FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 23, 2025, 02:29:33 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: Forum on June 23, 2025, 02:29:33 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 375

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/375.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: Thenmozhi on June 23, 2025, 04:07:18 PM
     சமத்துவம் பேணுவோம்

வேண்டும் வேண்டும் சமத்துவம்- நம் சமூகத்தில்
பெண்ணுக்கும் ஆணுக்கும் சம உரிமைகள்!
வேண்டும் சம அங்கிகாரம்!
வேண்டும் சம அளவு சுதந்திரம்!
சமத்துவம் நிலவ வேண்டும் இந்த பார்தனில் !
சங்கடங்கள் ஓய வேண்டும்!
இந்த சமூகத்தை மாற்றியமைக்க விரும்புகின்றேன்!

கொடுக்கும் அன்பிலும்,பெற்றுகொள்ளும் அன்பிலும்
சமத்துவம் பேணுவோம்!
வாழ்க்கையை சிறப்பாக மாற்றிடுவோம்!

சாதி,மத பேதங்கள் எதற்கு?
உயர்ந்தவர்,தாழ்ந்தவர் பாகுபாடு எதற்கு?
நாம் அனைவரும் சாணக்கிய  மானிடர் என்பதில் சமத்துவமே!
சாதி மத பேதத்தால் வரும் ஆணவ படுகொலைகளை
நீக்கிடுவோம் சமத்துவம் பேணி

ஏழைகள்,பணக்காரன் என்ற பிரிவினை எதற்கு?
நாம் இவ்வுலகிற்கு வரும் போதும் எதுவும் எடுத்து வரவில்லை
நாம் இவ்வுலகை விட்டு போகும் போதும் எடுத்து போவதில்லை
எல்லாரிடமும் அன்பை பேணுவோம் !
சமத்துவத்தை கடைப்பிடிப்போம்! -இவ்வுலகில்
சந்தோசமாக வாழ்வோம்!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: RajKumar on June 23, 2025, 05:42:57 PM
மகன் வளரும் போது
மகிழ்ச்சியையும் துன்பத்தையும்
வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை
அவன் கடந்து வளர்வதை உணர்கிறாள் அம்மா
தன் வியர்வை துளிகளை
அவனின் வளர்ச்சிக்கு
பரிசு அளிக்கிறாள் அம்மா
தாயின் அன்பு மகனுக்கு
ஓர் வழி காட்டி
வாழ்வில் சந்திக்கும் தடைகளை தாண்டி
நம்பிக்கை உறுதியுடன் முன்னேற
விரும்புகிறாள் அம்மா


தாயின் பார்வையில் மகனின் வளர்ச்சி
என் மகன் என் வாழ்க்கையின் ஒளி, அவன் என் சந்தோஷம்.
அவன் என் கண்களில் தெரியும் கனவு, என் இதயத்தின் துடிப்பு.
அவன் வளரும்போது, நான் அவனுடன் சேர்ந்து வளர்கிறேன்.
அவன் என் வாழ்க்கையின் அர்த்தம், என் எதிர்கால நம்பிக்கை.
அவன் என் மகன், நான் அவனைப் பற்றிப் பெருமைப்படுகிறேன்.

மகனின் பார்வையில்
என் அம்மா என் முதல் நண்பன், என் வழிகாட்டி.
அவள் என் வாழ்க்கையின் ஒளி, என் பலம்.
அவள் என் மீது வைத்திருக்கும் அன்பை நான் எப்போதும் போற்றுவேன்.
அவள் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்.
நான் ஒருபோதும் அவளை ஏமாற்ற மாட்டேன், அவள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
அம்மாவின் வியர்வை துளி
மகனின் செல்வம் ஆகிறது
மகனின் வளர்ச்சி
தன் வளர்ச்சி என எண்ணி
மகிழ்ச்சி அடைகிறாள் அம்மா

மகனின் வளர்ச்சியை கண்டு
மகிழ்ச்சி அடைய அம்மாவும் இல்லை
தன் வளர்ச்சிக்கு
 அம்மாவின் தியாகம் என
உணர மகனும் இல்லை

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: Yazhini on June 23, 2025, 06:16:14 PM
பகட்டான ஆடையும் செல்வசெழிப்பும்
பலரின் கனவு - அதற்கு
ஆகூழினைப் பற்றாமல்
உழைப்பினை விதை...

