FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on August 31, 2025, 04:32:13 PM
-
கைப்பற்றிய காதல் உலகில்
அன்பு மட்டுமே நிரம்பியிருக்க
மகிழ்ச்சியில் நாளு(னு)ம் திளைத்திருக்க....
சிறகுடைந்த பறவையாய்
புயலில் சிக்கிய மலராய்
இமை திறக்கையில் மறையும் கனவாய்
அனைத்தும் காணல் நீராய் போனதேனோ?
நொடிப்பொழுதில் வெற்றிடமாய் ஆனதேனோ?