FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on August 18, 2025, 01:34:33 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: Forum on August 18, 2025, 01:34:33 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .


Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.



நிழல் படம் எண் : 379

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/379.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: PoonaKuttY on August 18, 2025, 02:13:14 PM
இரு கைகள் இணையட்டும்

தொலைவில் இருந்த நானோ, உன் அருகில்
உன் தொடுதலினால் தொலைந்து போனேன்,
கண்களின் வழியே என் காதல் சொன்னேன்,
ஆனால் நீயோ உன் கைகளால் என்னை கைது செய்தாய்.

அகப்பட்டவன் நானே, அகன்று செல்ல மனமில்லாமல்
அடைகலமாகி விட்டேன் உன்னுள்ளே...
விதியோ என் கையை விட்டது,
ஆனால் நான் உன்னை கை விட மாட்டேன்.

உன் கைப் பிடித்த அந்த மறுநொடி
என் வாழ்வின் ஆரம்பமாம் என எண்ணினேன்,
வாழ்க்கையோ என்னை எங்கு கொண்டு சென்றாலும்,
உன் கை விடாது, என்னுடன் கூடிச் செல்வேன் துணையாய்.

ஒரு கையில் ஓசையில்லை,
நீயும் நானும் சேர்ந்து கைப்பிடிப்பதே என் ஆசை,
காதலின் தொடக்கம் கண்களில் வழியே,
ஆனால் என் முடிவோ பெண்ணே – உன் கைப்பிடிலே... 🤝❤️
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: Thooriga on August 18, 2025, 02:59:29 PM

நான் இருக்கிறேன் உனக்காக

நீ வாழுற இந்த வாழ்க்கை  உனக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும்,
புயலே உன்னை தீண்டினாலும்..
நீ எதுக்குமே வருத்த படாதா..
ஏன்னா நான் இருக்கேன் உனக்காக

உன் கையை பிடிச்ச அந்த நொடி
எனக்குள்ள தோன்றின அந்த எண்ணங்கள்..
உன்னை விடாம தாங்கி நிக்கணும்..
உன் சிரிப்புக்கு நா மட்டுமே காரணமா இருக்கனும்..
உன் கண்ணீரை துடைக்கும் விரல்கள் என்னோடதா இருக்கனும்...

இந்த உலகத்துல யாரு உன்ன மறந்தாலும் சரி ..வெறுத்தாலும் சரி
என்னோட  இதயம்  உன்ன எப்பவும்  மறக்க நினைக்காது..
நிழல் போல உன் கூடவே இருப்பேன்...

நீ விழுந்தால் கை கொடுப்பேன்,
நீ சோர்ந்தால் தோளாக இருப்பேன்,
நீ மௌனமானாலும் உன்னை விடாமல் கேட்பேன்,
ஏனெனில் நான் இருக்கிறேன் உனக்காக.

மௌனத்தில் கூட நீ பேசினாய்,
என் மௌனத்தை கூட நீ  புரிந்துகொண்டாய்.
“நீயும் நானும் ஒன்றுதான்” என்று
கைக்கோர்த்தபடி உறுதியளித்தாய்.

காதல் என்பது சொல்லும் வார்த்தைகளில் அல்ல,
கைகோர்த்து உயிராய் நிற்பது தானே
யார் இருகாங்க இல்ல
நீ எங்கு இருந்தாலும்,
நான் உனக்காகவே இருக்கிறேன்…என்றென்றும் ❤

வெறும் வார்த்தையாய் மட்டும் அல்ல உணர்வுகளால் சொல்கிறேன்..
என்றும் நான் இருப்பேன் உனக்காக உனது தேவதையாய்..

உன் வருகையை எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கிறேன்..




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: Thenmozhi on August 18, 2025, 03:08:26 PM
என் ஆருயிர் அண்ணா!

அம்மாவின் அன்பும் ,அப்பாவின்   பாதுகாப்பும் ஒன்றாக கிடைத்தது உன்னிடமே என் அருமை அண்ணா!
அவனியில் நான் உதித்த போது, என் பிஞ்சுக் கரம் பிடித்து,நான் இருக்கிறேன் உனக்கு வா வீட்டுக்கு போகலாம் என்று என்னை அழைத்துச் சென்றாய்!
அந்த பற்றிய கரம் விடாமல் இன்றுவரை பத்திராமாக பாத்துகிறாய் உன் குட்டிமா என்று!

