FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 29, 2025, 12:55:42 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: Forum on June 29, 2025, 12:55:42 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 376

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

[
(https://i.postimg.cc/QVGM0XWs/Untitled-700-x-700-px-20250629-124831-0000.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: Asthika on June 29, 2025, 08:45:49 PM
  காதல்மலர்ந்த ஒரு காலம், கண்களில் கனாக்கள்,
மரணிக்கும் வரை நினைவில் பதிந்த நிழல்கள்.
சிரிப்பின் சுழலில் துளிக்கும் மழை,
சின்ன சிரிப்பில் வாழ்ந்த என் நாட்கள்.


வாசனை போலவே விடாமல் வந்ததே!
வாசலில் நின்ற அவன் சிலிர்ப்பு புன்னகை
சில வார்த்தைகள் மட்டும் பேசினான் அவன்
ஆனாலும் வாழ்க்கையே பேசிவிட்டான் அவன்.

காலங்கள் கடந்தாலும் காய்ந்திடுமோ என் மனம்
காதலின் நிழல்களில்  சுடுகாடும்........ ஒரு...  வனம்.
அவன் நினைவு ஒரு மெளன மேகம்
என் காய்ந்த நெஞ்சை  தூறல்களால்
நினைத்திடுதே.. தினம்..

. தொலைவில் ஓர் நட்சத்திரமாய்,
தூக்கத்தில் ஒரு கனவாய்,
தொட்டுப் பார்க்க முடியாத
தூய காதல் ஓர் கனிசாய்.

தொலைபேசி ஒலிக்கையில்,
உன் குரல் ஒரு மெழுகாய்,
உன்னைக் காண மறுத்தாலும்,
உன் சிரிப்பு என் வாழ்வாய்.

கண்ணீர் கூட மகிழ்ச்சி தரும்,
உன் நினைவால் புன்னகை வரும்,
இந்நேரமும், இந்நிமிஷமும்,
இருவர் மனம் ஒன்றாய் வரும்.

தொலைதூரம் தவிர்த்தாலும்,
தொடர்கிறேன் உன் பாதையை,
நாளையொன்றில் நிச்சயம்,
நாம் சேரும் அதிசயம்! 


மழையில் நடந்து சென்ற நிமிடங்களோடு,
மறக்க முடியாதவன் உருவம் வரிகிறது.
அவன் சொல்லாத சில வார்த்தைகள்,
இன்று என் நெஞ்சத்தில் முழங்குகின்றன.

அவன் கைகளின் தைரியம், பார்வையின் பாசம்,
என் வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும் வாசம்.
அவன் நம்பிக்கையின் நிழலில் நான் நிலைத்தேன்,
அவன் பேசிய நிமிடத்தில் என் உலகம் மலர்ந்தேன்.

வந்தும் போன பயணமாயிருந்த போதும்,
வாழ்வின் முழு அர்த்தமும் தந்தவன் போல.
சில நினைவுகள் தீண்டுவதுதான் அவன் பரிசு,
நாளும் என் கனவுக்குள் வந்துவிடும் அந்த நிசி.


காதலனின் நினைவு சுவாசமாகி,
என் உயிரோடு ஒட்டிக் கொண்டான் இனிமையாக.

இப்படிக்கு

      அவன் வருகையை எதிர்பார்த்து கொண்டிருப்பவள்❣️❣️
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: Thenmozhi on June 29, 2025, 09:32:00 PM
  தொலைதூர காதல்

உன் அருகில் நான் இருக்கும் வரை உன்னை நான் எத்தனை முறை நினைத்தேன் என்று தெரியவில்லை-நீ என் அருகில் இருந்தமையால்!
இப்போது நிதம் நிதம் உன்னை நினைக்கிறேன்-நீ அருகில் இல்லாததனால்!

நீ தூரத்தில் இருந்தாலும் உன்னை ஒரு துளி கூட மறந்ததில்லை என் இதயம்!
உறங்கினால் சொற்பனத்தில் வருகிறாய்,உறங்காவிட்டால் நினைவில் வதைக்கிறாய்!
காத்திருக்கிறேன் உன்னை விரைவில் அருகில் காண!

நீயில்லா ஒவ்வொரு பொழுதும் நம் நினைவுகளை தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என் அருகில்!
உன் குரல் பேச்சின் சாரல் என் மனதில் குற்றாலமாக, உள்ளத்தில் குளிர்கிறது!

