ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 373
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/373.jpg)
மழையில் உறைந்த நிமிடம்!!!
மழைத்துளிகள் நம் மேனியில் விழ...
இரு இதயங்கள் இசை பாடிய தருணம் அது...
உலகை மறந்து நின்றேன் உன் முன்...
ஒரே குடையின் கீழ் நீயும் நானும்...
உன் பார்வையில் நொடி சிலிர்த்தேன்... நீ பேசாமல் இருக்க, என் இதயம் பதைக்க, உன் விழிகளை பார்த்து ரசித்தேன்...
இருளின் இடையில் நீ ஒளியாய் வந்தாய்...
மழைத்துளிகள் நம்மை ஆசிர்வதித்த நிமிடம் உறைந்து விடாதே...
வார்த்தைகள் தேவையா நீ என் முன் நிற்கையில்... காலம் முழுதும் காத்திருப்பேன் உன் கரம் பிடிக்க...
என் கண்கள் உன்னை படம் பிடித்தது நீ என்னை பார்த்து ரசித்தபோது...
உன் தோளில் சாய ஆசைப்பட்டது உள்ளம்...முடியவில்லையே!!!
மின்னல் அடிக்கும் முன், உன் சிரிப்பில் விழுந்துவிட்டேன் ...
இடி இடிக்கும் சத்தம் கேட்டதும்,நீ என் கையை பிடித்தது ஓர் அழகிய ஓவியம் போல என் மனதில் பதிந்தது...