பிறக்கும் முன்பு உன்னை தெரிந்திருந்தால், பிறக்கும் போது கூட அண்ணா என்று அழுதிருப்பேன்!
நம்ம அண்ணா தங்கை உறவு விலை மதிப்பற்ற பாசம்!
நம்ம பாசத்துக்கு நடுவில் எந்த உறவும் வர முடியாது, வரவும் நாங்கள் விட்டதில்லை!
நம்ம பற்றிய கரங்கள் யாராலும் அவிழ்த்து விட முடியாது!

எனக்குள் மிகப்பெரிய பெருமிதம் எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறாய் என்பதே!
எங்கள் உறவு இதயங்களால் இணைக்கப்பட்டது ,கைகளால் மட்டுமே அல்ல!
அழுதால் துடைக்கும் ,சிரித்தால் தட்டும்,செல்லமாய் குட்டும் பாசமான என் அண்ணா!
டேய் அண்ணா என்று அதட்டலுடன் ,அன்பாய் உன்னை அழைப்பேன்!

கடவுள் எனக்கு கொடுத்த வரம் நீ அண்ணா!
சண்டை போட்டாலும் அடுத்த கணமே சமாதானம் ஆகி ,ஒன்றாக சாப்பிட்டு அம்மாவையே என்னடா இது என்று மிரள வைத்திருக்கிறோம் அண்ணா!
கக்ஷ்டம் வந்து நான் துவளும் போதெல்லாம்,
நான் இருக்கேன் உனக்கு என்று சொல்லி ,என் கைகளைப் பிடித்து உன் தோள் சாய்த்தாய் அண்ணா!

அண்ணனுக்கு கண்ணீர் விடுபவள் தங்கை!
தங்கைக்காக உயிரை விடுபவன் அண்ணன்!
அண்ணா நீ மணம் முடித்து சென்றபோது ,என் கண்கள் கலங்கவில்லை,ஏன் தெரியுமா? நீ கரம் பற்றியது ஒரு கரம் என்னுடன்,மறு கரம் அண்ணியுடன்!
இந்த வரம் கிடைத்த நான் அதிக்ஷ்டசாலி!

நாங்கள் வேலைக்காக தொலைதூரத்தில் இப்போ இருக்கின்றோம்!
தொலைதூரத்தில் இருந்தாலும் ,நினைவெல்லாம் நீ அண்ணா!
உன் நினைவுகள் என்னை வாட்டும் போது ,நான் FTC போய் நண்பர்களுடன் உரையாடுகின்றேன்!
இந்த உலகில் அப்பாக்கு பின் நான் நம்பும் ஒரே ஆண் நீ தான் அண்ணா!

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம்ம பாசம் மாறாது அண்ணா!
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ,நீ தான் என் அண்ணாவாக வர வேண்டும் என வரம் கேட்பேன்!
நாங்கள் பற்றிய கரங்களை விட மாட்டோம் ,எதுக்காகவும் யாருக்காகவும்!
அண்ணா நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!

உன் அருமை குட்டிமா தேன்மொழி!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: Lakshya on August 18, 2025, 05:27:10 PM
அப்பாவின் தோள், மகளின் வலிமை!!!


கண்ணே கலங்காதே...
தோல்வி உன்னை சோதிக்க வந்ததே தவிர,
உன்னை தள்ளி விட வரவில்லை...

இன்று கண்ணீரால் நனைந்த உன் கண்கள், நாளை வெற்றியின் ஒளியால் ஜொலிக்கபோவதை, உன் அப்பா நான் பார்க்க வேண்டாமா?

தோல்வி வந்ததாலே வாழ்க்கை முடிந்துவிடாது...
அது சிறிய கற்கள் நிறைந்த பாதை மட்டுமே !!!
தாண்டிவிட்டால் வெற்றி நிச்சயம் ...

நீ விழுந்துவிட்டதை எண்ணாமல் முன் நோக்கி நடந்து செல்லடி கண்ணே !!!
அப்பா இருக்கிறேன் உன்னோடு...

மழை கொட்டிய பின்னே வரும் வானவில் மிக அழகாக இருக்கும், அதே போல உன் வாழ்க்கை பயணத்தில் வரும் சோதனை அனைத்தும் ஒரு நாள் சாதனையாக மாறும் என்பதை மனதில் வைத்து நகர்ந்து செல்...

உன் கனவுகள் உன்னை கைவிடாது.
நீ இன்னும் வலிமையோடு எழுந்து நிமிர்ந்தால்,
உலகமே உன்னை வியக்கும்.

என் கையை பிடி கண்ணே… நீ தடுமாறினாலும் உன் கனவுகளை நான் கைவிடமாட்டேன்...