நீ என்னோடு தான் இருக்கின்றாய் நானாக!
தூரம் பெரிதாக தெரியவில்லை அவன் அன்பின் முன்பு!
எத்தனை உறவுகள் என்னை சூழ இருந்தாலும்!
என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ தான் என் அன்பே!

தொலை தூரக் காதலுக்கு தொலைபேசியாய் இருக்கிறது நிலவு!
நானும் நீயும் நிலவினை இரசித்தே உரையாடுகிறோம்!

அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன்!
தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்!
நினைக்கும் போது மட்டும் வருவேனென்று சொல்லிவிட்டு!
நினைவு முழுக்க நீயாகிப் போனாய்!
தொலைதூரத்தில் நாம் இருந்தாலும்,
எம் காதல் நினைவுகள் நம் இதயங்களில் மிக அருகில் இருக்கிறது அன்பே!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: Lakshya on June 29, 2025, 09:47:23 PM
நிழல் நீயா???

நீ என்னை விட்டு சென்ற நாள் முதல் என் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் இருக்கிறது...

நீ என்னோடு இருந்த நாட்கள் வண்ணமாக இருந்த நிலையில், இன்று கருப்பு நிறத்தில் சூழ்ந்திருக்கிறது...

நாம் பேசி சிரித்த நாட்களை மறக்கமுடியாமல் தவிக்கும் போது, உன் சிரிப்பு சத்தம் என் காதில் கேட்க வலியை உணர்ந்தேன் மீண்டும் மீண்டும்!!!

புன்னகையோடு நான் வாழ்ந்தது உனக்கு பிடிக்கவில்லையா? ஏன் விட்டு சென்றாய் அன்பே???

உன் கை பிடித்து நடந்து சென்ற காட்சியை கனவில் கண்டேன், கண் விழித்து பார்த்தேன் அவை கனவாகவே பறந்து சென்றது...

கனவுகள் பலிக்க போவதில்லை...நினைவுகள் மட்டுமே உண்மை...

கைவிடப்பட்ட ஆசைகளோடு பயணிக்க முயற்சித்தேன் முடியவில்லையே...
எப்போதும் உன் அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இதயத்திற்கு வெறும் ஏமாற்றத்தை தந்து சென்றுவிட்டையே இது நியாயமா???

இனி உனக்கென எழுத கவிதை ஒன்றும் இல்லை என் அன்பு காதலனே...கண்ணீருடன் இந்த கவிதையை முடிக்கிறேன்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: Yazhini on June 29, 2025, 10:09:53 PM
காணா தூரம் நீ சென்றும்
கனவுலகில் சுழல்கிறது என்னுலகம்.
கைக்கோர்த்து நாம் சென்ற
ஒவ்வொரு இடமும் உன்னை நினைவுப்படுத்த
தொட்டசினுங்கியைப் போல் மனம் ஒடுங்கிவிடுகிறது.

பலவிதத்தில் என்னை மீட்க முயன்றும்
என் மொத்த சிந்தனையும் ஏனோ
முழுக்க நீயாய் நிரம்பியிருக்கின்றாய்.
யாசகனுக்கு கிடைத்த பொக்கிஷம் போல்
அன்பிற்கு ஏங்கிய எனக்கு - அன்பைத்
தெவிட்ட தெவிட்ட அள்ளிக் கொடுத்து
இறுதியில் காணாமல் சென்றது ஏனோ???

மரணத்திற்கு தான் ஏன் இவ்வளவு
கொடிய எண்ணம்? என்னையும்
உன்னுடன் அழைத்து சென்றிருக்கலாமே...
நீயின்றியிருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
உயிரற்ற உடலாய் திரிகின்றேன்.
நம் அன்பில் உருவான
உயிர்கள் இல்லாமல் இருந்திருந்தால்
மரணமும் நம்மை பிரித்திருக்காது.

கண்கள் காணும் இடமெங்கும் நீயே.
வாய் வார்த்தைகளிலும் நீயே.
உள்ளம் முழுக்க நீயே.
உன்னுடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்
மீளா சுழற்சியில் சிக்கிக் கொண்டேன்.

