ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நிழல் படம் எண் : 380
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/380.jpg)
நம்பிக்கை பேசுகிறேன் !!!
ஏன் பயப்படுறே? நான் உன்னோடு இருக்கிறேன்...
உன் கண்களில் ஒளியாக, உன் இதயத்தில் துணிவாக... என்றென்றும் உனக்கு துணையாக...
நீ கீழே விழுந்தாலும் உன் கைகளை பிடித்து எழுப்புகிறேன்...நீ செல்லும் பாதை மறந்தாலும் நான் உன் பாதையாகிறேன்...
இருள் சூழ்ந்த பாதையிலும், ஒளியை தேடி நடக்கும் காலடி - நானே ( நம்பிக்கை )...
சின்னஞ்சிறு விதையையும்
பெரும் மரமாக மாற்றும் வல்லமை,என்னுள் தான் மறைந்திருக்கிறது...
நான் இருந்தால் வாழ்க்கை சவாலல்ல,
அது தான் வெற்றியின் முதலடி...
அம்மாவின் நம்பிக்கை நம்மை வெற்றியை நோக்கி நடக்க செய்யும்...
அப்பாவின் நம்பிக்கை
ஒரு மகளின் பாசமான வலிமை...
உலகம் " இல்லை " என்றாலும் நீ " ஆம் " என்று சொல்லி பழகிக்கொள்...நம்பிக்கை உன்னை அழகாகும்...உன் வலி கலந்த சிரிப்பையும் வலிமையாக்கும்...
ஏனெனில் நீயே எனது உயிர்...உனக்காக ஒரு ஒரு நாளும் ஒரு புதிய கதை காத்திருக்கிறது...எழுந்திரு !!!