உன் திறமை உன்னை விட்டு போகாது...உன் உழைப்புக்கு பலன் நிச்சயம் !!! நீ மீண்டும் எழுந்து நிற்பாய் , அப்பாவின் நிழல் உன் பின்னே எப்பொழுதும் இருக்கும் ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: Yazhini on August 18, 2025, 05:55:04 PM
.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: VenMaThI on August 18, 2025, 09:24:33 PM


கவலையில் அழுது கூப்பாடு போட்டாலும்
கட்டி அணைத்து என் கண்ணீரை துடைக்க வேண்டாம்...

மனவருத்தம் என்று வருகையில்
முத்தமிட்டு என்னை முகம் மலரச் செய்ய வேண்டாம்...

தோல்வியுற்று துவண்டு நிற்கையில்
தோள் கொடுத்து என்னை தேற்ற வேண்டாம்..

தனிமை என்னை வாட்டும்போதும்
தாங்கி என்றும் என்னைப்பிடிக்கவேண்டாம்...

எந்த நிலையிலும் என் தேவையெல்லாம்
உன் உள்ளங்கையில் என் உள்ளங்கை மறைந்திருக்க
உன் உதடுகள் உரக்க உரைக்கும்
"நான் இருக்கேன்" என்ற இரு வார்த்தை மட்டுமே...

இவ்விரு வார்த்தைகளுக்கு உள்ள வலிமை.. உலகில்
வேறெந்த மந்திரத்திற்க்கும் உண்டோ என வியக்கிறேன்...

தோல்விகள் அனைத்தும்
வெற்றியாய் மாறிடும் ...
கரை புரண்டோடும் கண்ணீரையும்
அணைபோல நிறுத்திடும்..
முடியாது என்று சொல்லையும்
முடியும் என்று மாற்றிடும்..
தனிமையை போக்கி என்றும்
இனிமையை நழ்கிடும்...
கஷ்டங்களைக்கூட இஷ்டமாய் மாற்றி
வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும்
நம்பிக்கையை நம்முள் விதைத்திடும்....

'Are you okay baby' என்பதை
Formality காக கூட கேட்டுவிடு .. ஆனால்
"I am there for you' என்பதை மட்டும்
விளையாட்டாய் என்றும் கூறிவிடாதே.......

"நம்பி கை கொடுப்போம்... நம்
நம்பிக்கை வீண் போகாது" என்ற
நம்பிக்கையை நங்கையுள் விதைத்திடு..
நங்கூரமாய் அவள் மனதில்
உன் நினைவினை என்றும் பதித்திடு....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: RajKumar on August 18, 2025, 10:20:02 PM
இரு கரங்கள் சோர்ந்த
ஒரு நொடியில் மின்னலாய்
உன் நினைவுகள் என்னை
வருடிச் செல்கிறது

அழகான புன்னகையைத் தந்து
அடி மனதில் காதல் ஆசையை துண்டுகிறாய்

உன் காந்த கண் என்னை கண்டவுடன்
கவருதடி என் மனத்தை
அது கதியற்று
உன் பின்னால் அலையுதடி

உன் விழியில் என் காதல் கண்டேன்
உன் புன்னகை என்னெறும் 
என் வாழ்வை வளப்படுத்தும்

என் இதயம் உனக்காக துடிக்கிறது
உன் கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறது

காதல் என்னும் கடலில்
உன்னுடன் இணைந்து பயணம் செய்து
ஆயுட்காலம் முழுவதும்
வாழ விரும்புது என் மனம்

என் இதயத் துடிப்பே
என் உயிர் நாடியே
உன்னை‌  என் வாழ்க்கை துணையாக
கரம் பிடிக்க காத்து இருக்கிறேன்

வானம் பூமியே போல்
கடலும் அலையும் போல் இணைப் பிரியாமல்
உன்னை என் வாழ்வில் இணைந்து
வாழ் நாள் முழுவதும் வாழ விரும்புகிறேன்

ஒரு கரம் நீட்டி காதலி ஆனாய்
இரு கரங்கள் இணைந்து
இல்லறம் என்ற நல்லறம் செய்வோம்
வா என் காதலியே