கடற்கரையில் முதன்முதலில்
தோள்களைப் பற்ற அனுமதிக் கேட்டதும்
கைகள் கோர்த்து பல
இடங்கள் சுற்றி திரிந்ததும்
இனிமையாக வாழ்க்கையைப் பயணித்ததும்
குழந்தைகளோடு மீண்டும் மழலையானதும்
இறுதிமூச்சும் கைகள் பற்றியே பிரிந்ததும்
மீண்டும் மீண்டும் நிலைகுலைய செய்கின்றதே.

நிழல்கள் நிஜமாகின்றன
நிஜங்கள் நிழல்களாகின்றன
புதிரான வாழ்க்கை ஓட்டத்தில்.
நீ சென்ற உலகில் நானில்லை
நான் இருக்கும் உலகில் நீயில்லை.
ஆனால் நினைவுகள் மட்டும்
நம் இருவரின் உலகினையும்
ஒன்றாக கட்டிப்போட்டு நகர்த்துகிறது.

நாம் கண்ட கனவு
காணல் நீராகி விட
காதல் வாழ்க்கை நினைவுகளாகிவிட
உன் சுவடுகள் அனைத்தும்
அழகிய மனசுமைகளாகி விட
உன்னுடன் மீண்டும் சேரும்வரையில்
ஜீவனற்று ஜீவிக்கின்றேன்.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: MaiVizhi on June 29, 2025, 11:07:28 PM

என்னவள் என் இனியவள் 
என் அன்பு மனைவி..
எனக்கென சொந்தம் யாரும் இல்லை என்று
மனம் உருகிய வேலையில்...
பகல் வெளிச்சத்தில்  இருளாய் இருந்த  என்  வாழ்வில்
புன்னகையோடு வெளிச்சம் அளித்தவள் என் மனைவி..

உன் மூச்சு.. உன் பேச்சு.. உன் குறும்பு
 எதை நான்   ரசிக்க?
உன் கூட இருக்க நேரமே போதாமல் இருந்த நாட்கள்..

ஒரு கணம்  என்னை விட்டு  பிரியா உறவே
 இன்று என்னைதிரும்ப இருளில் தள்ளி போனது ஏன்?
ஒரு கணம் உனை பார்க்க முடியயாதா என ஏங்கும் கண்கள்... அன்பே உயிரே...  என் வலி அது கதறி அழுதாலும் முடியாதது...

எந்த ஆறுதலும் என்னை தேற்றாது
அழகியே...

கடவுளுக்கு அவளோ புடிக்குமா உன்னை?
நான்
 ஒரு  முட்டாள் உன் பாசத்துக்கும் உன் அரவணைப்புக்கும் கடவுள் கூட குழந்தை..

என்னுயிரே... இந்த காற்றின் ஒளியில் எங்கயோ உன் குரல்... உன் வாசம்..   அதுதான் என்னை எப்போது இங்க அமர வைப்பது..

நா பேசுவது இந்த காற்றோடு அல்ல என்  அருகில் அமர்ந்திருக்கும் உன் உயிரோடு...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: RajKumar on June 29, 2025, 11:22:39 PM
கடற்கரை குறுமண்ணிலில் கால்தடம்
பதித்தது போல் உன் நினைவுகளை என் இதயத்தில் பதித்தாய்
அந்த கால் தடம் அடுத்த அலையில் அழிவது போல இதயத்தில் இருக்கும் நினைவுகளை கலைந்து செல்கிறாய்
கடல் அலைகள் மணற்பரப்பை தொட்டு செல்வதை போல்
உன் எண்ண அலை என்னை விட்டு செல்லுகிறது
கடல் எழும் அலை ஓசை போல்
என் இதயத்தில் எழும் காதல் ஓசை
உனக்கு கேட்கவில்லையா

அருகில் நீ  இருந்தும் ஏனோ என்னையே தொலைத்தது போல்
ஓர் உணர்வு என்னில்
உன் செயற்கை மெளன மொழி
என்னால் உணர முடியாமல்
விட்டு விடவும் மனம் இல்லாமல்
அகன்று செல்லவும் வழியில்லாமல்
விடை தெரியாத வலியுடன் இருக்கிறேன்
நினைவின் வலியும் பிரிவின் வருத்தமும் நீ தள்ளி அமரும் போது தான் உணர்கிறேன்
நீ எனக்குள் எப்போதும் இருப்பாய்
என தெரிந்தும்
என் மனம் இது வரை உன்னை நினைத்து காத்து இருப்பதாய் அறிந்தும் தள்ளி சென்று காதல் வலியை பரிசு அளிக்கிறாய்

