ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நிழல் படம் எண் : 378
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/378.jpg)
ஏன் எனக்குன்னு எந்த பெயரும் வைக்கல??? எல்லாரும் "குழந்தை" - அப்படி தான் சொல்றாங்க, என யோசித்து கொண்டிருந்த பாப்பா திடீரென...
அடடா விடிஞ்சிருச்சு போல சேரி எழுப்புவோம் அம்மாவ...
கண்கள் மெல்ல விழிக்கிறாள் அம்மா குழந்தை அழும் சத்தம் கேட்டு...கதிரவன் கூட இன்னும் துங்கிட்டே தான் இருக்காரு உனக்கு என்ன அவசரம் என்று கொஞ்சி கொண்டே கேட்டாள்...
பசிக்குதே அம்மா என்று குழந்தை செய்கை காட்ட, முத்தமிட்டு தூக்கி கொண்டாள்...உன் கரம் என்னை தழுவட்டும் மீண்டும் உறங்குவேன், நீ விழித்திரு என் அருகில்...
விளையாடு அம்மா என்னோடு என்று குழந்தை அம்மாவின் சேலையை பிடித்து இழுக்க... குட்டி கைகளை பிடித்து சொன்னாள் வேலை இருக்கிறது என்று...அந்த மழலைக்கு என்ன புரியும்???
மீண்டும் அதையே செய்தது, முகம் சுழிக்காமல் புன்னகையோடு விளையாடினாள்...
விளையாடி கொண்டே குழந்தை உறங்க, அன்னை கவிதையாக ஒரு பாட்டை பாடினாள்...
என் கரங்களில் மலர்ந்த பூவே, என் சுவாசம் நீ தானே...
நீ அழுகிற சத்தம் கூட என் வாழ்வின் ஓர் கவிதை தான் பாப்பா...
உன் விழி பார்த்து ரசிக்கிறேன், உன் சிரிப்பை கண்டு வியக்கிறேன்...
உன் கை பிடித்து நடக்க வைக்க ஆசை ஆனால் நீ இன்னும் தாவுழ கூட இல்லையே...
உன் சிரிப்பின் ஓசையை, எனக்கு கேட்டுக்கொண்டே இருக்க ஆசை...
நீ பார்க்கும்பொழுது உலகம் சுத்தமாக இருக்கணும்...அதற்கு நீயும் ஒரு காரணமாக இருக்கணும், இதுவே உன் அம்மாவின் ஆசை...