ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர் -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)
இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற 8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
7-ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று கிழமை ) அடுத்த வார நிகழ்ச்சிக்கான நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.
நிழல் படம் எண் : 382இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/382.png)
வானத்தில் பறக்கும் ராகங்கள் !!!
மெளனமாய் நின்ற இரவின் நிழலில்,
நட்சத்திரங்கள் கீதம் பாடுகின்றன...
காற்றின் ஓசையிலும் இசை உண்டு,
மழையின் துளிகளிலும் தாளம் உண்டு...
ஒரு தாளம் ஒலிக்கும் நேரம், புதிய கனவுகள் மலர தொடங்குகிறது !!!
ஆன்மாவின் ஆழத்தில் உண்டாகும் ஒளியாய் பாடல் பிறக்கிறது...
மெளனத்தில் பிறக்கும் மெல்லிசை,
வேதங்களில் ஓங்கும் ராகம்,
அதுதான் Classical இசை...
பியானோ, கிட்டார், டிரம்ஸ் ஒலியில்
இதயத்தை ஆட்டும் ரிதம்,
அதுதான் Modern இசை...
உயிரின் நரம்புகளைக் கூட
நாதமாய் நெஞ்சில் பிணைக்கும் குரல்,
மருந்தாகும் மெட்டுகள்,
மனமகிழ்க்கும் தாளங்கள்...
சங்கீதம் பிறந்தது மனிதன் பிறக்கும் முன்பே,
பிரபஞ்சம் உருவான முதல் நொடியே
ஒலி தோன்றியது...
சொல்லத் தெரியாத நெஞ்சங்களின் குரல்,
விளக்க முடியாத உணர்வின் மொழிபெயர்ப்பு....
இசை வெறும் ஒலி மட்டும் அல்ல, இதயம் பேசும் மொழியும் ஆகும்...
இசை கற்றவர் பாடகர் மட்டும் அல்ல மருத்துவரும் என்பதே உண்மை!!!
உலகம் முழுதும் மௌனமாக இருந்தாலும்,
இசை மட்டும் பேசும்…
அது சொல்லும் வார்த்தை ஒன்று தான் –
"நீ ஒருபோதும் தனியாக இல்லை"
"ஒவ்வொரு இதயமும் ஒரே தாளத்தில் தான் துடிக்கிறது"