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: Ashik on August 19, 2025, 01:38:40 AM
காதலிக்கும் வேளையில் !!அவளின் கரம் பற்றினேன் !! என்றும் என்னுள் இருக்கும் இறுக்கம் நீங்க !! என்னேயே நான் அறிந்து கொள்ள !! தீராத என் தனிமையின் வலியை தீர்த்து வைக்க அவளின் கரம் பற்றினேன் !! அவள் என்ற சொல்லில் எனது அகிலம் எல்லாம் அடங்க !! அவளின்றி என் அனுக்கள் அசையாதிருக்க !! அவளை தவிர வேறு சிந்தநை எனக்குள் நுழையாமல் இருக்க !! அவளின் கரம் பற்றினேன் இருள் சூழ்ந்த என் வாழ்வை வன்னமாய் மாற்றிட !! ஆராத ரனமாய் எனக்குள் இருந்த காயங்களை ஆற்றிட !! தோழமைகளின் துரோகங்களை மறந்திட !! அவளின் கரம் பற்றினேன் மகிழ்ச்சி என்றும் எனக்குள் நிலைத்திருக்க !! என் கனவுகள் எல்லாம் நிறைவேரிட !! என் வாழ்வே அழகாய் மாறிட !! அவளின் கரம் பற்றினேன் !! என் உலகமாய் அவள் மாறிட !! நான் பார்க்கும் திசையெல்லாம் அவள் முகம் மட்டுமே கண்டிட !! என் முகவரியாய் அவள் மட்டுமே இருந்திட !! அவளின் கரம் பற்றினேன் !! மரனம் நெருங்கும் நேரத்தில் அவளின் அனைப்பில் மரனத்திட !! வாழ்வெல்லாம் அவளுக்கா அர்ப்பனித்திட !! என் இதயம் அவளுக்காக மட்டும் துடித்திட !! இன்று நாங்கள் பிரியும் தருனத்தில் அவளின் கரத்தை பிடித்து கெஞ்சினேன் எனக்காக என்னுடன் வாழ்ந்திட !! என்னை பிரிந்து செல்லாமல் இருக்க !! என்னை உதறி விட்டு அவளின் வாழ்வை தேடமால் இருக்க !! அவளின் கரத்தை பிடித்து கெஞ்சினேன் அவளின் பிரிவால் உயிர் இருத்தும் பினமாய் நான் வாழாமல் இருக்க !! 💔🚶‍♂️அவளின் கரம் என்னை விட்டு சென்றது என் வாழ்வையும் அதனுடன் பற்றி கொண்டு !! 💔🚶‍♂️
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: joker on August 19, 2025, 05:52:45 PM
உன் கண்ணோர பார்வை போதுமே
கரம்பிடித்து செல்லும் பாதையில்
உரையாடல் இல்லாமல்,
உறவு மெல்ல நகரும்

பேசி பேசி வளர்த்த உறவு,
இன்று
மெல்ல மெல்ல
மௌனமும், புன்னகையுமே
நம் உறவுக்கு  புதுக்கவிதை
படைக்கிறது

அவள் தெளிவாகத்தான்
இருக்கிறாள்
நான் தான் உளறிக்கொண்டிருக்கிறேன்
மனதிற்குள்  உன்னோடு

ஆண், பெண் நட்பென்பதால்
ஓராயிரம் முகம் கொண்டு
உலகம் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது

எப்படி சொல்வேன்
நம் உறவு
மூச்சு போல சுவாசித்து
நரம்புகளின் வழியே ஓடி
உடல் முழுவதும் வியாபித்திருக்கும்
ஒரு உணர்வென்று

நம் நட்பு, நம் பாசம், நம் நேசம்
வார்த்தைகளை கொட்டி
கடை விரித்து
பிறருக்கு விளப்படவேண்டிய
அவசியமில்லாதது

நமக்குள்
சில நேரங்களில்
சண்டை வரும்,
பேசாமல் நிமிடங்கள்
நாட்களாய் கொல்லும்
ஆனால்
அதைக் கடந்த பின்,
உன் கரத்தின் வெப்பத்தில்
என் கோபம் எல்லாம்
சுருங்கி
மீண்டும் முழுமையடைய செய்யும்



****JOKER****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: Sankari on August 19, 2025, 07:12:08 PM
வாழ்க்கை விசித்திரமானது அல்லவா ?
யார் எப்போ நம் வாழ்வில் வருவார்கள் போவார்கள் என்று தீர்மானிக்க முடியாது...
ஆனால் சிலர்கள் நங்கூரம் போல் பதிந்து நம்மளை விற்று செல்வதில்லை

மழலையார் பள்ளியில் பயத்தோட ஒன்றாக உலகத்தை கற்றுக்கொள்ள வந்தது
நினைவிருக்கிறது
பள்ளியில் ஓடிப் பிடிச்சு விளையாடுனது
நினைவிருக்கிறது
கல்லூரியில் நம் பாதை சில வருதங்களுக்கு இரண்டு திசையில் போனது
நினைவிருக்கிறது
உயர்நிலை பள்ளியில் திரும்ப ஒன்றாக சேர்ந்து சேட்டைகள் பண்ணது நினைவிருக்கு
அதுக்குப் பிறகு நாம் ஒன்றாக இருந்தது மட்டுமே
நினைவு இருக்கு !
 
