ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர் -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)
இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற 8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
7-ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று கிழமை ) அடுத்த வார நிகழ்ச்சிக்கான நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.
நிழல் படம் எண் : 381இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/381.jpg)
நான் ஒரு ஆணாக இருந்தாலும், இதில் ஒரு பெண்ணின் புரட்சி, சிந்தனைகள், கனவுகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்று புனைந்து எழுத முயற்சித்துள்ளேன்
-----------------------------------------------------------
அழகை மீறும் புரட்சி !
கண்களில் தீட்டும் மை
அழகுக்காக அல்ல
என் பார்வை எரிவதற்கே
உலகம் உலுக்கும் எண்ணத்திற்கே.
இமைகளின் இடைவெளியில்
ஒவ்வொரு சுவடும்
மௌனத்தில் எழுதப்பட்ட
மறைந்த வசனம்.
என் கண்கள் பேசும் மொழி
உங்கள் உதடுகளில் ஒளிந்திருக்கும் உண்மை.
கழுத்தோடு ஓடும் கூந்தலும்
காதோரம் ஆடும் காதணியும்
இவை என் புரட்சியின் பாடல்
என் முழக்கத்தின் இசை.
ஒவ்வொரு ஓசையும்
சொல்லப்படாத கதைகளைப் பேசும்
மௌனத்தை முறிக்கும்
என் உள்ளத்தின் புயல்.
என் காதுகள் தாங்கும் இசை
சுதந்திரப் பறவையின் தாளம்.
கையில் சுழலும் வளையல்கள்
அடிமையின் சங்கிலி அல்ல
என் வாழ்க்கையை வடிக்கும்
சக்தியின் மண்டலம்.
என் கைகள் காட்டும் பாதையில்
என் உலகம் விரிகிறது
எல்லைகள் அறியாத பெருங்கனவு
அருவிபோல பாய்கிறது.
என் கைகள் காட்டும் வழி
புதிய உலகைக் காட்டும் சக்தியின் திசை.
ஆணழகு பேசும் உயிர்களின் உலகில்
மனிதரில் மட்டும் பெண்ணழகு
அளவுகோலாய் மாறியது ஏன்?
"அழகு" பெண்ணின் சுதந்திரதை கட்டுபடுத்தும்
ஒரு உளவியல் சொல்.
ஆனால்,
என் பாதை வளையாது,
என் குரல் அடங்காது.
உடல், ஆடை, அணிகலன்
என்னை அளவிட முடியாது.
என் ஒவ்வொரு செயலும் உரைக்கும்
என்னைப் பார்,
என்னை மதித்திடு,
என் சுதந்திரத்தை முறிக்காதே.
ஏனெனில்
என் கண்களில் நெருப்பு
என் காதுகளில் போர்க்குரல்
என் கையில் விடுதலை
என் உள்ளத்தில் முழுமையான புரட்சி.
நான் எழுகின்றேன்
அழகின் அடையாளமாய் அல்ல
சிந்தனையின் அடித்தளமாய்.