துள்ளி வரும் அலை கரை வந்து சேருவதை போல  நீ என் இதயம் வந்து சேருவது எப்பொழுது
வானம் பார்த்துக் காத்து இருக்கும் பூமியைப் போல் உன் வருகைக்காக காத்திருக்கிறேன்

கலைந்து சென்ற மேகங்கள் ஒன்று சேர்ந்து
 மழைபொழிவது போல
 நாம் எண்ணங்கள் ஒன்று இணைந்து
காதல் மழை செய்வோம்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: Evil on June 30, 2025, 12:14:54 AM
நான் என்னிடமே
கேட்டுக்கொள்ளும் நாட்களும் உண்டு
ஆனால் அவள் இருக்கிறாள் என்று
என் மனம் அடிக்கடி சொல்கிறது
என்னவள் நலமுடன் இருக்கிறாள்

இன்றும் அவளிடமிருந்து
ஒரு கடிதம் என் கையில்
அன்று, அவள் எழுதிய ஒற்றை வார்த்தை
நலம் நலமறிய ஆவல்

அவளின் மடலைப் படித்த அடுத்த நொடி
அவளுக்கு நான் பதில் அனுப்பினேன்
மறுபடியும் அவள் எனக்கு பதில் கடிதம்
அனுப்புவாள் என்ற நம்பிக்கையில்
நான் காத்திருந்த நொடிகள் எல்லாம்
யுகமாகக் கழிந்தன

அவள் எனக்குள் வந்த தருணம்
மறக்க முடியாத தருணம்
அவளைப் பார்க்காமல் கற்பனையில்
அவள் இப்படித்தான் இருப்பாள் என்று
என்னுள்ளே வரைந்த ஓவியமாக

அவளைச் சந்திக்க நேர்ந்த அந்நாள்
நான் வரைந்த ஓவியமே உயிருடன்
வந்ததைப் பார்த்து திகைத்துப் போனேன்

அவளின் ஒற்றைப் பார்வையில் விழுந்தவன்
நான் இன்னும் எழவில்லை
அவளின் நினைவுகளில் இருந்துஎன் மனமோ என்னிடம் இல்லை

அவளோ தன் மனதை என்னிடம் கொடுத்து
என் மனதைப் பறித்துச் சென்றாள் ராட்சசி

அவளின் மனதை நான் பறித்த தருணம்
என்னை ராட்சசன் என்றாள் மென்மையாய்
அதனால் அவளே என் அழகான ராட்சசி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: சாக்ரடீஸ் on June 30, 2025, 12:24:46 AM

என்னைப் பற்றி
எனக்கே புரியவில்லை
என் எண்ணங்கள் எல்லாம்
திசைமாறிப் போனது போல
குழப்பத்தில் தவிக்கிறேன்

எது நிஜம்
எது கனவு
எனதெரியாமல்
உன் நினைவு நாளில்
தனிமையில்
என் மூச்சை
நானே எண்ணுகிறேன்

மௌனமாக பேசுகிறேன்
வெறும் சுவர்களோடும்
வெறும் காற்றோடும்
உன்னை வந்து சேரும்
என்ற நம்பிக்கையில்

உன்னை மறக்க
முயற்சிக்கும் நான்
மாறாக உன் நினைவுகளை
வினாடிக்கு வினாடி
நெஞ்சில் சுமக்கிறேன்

இல்லாத உன் விழிகள்
இன்று ஏனோ
என் உள்ளத்தை
விரித்து விட்டன

இல்லாத உன் புன்னகை
இன்று ஏனோ
என் உள்ளத்தை
அலைகளாய் ஆர்பரித்துவிட்டன

ஒரே ஒரு முறை
உன் முகம் என் கண்முன்
மின்னல் போல்
வந்து சென்றால் போதும்

ஒரே ஒரு நொடி
உன் குரல் என் காதுகளில்
இடி போல் 
வந்து ஒலித்தால் போதும்

இந்த தனிமைக்குள்
துடிக்கும்  என் இதயத்துக்கு
சற்று ஆறுதல் கிடைக்கும்

என் எழுத்துகளில்
நான் உன்னைத் தேடுகிறேன்
என் கிறுக்கல்களில்
உன்னிடம் பேசுகிறேன்
மீண்டும் வரமாட்டாய்
என்று அறிவு சொல்கிறது
ஆனால்
என் மனம் ஏற்க மறுக்கிறது


என்ன செய்வேன் நான் ?