நீ நெருப்பு என்றால் நன் நீர்
நீ நீர் என்றால் நான் நெருப்பு
அவ்ளோ வித்தியாசமாக இருந்தாலும் நமக்குள் அவ்வளவு ஒற்றுமை
உன் கூட இருந்தாலே புன்னகைகள் மட்டுமே
நாம் இருவருக்கும் மட்டும் புரியும் நகைச்சுவைகள்
 
என்னோட பெரிய கஷ்ட காலத்தில் நீ என் கூட இருந்தாய்
நான் கண்ணீர் சிந்திய போது நீ தோள் கொடுத்தாய்
சிலர் என்னை கைவிட்ட போது நீ மரம் போல் என்கூட நின்றாய்
நான் உனக்கு இருக்கேன் என்று ஆதரவு சொன்னாய்
எந்த இடத்திலும் என்னை நீ விட்டுக் கொடுத்ததும் இல்லை

நம் நட்பு மிகவும தூய்மையானது
அதில் என்னைக்கும் பொறாமை தீமை இருந்தது இல்லை
இந்த நட்பு இந்த வாழ்க்கை முழுவதும் நிலைக்க வேண்டும்
 என் தோழியே !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 379
Post by: Kavii on August 20, 2025, 12:03:24 AM
பிரிவின் வலி
அன்று என் கரம் பிடித்து காலமெல்லாம் உன்னுடன்; இருப்பேன் என்று சொன்னவன்
இன்று துன்பத்தை என் துணையாக்கி கண்ணுக்கெட்டாத தொலைவில் காணாமல் போய்விட்டான்.!

முதலும் நீ! முடிவும் நீ! என்றவன்
என்னை வெறுமையாக்கி வெற்றிடத்தில் விட்டுப்போனான்!

குருட்டு நம்பிக்கையில் அன்று நான் பிடித்த கை
இன்று என் கையை விட்டு வெகுதுதுரம் போய்விட்டது.

உன் பேச்சை கேளாமல் என்; நாள் செல்லாது என்றவன்
இன்று என்னை ஊமையாக்கிச் சென்று விட்டான்.

அவனோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
இன்று முள்ளாய் என் இதயத்தைக் கிழிக்கிறது.

நகமும் சதையுமாய் இணைந்து இருந்த நம் உறவில நம்பிக்கை ஓவியமாய்
நான் வரைந்த கனவுகள் எல்லாம் இன்று வண்ணம் கலைந்து கிடப்பில் போனது!

இரவெல்லாம் விழித்திருக்கும் என் கண்கள் கேட்கின்றன! அவன் திரும்பி வருவானா என்று!
மௌனமாய் சிந்தும்; என் கண்ணீரின் சத்தம் மட்டுமே அதற்கு பதில்!

அவனால் ஏற்பட்ட காயத்திற்கு ஆறுதல் தேடித்தேடி தோற்றுப்போனேன்!
இனி சக்தியில்லை என்பதால் மரத்துப்போன மனதுடன் மரித்துப் போகிறேன்!

காரணமில்லாமல் என்னைப் பிரிந்துவிட்டான்!
உண்மைகளயும், உணர்வுகளையும் கொன்றுவிட்டான்!
அவன் செய்தது துரோகமே என்றாலும்; என் அன்பு உண்மை என்பதால்...
அவன் விட்டுப்போன இடத்திலேயெ நிற்கின்றேன் பட்டமரமாக !

அவனோடு வாழ்ந்த நினைவுகள் அழியாத சுவடாய் என் இதயத்தில் !
ஆனாலும் அவன் தந்த வலிகளையும் . வேதனைகளையும் மீறி நேசிக்கிறேன் அவனை என் உயிராக!

வாய்ப்பில்லை என்ற போதும் என்றோ ஒரு நாள் வருவான் என்ற ஒற்றை நம்பிக்கையை
சுமந்து கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறேன்! நடைப்பிணமாக!

காதல்! காதல்! காதல் போயின் சாதல் சாதல் சாதல்!
என்றென்றும் மாறாத கோட்பாடு!

காதல் சாவதில்லை! காதலிப்பவர்கள் தான் செத்துக்கொண்டிருக்கிறார்கள்
அன்றும்! இன்றும்!