ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நிழல் படம் எண் : 377
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/377.jpg)
சிறைக்குள் கதறும் சத்தம்,
வாழ்க்கையில் இனி இருள் வட்டம்...
தண்டனையின் பெயரில் லத்தி அடி ஆட்டம்,
கண்ணீர் நிறைந்த கண்கள் சொல்லமுடியாத வலிகள்...
உடல் மட்டும் இல்லாமல் மனதளவிலும்
வலிகளை சுமந்த கைதிகள்...
சத்தமின்றி சாகும் மௌன குரல்,
சத்தம் எழும்பும் இடத்தில் மெளனமாய் கூச்சலிட்டான்...
கையில் சங்கிலி, மனதில் பாரம்
சொல்லி கண்ணீர் விட நாதி இல்லை...
சிறை சுவற்றில் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட படங்கள்,
நீதி கேட்டால் மீண்டும் கிடைப்பது லத்தி அடியே!!!
கைகளில் சாவி இருந்தும் திறக்க மறுத்த
அதிகாரிகள் மத்தியில், உயிரை கையில் பிடித்து
அடிவாங்கிய கைதிகளே
உங்களுக்கு நியாயம் கிடைக்க வழி இல்லையா?
கண்ணாடி போல் உடைந்த நீதி,நேர்மை...
தவறு செய்யாமல் அடி வாங்க பிறக்கவில்லையே நீ...
குற்றம் செய்யாதவன் ஏன் அடி வாங்க வேண்டும்?
அவன் மேல் விழும் அடி நியாயமானதா?
அவன் தனிமையை தாங்கிய சுவர்கள்
இப்போது ரத்த கரைகளையும் தாங்கி நிற்கிறது...
சிறையின் வெளியே ஒளி இருந்தும் சிறைக்குள் இருள் மட்டுமே...
நிழல்கள் மட்டும் வாழும் கருப்பு அறை, சிறை!
உன் ஒவ்வொரு கண்ணீருக்கும்
விடைகளை எங்கு தேடி செல்வாயோ நீ?