்ந்து சென்றான் காதலன்...
அவளே தவறு செய்து இருந்தாலும், பிடிவாத குணம் அவளை விட்டுக்கொடுத்து போகாமல் தடுத்தது...
"அகம் பிடிச்ச கழுதை"nu சும்மாவா சொன்னாங்க இவள, இப்படி கெஞ்ச விட்டாலே என்று எண்ணிய அவன் சிறிதும் முகம் சுளிக்காமல் மன்னிப்பு கேட்டு நடந்தான்...
அலைகள் ஓய்வதில்லை உங்கள் அன்பை போலவே !!! என்று கடல் இவர்களை பார்த்து கவிதை கூற ஆரம்பித்த நேரம் அது...
என் அலைகளின் ஓசையிலும் அவர்கள் கதையை கேட்டறிந்தேன்...கரையை தொடும்
ஒவ்வொரு அலையிலும் உங்களின் காதலை உணர தொடங்கினேன்...
உங்கள் காதல் கதை எனது அலைகள் போல தொடரும்,
சிறிய ஒவ்வொரு அலையும் உங்கள் நினைவுகளை பேசும்…
அவன் கண்கள் முன்னே அவன் எதிர்காலம் நடந்து செல்ல, அவள் இதழோரம் சிறு புன்னகை தீண்டி சென்றது...நான் வியந்து பார்த்தேன் காதல் இது தானா என்று...
அருகில் இருந்தும் சண்டை போடுவது சரி தானா ? கடல் கடந்தும் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்களுக்கு உணர எண்ணினேன்...ஆனால் அது தேவைப்படவில்லை ஏனெனில் "கெஞ்சல்" சத்தம் சற்று நேரத்தில் "கொஞ்சல்" சத்தமாக மாறியதை கேட்டேன்...
இந்த காதல், கடலாய் பரவட்டும் எல்லைகள் இல்லாமல்...கடலின் ஆழம் போல் அவர்கள் அன்பு நிலைக்கட்டும் என்று பிரபஞ்சத்திடம் எண்ணி இக்கவிதையை முடித்து கொள்கிறேன்...
- கடல்