(https://i.imgur.com/2Zd3OCd.jpeg)
ஒரு மனிதன் சென்னை மருத்துவமனை அறையில் இறக்கும் தருவாயில் தன் மனைவி, மூத்த மகன், மகள், இளைய மகன் இவர்களிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்....!
மூத்த மகனிடம் :
மகனே நீ அண்ணா நகரில் இருக்குற 14 பங்களாக்களை எடுத்துக்கோடா..!
மகளிடம்: மகளே நீ T-நகர்ல இருக்குற 18 கடையும் எடுத்துக்கோம்மா..!..!
இளைய மகனிடம் : சின்னவனே என் செல்லக்குட்டி நீதான்யா..!கிண்டில இருக்குற 26 கம்பெனியும் எடுத்துக்கோடா..!.
மனைவியிடம் : கண்ணே..!உன்னைவிட்டு பிரியபோகிறேன்...!
மயிலபூர்ல இருக்குற 16 அப்பார்ட்மெட்டையும் நீயே தான் எடுத்துக்கோ..!
என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார்...!
இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த நர்ஸ்..! அவரின் மனைவியை பார்த்து நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க
உங்க கணவர் அவரோட எல்லா சொத்தையும் உங்களுக்கு குடுத்துட்டு போயிட்டார்னு சொன்னாங்க..!அதற்கு அவர் மனைவி சொன்னார்..!
கஸ்மாலம் பால் ஊத்துற ஏரியாவ பிரிச்சிக்குடுத்துட்டு பூடுச்சி...!
சொத்தா.....? எங்க கீது... பால் ஊத்துற பேமானிமா இது...