(https://i.ibb.co/JFgthJVg/548196589-122251733516037466-7438678620570856506-n.jpg) (https://imgbb.com/)
ஒரு சமயம் கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன் கேட்டான்.. ”சாமி , ஒரு கோடி வருஷங்க்கிறது உங்களுக்கு எவ்வளவு நேரம்?“
இறைவனும் சிரித்துக் கொண்டே ”ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் ” என்றார்.
அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் ”அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி ? “
அவரும், ” ஒரு ரூபாய் போல ” என்றார்.
உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், ” அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் ” என்றான் மிகவும் அடக்கமாய் …
இறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே” நீ ஒரு நிமிஷம் பொறு மகனே “.. என்றாராம் …
😯😯
(ஒரு நிமிஷம் = 1 கோடி வருஷம்
😀😀)