FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 26, 2025, 07:28:31 PM

Title: நண்பா !
Post by: joker on May 26, 2025, 07:28:31 PM
அரட்டை அரங்கத்தில் கிடைத்த நட்பு
ஹாய் ,வணக்கம், எப்படி இருக்கீங்க
இதை கடந்து பெரிதாய் எதுவும்
பேசியதாக நினைவில்லை

ஏனோ பரஸ்பரம்
மரியாதை மனதில்
இடம்பிடித்தது
பெயர் கேட்கவில்லை
நாமே வைத்துக்கொண்டோம்
பரஸ்பரம் ஓர் பெயர்
புகைப்படம் கேட்கவில்லை
நாமே கொடுத்துக்கொண்டோம்
நம் நட்பிற்கு ஓர்
உருவம்

சிறுக சிறுக பேச்சு
தொடர்ந்தது பரஸ்பரம்
பிடித்தது பிடிக்காதது என
அவரவர் எண்ணங்களும் தொடர
பேச்சுக்கள் எல்லையின்றி
ஓடிக்கொண்டிருக்கும் நதி போல
தொடர்ந்தது

தேக்கி வைத்திருந்து
அணையில் இருந்து
வெளியேறும் நீர் போல
ரகசியங்கள்
வெளிவந்தன

ரகசியங்கள்
பரிமாறப்பட்டன
இதயங்களுக்கு இடையில் மட்டும்
அன்றும் இன்றும் என்றும்
அவை ரகசியங்களாகவே
காக்கப்படும்

சிலை போல இருந்த வாழ்வில்
வந்தாய் நீ உளி கொண்டு
இருளாய் இருந்த வாழ்வில்
வந்தாய் நீ ஒளி கொண்டு
மெல்ல செதுக்கினாய்
தேவை படும் நேரம்
நிழலாகவும் நீ நின்றாய்

நிழலுக்கும்
குடை பிடிக்கும்
நட்பு நம்முடையது

நம் நட்பின்
துவக்கம்
நாம் விரும்பியதில்லை
நம் நட்பின் முடிவு என்றும்
ஏதுமில்லை

நண்பா
அவர் அவர் வழித்தடத்தில்
இறக்கி விடும் பேருந்தை
போல தான் சிலர்
வாழ்க்கையில்

வாழ்க்கையில்
சிறு மாற்றத்தை
ஏற்படுத்தி
அவர் அவர் திசை நோக்கி
பயணிப்பர்

இருந்தாலும்
நம் நட்பு
உயிர் உள்ளவரை பூக்கும்

தாற்காலிகம்
என தோன்றினாலும்
நல்ல உறவுகளின்
சுவாசம் அது
எப்பொழுதும்
வாழ்ந்துகொண்டே தான்
இருக்கும்



****JOKER****
Title: Re: நண்பா !
Post by: Asthika on May 27, 2025, 05:50:35 AM
தாற்காலிகம்
என தோன்றினாலும்
நல்ல உறவுகளின்
சுவாசம் அது
எப்பொழுதும்
வாழ்ந்துகொண்டே தான்
இருக்கும்

Nice lines dudeeee 💯