FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on July 28, 2011, 04:18:21 PM

Title: என் அன்னையே
Post by: ஸ்ருதி on July 28, 2011, 04:18:21 PM
உன்னை உருக்கி
என்னை செதுக்கிய
சிற்பியே
என் உயிர் கண்ணை
திறந்தவளே..
உன்னை கொண்டாட ஒரு நாள்
போதுமா???
உன்னை வரிகளுக்குள்
அடக்க முடியாது
வானத்தோடு ஒப்பிட
முடியாது...
உன் பாசத்தை சொல்ல
வார்த்தைகள் ஏது??
என் அன்னையே
என் கருவில் மகளாய் வா
இனி ஒரு பிறவி
எனக்கு இருந்தால்
Title: Re: என் அன்னையே
Post by: Yousuf on July 28, 2011, 07:04:11 PM
மிக சிறந்த கவிதை...!!!

தாயின் பாசத்தை பூமியில் உள்ள எதொநோடும் ஒப்பிட முடியாது...!!!

தாயின் பாசத்தை மற்றவர்களும் உணரும் வண்ணம் மிக சிறப்பாக கூறி இருக்கறீர்கள்...!!!

நல்ல கவிதை பாசத்தை பிரதிபலிக்கும் கவிதை...!!!
Title: Re: என் அன்னையே
Post by: Global Angel on July 30, 2011, 03:12:06 AM
என் அன்னையே
என் கருவில் மகளாய் வா
இனி ஒரு பிறவி
எனக்கு இருந்தால்

inimayana kavithai paasamana kavithai..nalla erukku unka pathivu sruthi ;)