உழைப்பின்றி வரும் செல்வம்
விட்டில் பூச்சியைப் போன்றது.
அதன் வாழ்வு சொற்பமே.
உழைக்காத செல்வம் நிலைக்காது.

இவ்வூழினைக் கடக்க
பிறர் இன்னலைக் களைய
சமத்துவம் பேண
மகத்துவம் காண
உழைப்பின் கனியைப் புசிக்க
பொருட்செல்வம் தேவைதான்.

ஆனால் தீராசெல்வமும் தீர்ந்துவிடும்
பூமியின் சிறு அசைவில்
ஆண் பெண் பேதமுமில்லை
இதில் செல்வந்தன் ஏழை
என்ற பாகுபாடுமில்லை.

சேர்த்த செல்வம் கைவிடினும்
உழைப்பு அதனை மீட்டுத்தரும்
ஆதலால் ஆகூழினைப் பற்றாமல்
உழைப்பினை விதை...
உலக தராசில் உழைப்பே
செல்வம் ...


(ஆகூழ் - அதிர்ஷ்டம் ).
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: சாக்ரடீஸ் on June 23, 2025, 06:19:50 PM
முதலாளி தொழிலாளி உறவு
கணவன் மனைவிக்கு இணையான
நம்பிக்கையும் நேர்மையும் ஊசலாடும்
உணர்வின் பாலம் போல
ஒன்றாயிருத்தல் வேண்டும்.

முதலாளி தொழிலாளி
இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
ஒன்றில் நம்பிக்கை மற்றொன்றில் நியாயம்
இரண்டும் சேர்ந்தால் தான் மதிப்பு பெறும்

முதலாளி தொழிலாளி வேலைக்கு
தகுந்த ஊதியம் தர வேண்டும்
அவனை ஒரு இயந்திரம் போல
இயக்கக் கூடாது.

அதேபோல தொழிலாளி
வாங்குற சம்பளத்துக்கு ஏற்ப
விசுவாசத்தோடும் மனசாட்சியோடும்
வேலை செய்ய வேண்டும்.

இங்கு வேர்வை தான் மூலதனம்
வேர்வை சிந்தாமல் இங்கு எவராலும்
தொழிலாளியாகவோ இல்லை
முதலாளியாகவோ ஆக முடியாது

முதலாளி ஆனவுடன்
"நான் தான் எல்லாம்"ன்னு
ஒரு கர்வம் தலையில் வைக்க கூடாது
தொழிலாளியின்
துன்பம் புரிந்து கொள்ள வேண்டும்
அவர்களுக்கும் குடும்பம் இருக்கும்
என்பதை உணர வேண்டும்

"நான் இல்லாம நீயே இல்ல"ன்னு.
ஒரு தொழிலாளி ஒரு போதும்
இப்படி நினைக்க கூடாது
நியாயமான உரிமைகளையும் கோரிக்கைகளும் கேட்டுப் பெற வேண்டும்.
அதில் அறம் இருக்க வேண்டும் தவிர
திமிர் இருக்கக் கூடாது.

