FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on June 16, 2025, 09:06:57 PM
-
முக்காலம் உணர்ந்த ஈசன்
மூன்றெழுத்து மந்திரம்
தந்தை என்ற மூன்றெழுத்து
குடும்பத்தின் தலையெழுத்து
தவறுகளைத் தட்டிக்கேட்பான்
தனக்கென்று பாராமல் தன
குடும்பமே தவமென நினைப்பவன்
அவனே குடும்பத் தலைவன்
காலத்துக்கும் அவன் வேண்டும்
காக்கும் தெய்வமாய் குடும்பத்தின்
குலதெய்வமாக என்றும்
அனைத்து தந்தையர்களுக்கும் இதயம் நிறைந்த
தந்தையர்த்தின வாழ்த்துக்கள்