FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RajKumar on October 03, 2025, 03:27:01 PM

Title: வரலாற்றில் இன்று 03 அக்டோபர்
Post by: RajKumar on October 03, 2025, 03:27:01 PM
*வரலாற்றில் இன்று*
*03 அக்டோபர் 2025-வெள்ளி*
*===========================*

1392 : ஏழாம் முகம்மது கிரனாடாவின் பன்னிரண்டாவது சுல்தானாக முடிசூடினார்.

1831 : மைசூர், கம்பெனி நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1833 : இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

1908 : பிராவ்தா பத்திரிகை ரஷ்யத் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக வியன்னாவில் இருந்து வெளியிடப்பட்டது.

1912 : அமெரிக்கப் படைகள் நிகரகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.

1918 : மூன்றாம் போரிஸ் பல்கேரியாவின் மன்னராக முடிசூடினார்.

1929 : செர்பியா, குரோஷியா ஸ்லோவேனியா ராஜ்ஜியம் இணைக்கப்பட்டு அதற்கு யூகோஸ்லோவியா எனப் பெயரிடப்பட்டது.

1932 : ஈராக், பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.

1935 : இத்தாலி, எத்தியோப்பியா மீது படையெடுத்தது.

1940 : வார்ஸாவில் உள்ள யூதர்கள் மரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

1942 : ஜெர்மனியில் ஏ 4 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெஸ் கிராமத்தில் பொதுமக்கள் 92 பேரைக் கொன்றனர்.

1952 : லாஸ் ஏஞ்செல்ஸில் வீடியோ கேசட் மூலம் முதன் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

1957 : விவித்பாரதி நிகழ்ச்சிகள் முதன் முதலாக ஒலிபரப்பானது.

1962 : சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
வொல்லி சீரா 9 மணி நேரத்தில் 6 முறை பூமியைச் சுற்றினார்.

1963 : ஹொண்டுராஸில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியால் அங்கு ராணுவ ஆட்சி ஆரம்பமானது.

1963 : ஹெயிட்டியில் சூறாவளித் தாக்கியதில் 5,000 பேர் இறந்தனர்.
ஒரு லட்சம் பேர் காயமடைந்தனர்.

1974 : கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

1977 : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி லஞ்ச ஊழல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

1978 : பின்லாந்தில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 15 பேரும் உயிரிழந்தனர்.

1981 : வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரிஷ் குடியரசு ராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது.
10 பேர் உயிரிழந்தனர்.

1982 : ஸ்வாஸிலாந்தின் மன்னராக 11 வயது நிரம்பிய இளவரசர் மக்கோஸ்மிவா முடிசூட்டப்பட்டார்.

1989 : பனாமாவில் நடைபெற்ற ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1993 : சோமாலியாவில் ஆயுதக் குழுவினரை பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர் வீரர்களும் ஆயிரம் சோமாலியர்களும் கொல்லப்பட்டனர்.

2010 : 19 வது காமன்வெல்த் விளையாட்டு டெல்லியில் தொடங்கியது.

2012 : சிரியாவின் அலெப்போவில் நடை பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

2013 : இத்தாலியின் லம்பேடுசா தீவில் ஆப்ரிக்க குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.

2015 : ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மருத்துவமனை மீது நடந்த விமானத் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.