கார்ல் மார்க்ஸ் சொன்னார்
உழைப்பின் மதிப்பை

"உழைப்பாளி தான் உலகம் நகர வைக்கும் சக்தி"ன்னு.
ஆனால்
அந்த சக்தி புத்திசாலித்தனமா
இருக்க வேண்டும்
வெறுப்பாக இல்லாமல் விழிப்புணர்வோடு
இருக்க வேண்டும்

பில்கேட்ஸ் சொன்னார்
பொறுமையின் பாடம்

"மூன்று வருடமாக
ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பொறுமை மக்களிடம் இல்லை.
ஆனால்
நாற்பது வருடமாக வேலைக்கு
செல்லும் பொறுமை அவர்களுக்கு உண்டு"
சிறந்த முதலாளி ஆவதற்கு
பொறுமையாக இருக்க வேண்டும்

பணம் மட்டும் வாழ்க்கை அல்ல
உணர்வும் ஒற்றுமையும் தான் வாழ்க்கை
முதலாளியும் தொழிலாளியும் ஒன்று சேர்ந்தால்,
தொழிலும் வளரும் நாடும் வளரும்

தராசு போன்ற வாழ்க்கை சூழலில்
முதலாளி தொழிலாளி இருவரும் சமமாக
தங்கள் பங்கை தர வேண்டும்.

உழைப்பும் நியாயமும் ஒன்று சேர்ந்தால்
முதலாளி தொழிலாளி உறவு பொன் ஆகும்.


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: Madhurangi on June 23, 2025, 07:04:06 PM
⚖️ இறைவனின் தராசில் ⚖️

இறைவனின் தராசில்
எடை போடும் நேரம்..
நல்லெண்ணமும் நற்செயலுமே
நம் கணக்கில் சேரும்..

சாம்ராட்டும் சாமானியனும் ஒன்றென்பதே
அவர் வேதம்..
பொன் பொருளுக்கும் தூசிக்கும் அவர் மேடையில்
இல்லை பேதம்..

தோற்றமும் தொழிலும் கண்டு
அவர் எடை போடுவதில்லை..
பொன்கிரீடத்திற்கும் பூமாலைக்கும்
அவர் வேற்றுமை பார்பதில்லை..

கபடற்ற உள்ளத்தினரையே
பரமிடத்தில் தேவன் சேர்ப்பதுண்டு..
புகழ் , தன்னலமற்ற உள்ளங்களே
புனித வாசல் நோக்கி செல்வதுண்டு..

பூவுலகின் கோடீஸ்வரர்களுக்கும் தேவன்
சொர்க்க வாசலடைப்பதுண்டு..
பூ விற்கும் அம்மாவின் கருணை கண்டு
தன்னருகில் அடைக்கலம் கொடுப்பதுண்டு..

கருணையும் சமத்துவமுமே நாமறிந்த
கடவுளின் கோலமாகும்..
நெஞ்சார்ந்த நீதியும் நேர்மையுமே நித்திய வாழ்வில்
சொர்க்கத்திற்கான திறவு கோலாகும்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: SweeTie on June 24, 2025, 06:58:13 AM
மண்ணில் பிறக்கையில்  யாவரும்   மனிதர்கள்
பிறந்தபின்  வந்த  வேற்றுமை எதனால் 
செல்வச் செழிப்பில்  வாழ்கிறான் ஒருவன்
பட்டினியின்  பிடியில் சாகிறான் ஒருவன்
ஆண்டவா  எதற்கு இந்த ஓரவஞ்சனை??

கோட்டும்  சூட்டும்  போட்டு
கோபுரத்தில் ஏறி நின்றால்
செல்வந்தன்   என்று ஸலாம் போடும்  சமூகம்
பழைய  கஞ்சியே  கதியென்று   கந்தலோடு
வாழ்பவனை  கண்டாலும்   காண்பதில்லை
போல்  கண்மூடி  நடிக்கும் 

ஆண்டியாக  பிறந்த பிள்ளை அங்கு 
அம்மணமாய்   நிற்கிறது      இங்கோ 
அடுக்குமாடி  ஜன்னலுக்கு   
அழகான திரைச் சீலையிட்டு
பகட்டும்  பதவியுமாய்  பழரச கோப்பையோடு
வேடிக்கை  பார்க்கும் பணக்காரன்     

மனிதரில் மட்டுமா   இக்கொடுமை
 நாடுகளிலும்   இதே நிலைதானே 
செல்வந்த நாடுகளின்   பிரச்சனையை 
அலசி ஆராயும் உலகம்
 ஏன்   ஏழை நாடுகளைபுறக்கணிக்கிறது.
ஏன்  ஏழை குழந்தைகளை  பட்டினிக்கு 
பலியாக்குகிறது

