FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on May 27, 2025, 06:15:07 PM
-
அம்மா – ஒரு அதிசயம் !
அம்மாவைப் பற்றி வெறுப்பான
வார்த்தைகளில் சிலர் பேசுகின்றனர்,
எனக்கொரு கேள்வி எழுகிறது,
"அப்படி எப்படி பேச முடிகிறது?"
"எனக்குத் தேவைப்பட்ட வேளையில்
அவள் எனக்கு இல்லை," என்கிறார்கள்.
துன்பம் உண்மைதான், புரிகிறது,
ஆனாலும்...
பத்து மாதங்கள் பசிக்காமல்
நம் உயிரைக் காத்தவள் அவள்,
தெரிந்தோ தெரியாமலோ
நம் முதல் உணவாய் இருந்தவள்.
வீசிய துயரங்கள் நிஜம்,
ஆனாலும் மறந்துவிடலாமா
நம் ஆரம்பம் அவளோடு தான்,
அவள் இல்லாமல் நாம் இல்லை.
வீட்டில் வரவேற்பில்லாத நேரங்களில் கூட
உடம்பில் ஒரு இடம் கொடுத்தவள்,
நம் பசி, நம் மூச்சு,
நம் துடிப்பை சுமந்தவள்.
பாசம் இல்லையென்றாலும்,
பத்து மாத பிணைப்பு உண்மைதான்.
அதற்கான மரியாதை...
எப்போதும் மனத்தில் இருக்க வேண்டும்.
அம்மா
ஒரு அற்புதம்,
ஒரு அதிசயம்,
ஒரு காரணமில்லாத காதல்.
அம்மா மறந்தாலும்
நாம் இல்லையென்கிறதா?
-
அம்மா
அவள் வாழ்வில்
நிறமில்லா விண்மீன்கள்
கண்டாலும்
நம் வாழ்வில்
வானவில் போல
வண்ணங்கள் நிறைந்த
வாழ்வு அமைய
பிரார்த்திப்பவள்
அம்மா என்றும் அம்மா தான்
நல்ல பதிவு மச்சி :)
****JOKER***