FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on June 13, 2025, 01:08:15 AM
-
கண்ணீரால் நிரப்பப்படுகிறது
சில அழகிய நினைவுகள்.
துயிலெழுந்ததும் பார்த்த விழிகள்
உறங்க வைத்த கைகள்
அன்பை பொழிந்த சிறு இதயம்
சிரித்து ரசிக்க வைத்த இதழ்கள்
எப்பொழுதும் தேடி ஓடி வந்த கால்கள்
எனக்கே எனக்கான காதல்...
எதிலும் உன் நினைவுகள்
பாதியில் கலைந்த அழகிய கனவுகள்.
மறுபிறவியிலாவது முழுமை அடையாதோ...💔
-
இப்பிறவியிலும் இனி மீதி இருக்கிறது
உங்களுக்கான அழகான வாழ்க்கை
அதற்கு என் பிரார்த்தனைகள்
-
நிறைவேறாத கனவுகளும்
நிறைவேறமுடியா கனவுகளுமே
சில சமயம் நம் வாழ்வின்
அழகிய தருணங்களாக மாறி போகின்றன .
அருமையானக் கவிதை அன்பே ❣️