இறைவனின் தராசில்   பணக்காரன் ஏழை
ஆண் பெண்   என்ற பெ பேதங்கள்  இல்லைதான்
மனிதனால் சிருஷ்ட்டிக்கப்பட்ட 
ஏற்ற தாழ்வுகள் என்றுதான் அழியுமோ??
இந்த உலகம் உள்ளவரை அவை
 அழியா சொத்துக்கள்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: VenMaThI on June 24, 2025, 11:31:56 AM


அன்பிற்கும் ஆணவத்திற்கும் இடையில்
ஒரு வாழ்க்கை போராட்டம்
பணத்திற்கும் பாசத்திற்கும் இடையில்
ஒரு வறுமை போராட்டம்...

பணமா பாசமா என்ற போட்டியில்
தற்க்காலிக வெற்றி பணத்திற்கு என்றாலும்
கூனிக்குறுகி கிடை சேரும் காலத்தில்
பணத்தை தள்ளி பாசத்தை தேடும் மனமிதுவே...

உணர்வுகளைத் தூண்டி - மனதிற்கு வலிபல கொடுத்து
மனித உயிரிகளை எடுக்கும்
ஆடம்பரம் நிறைந்த செல்வம் வேண்டுமா..

இல்லை

உணர்வுகளை மதித்து - நம்
கண்ணீரைத் துடைத்து
தோல் கொடுத்து அரவணைக்கும்
அன்பு நிறைந்த உள்ளம் வேண்டுமா...

பணத்தால் வரும் கூட்டம் - ஒரு நாள்
கானல் நீர் போல் மறைந்து போகும்
நம் குணத்தால் வரும் கூட்டமோ என்றுமே
அணை போல் நம்மை காக்கும்...

பணத்தை பார்த்து வரும் அன்பது
பிணத்திற்கு சமமே..
குணத்தை பார்த்து வரும் அன்பது
நம் பிராணம் (உயிர்) போன்றது...

பணம் செல்லாத தொலைவுகள் கூட
நற்குணமும்  உழைப்பும் கூட்டிச்செல்லும்..
எந்த புத்தகமும் புகட்டா அறிவை
இந்த வாழ்க்கை நமக்கு புகட்டும்...

உலகில்
மிகப்பெரிய கொடீஸ்வரன் கூட.
தன் தாய் முன் அதை கர்வமாய் கூறமுடியாது.. ஆம்
அம்மாவிற்கு ஏற்ற ஊதியம் வழங்க
எந்த பிள்ளையும் இன்னும் சம்பாரிக்கவில்லை....

ஆகவே
உதாசினப்படுத்தி உயிரை எடுக்கும்
செல்வந்தர் என்ற கர்வம் களைந்து
அனைவரையும் சரிசமமாய் எண்ணும்
மனிதநேயம் காப்போம்...

நிரந்தரமில்லா நிம்மதி தரும்
பணத்தை நீக்கி
நிலையான நிம்மதி தரும்
குணத்தை பேணுவோம்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: Titus on June 24, 2025, 12:07:44 PM

தராசின் எடைதான் தவறா இருந்தது?
தரையில் வீழ்ந்தது நீதியோ, உண்மையோ?
ஒருவன் சிரிப்புடன் – பொன் மேல் உயர்ந்தான்,
மறுவன் மௌனத்தில் – வாழ்வை
தூய்த்து விட்டான்”

மதிப்பை அளக்கும் நாணயம் தவறினால்,
மனிதத்தை மதிக்கும் உலகம் எங்கே?
கையில் தூய்மை... இதயத்தில் ஒளி,
அவளிடம் இல்லைதான் – பணம் மட்டும்தான்!

