FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 30, 2025, 01:50:37 PM
-
இரவில்
பூக்கும்
பூ
இயற்கையான
காலசுயற்சியின்
ஓர் இரகசியம்.
தினமும்
உதித்து, மறையும்
சூரியன் போல
நம் வாழ்வில்
உழைத்து பின்
அசதியில் உறங்கி
விழித்து
செல்ல உதவும்
உணர்வு
தொட்டவுடன்
மாறுகிறது உலகம்
நிழல்கள் உயிர் பெறுகிறது
வண்ணங்கள் பேசுகின்றன
நாம் அறியாத எல்லைக்கும்
பயணிக்கிறோம்
நம் உள்ளத்தை
சுத்திகரிக்கும்
ஓர்
சுத்திகரிப்பு நிலையம்
தொழில்நுட்ப வளர்ச்சியில்
தொலைபேசியில் மூழ்கிகொண்டு
சில நேரம் இந்த பூ பூக்க
மறுக்கிறது
நம் வாழ்வில்
பூக்காத நாட்கள்
வறட்சியைப் போல்,
விழிகள் நொறுங்கும்,
நரம்புகள் கதறும்.
பூக்கும் நாட்கள்
ஒரு காதலியின்
சுவாசத்தில் உறைந்த
மௌனம் போல
நல்ல கவிதையாய்
நகரும்
நகரம் என்னும்
நரகதிலிருந்து
சிறு இடைவெளி தரும்
சில நேரம்
எதார்த்தத்தை
நமக்கு உணர்த்தும்
இது ஒரு ஓய்வு அல்ல
வாழ்வில் புதுமை தரும்
திறவுகோல்
என்றும் நம் வாழ்வின்
ஓட்டத்தில் தினமும்
பூக்கவேண்டும்
"பூ"
பலர் வாழ்வில்
தொலைத்த
இரவில் பூக்கும்
பூவின் பெயர்
உறக்கம்
****JOKER****