ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 376
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
[(https://i.postimg.cc/QVGM0XWs/Untitled-700-x-700-px-20250629-124831-0000.jpg)
நிழல் நீயா???
நீ என்னை விட்டு சென்ற நாள் முதல் என் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் இருக்கிறது...
நீ என்னோடு இருந்த நாட்கள் வண்ணமாக இருந்த நிலையில், இன்று கருப்பு நிறத்தில் சூழ்ந்திருக்கிறது...
நாம் பேசி சிரித்த நாட்களை மறக்கமுடியாமல் தவிக்கும் போது, உன் சிரிப்பு சத்தம் என் காதில் கேட்க வலியை உணர்ந்தேன் மீண்டும் மீண்டும்!!!
புன்னகையோடு நான் வாழ்ந்தது உனக்கு பிடிக்கவில்லையா? ஏன் விட்டு சென்றாய் அன்பே???
உன் கை பிடித்து நடந்து சென்ற காட்சியை கனவில் கண்டேன், கண் விழித்து பார்த்தேன் அவை கனவாகவே பறந்து சென்றது...
கனவுகள் பலிக்க போவதில்லை...நினைவுகள் மட்டுமே உண்மை...
கைவிடப்பட்ட ஆசைகளோடு பயணிக்க முயற்சித்தேன் முடியவில்லையே...
எப்போதும் உன் அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இதயத்திற்கு வெறும் ஏமாற்றத்தை தந்து சென்றுவிட்டையே இது நியாயமா???
இனி உனக்கென எழுத கவிதை ஒன்றும் இல்லை என் அன்பு காதலனே...கண்ணீருடன் இந்த கவிதையை முடிக்கிறேன்...