தராசின் நீதி எங்கே?
ஒருவன் பொன்னில் நின்றான் – கோழிக்கூட்டம் போல்,
மற்றொவன் கூரையில் – வெறும் தானியமே சுமை.
நீதி என்றால் பணமா இன்று?
அழகு என்றால் ஆடையா மட்டும்?

கால்கள் வேலை பேசும் – கைகளில் காயம்,
ஆனாலும் உள்ளத்தில் சிந்திக்கிறது சாயம்.
நியாயம் எங்கு? நடுவன் தூங்கிறான்,
தராசு கூட இப்போது விற்கப்படுகிறது!

தீங்கு தரும் தராசுகளுக்கு... முடிவுரை

தராசுகள் இன்று உண்மையை அல்ல,
பணத்தின் பாரமே உணர்கிறது.
உழைக்கும் கரங்கள் வாட,
உயரத்தில் நிற்கிறது மாயைச் சிரிப்பு.

நியாயம் மறைந்து நாணயம் மேலெழும்பும் போது,
சமத்துவம் ஒரு ஓவியமாகும் – பேச முடியாத ஓரத்தில்.
ஆனால், உண்மை எப்போதும் ஒளிக்காது…
ஒருநாள் தராசும் திருந்தும்,
மனிதத்தை மதிக்கும் ஒரு காலம் வரும்!

ஒருபக்கம் பொன்கலம் – நாணயங்களின் மலை,
மறுபக்கம் ஒரு தாய் – கையில் தூய்மையின் அலை.
பணம் சொல்கிறது “வாங்கலாம் உலகம்”,
தாய் சிரிக்கிறாள் – “நான் தான் அந்த உலகம்!”

அவளது குரலில் ஆறுதல்,
அவளது வரிகளில் வாழ்வு.
பணம் வீதியில் விலை பேசும்,
தாய் வாசலில் உயிர் கொடுக்கும்!

பணத்தை எடை போடு – அது சத்தமாய் விழும்,
தாயை எடை போடு – உலகமே குனியும்!
தாயின் அன்பு ஒரு தேவே,
அதை வெல்ல முடியாது எந்த நாணயத்தாலும்... ஒருபோதும் இல்லவே!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 375
Post by: Vethanisha on June 24, 2025, 01:30:13 PM
உயர்ந்தவர் என்பவர் யார் !?
பணம் படைத்தவரா !?
பட்டமும் பதவியும் பெற்றவரா! ?
பரந்த வீட்டில் வசிப்பவரா! ?
பகட்டுடன் பன்முகம் காட்டும் செல்வந்தரா !?

உயர்வு தாழ்வு ,
மனிதரிடையே வேற்றுமை
நிர்ணயித்தது எது!?
செய்யும் தொழிலா!?
சேர்த்த செல்வமா !?
இன மத கௌரவமா !?

ஆணுக்கொரு சட்டம்
பெண்ணுக்கொரு  சட்டம்
தீர்மானித்தது எது !?
பால் வேற்றுமையா !?
சுயநல ஆதிக்கமா !?
சமத்துவம் இல்லா நிலைப்பாடா !?

தங்க துகில் இருப்பவருக்கு
தராசில் உயரிய இடமா!?
தன்னலம் இன்றி தன்மானம் காக்கும்
மனிதகுல தங்கங்களின்
 தரம் தான்  தாழ்ந்திடுமா !?

உலகத்தின் தராசில்
அனைவரும் சமமே !
செய்தொழிலில் வேறுபாடு
இருப்பினும்
அதன் அறம் ஒன்றே !
பொருள்நிலை வேறுபட்டாலும்
 உழைப்பும் மரியாதையும் சமமே!

உயரிய தர்மமும்
தெளிந்த மதியும்
பகுத்தாய்யும் அறிவும்
பால் போற்றும் குணமும்
மனிதத்துவம் மதிக்கும் பண்பும்
நிலைப்பெற்று வாழுமெனில்
இங்கு  உயர்ந்தோரும் இல்லை
தாழ்ந்தோரும் இல்லை

அனைவரும் சமமே ❤️