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: SweeTie on June 30, 2025, 05:15:47 PM
   தனிமையில்  வாழும்  எனக்கு
  இனிமை கனவுகள் வருமா ? வருமா
இன்முகம்  காட்ட  ஒரு தேவதை
பக்கத்தில்  அமர்ந்து  கதை  பேசுவாளா?
தொட்டு அனைத்து ஆறுதல் சொல்ல
அவள்  வருவாளா? 

கடல் அலையின்  ஓசையோடு  அவள்
வளையோசை கேட்கவேண்டும் 
பராந்த  வானை  ரசித்தபடி  இதே பெஞ்சில்
அவள் மடியில் தலைவைத்து தூங்கவேண்டும்
அவள் கைவிரல்கள்  என் தலைமுடியை  கோதவேண்டும்
  எதனை கனவுகள் எனக்கு

கோடியில்  வாழும் ஜீவனில்   ஒருத்தி
எனக்கென    பிறந்தவள்  எங்கே ?
கண்களை மூடினாள்  அவள் உருவம்
காற்றாக என்முன்னால்  வருகிறதே
தென்றலாய் வந்து தேனமுதை  சொரிவாளோ?
அத்தான்  என்பாளோ  இல்லை
அன்பே என்பாளோ ??
 
காத்துக்கிடப்பதிலும் தனி இன்பம்
காத்துக்கிடக்கிறேன்   அவள் நினைப்பில்
காலம்  கடக்கிறது காதல்  கனக்கிறது
 கரையை நோக்கி வரும் அலைகள்
கடலில்  மீளவும்  செல்வதுபோல் 
என் கனவுகளும்   காலத்தில் தொலைந்திடுமோ ?
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 376
Post by: Madhurangi on June 30, 2025, 10:22:54 PM
உன் பார்வையில் நிழலாய் நான்

நிழலாய் உனை தொடர்வதினாலேயே..
என் இருப்பையும் பிரசன்னத்தையும் நீ மறந்து பல காலமாயிற்று..

என் முகம் பார்க்கிறாய் .. என் அகத்தின் வலி உனக்கு புரிந்ததே இல்லை ..
என் குரல் கேட்கிறாய் .. என் கருத்துக்களை
நீ கேட்பதே இல்லை..

நம் வாட்ஸப் உரையாடல்கள் மளிகை கடை பட்டியலாகவும் , வங்கி கணக்கு இலக்கங்கள் சேமிக்கும் இடமாகவும் மாறி பல காலமாயிற்று..
உன் இடைவிடாத விசாரிப்புகளை எண்ணி இன்னும் ஏங்குகிறது பேதை மனது..

ஓய்வு நேரத்தில் கூட உன் நித்திய சகவாசம் கைபேசியுடன் தான்..
என் இரசனைகளை இப்பொழுதெல்லாம் நீ உணர்வதே இல்லை.. என் கனவுகளை இப்பொழுதெல்லாம் நீ புரிவதே இல்லை..

என் பேச்சுக்கே மரியாதை இல்லாத போது மௌனத்தை என் தேசிய மொழியாக ஏற்றுகொண்டேன்..
வெறும் சமயலறை பாத்திரமாக, சலவை இயந்திரமாக உன் வீட்டில் மாறி போன என் நிலை கண்டு சலித்து போனேன் ..

என் உணர்வுகளையும் மௌனத்தையும்  புரியாமல் இருக்கும் நீ ஒரு குற்றவாளி என்றால்..
என் உணர்வுகளையும் மௌனத்தையும்  உனக்கு புரிய வைக்க தெரியாமல் தவிக்கும் நானும் ஒரு  குற்றவாளி தான் ..

உரத்த குரலில் நானும் ஒரு நாள் புரட்சி செய்வேன் என் காதலையும் இருப்பையும் உன் பார்வையில் மீண்டும் மீட்டெடுப்பதற்காக ..

கணவனானதும் தன்னுள் இருக்கும் காதலனை தொலைக்கும் சில கணவன்மார்களுக்கு சமர்ப்பணம்

- வலி பேசும் மொழியாக மது -