FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on May 26, 2025, 04:03:45 AM
-
மௌனமாக விருப்பம் சொல்வது,
மனதார நேசம் கொடுப்பது,
மொழியின்றி புரிந்துகொள்வது,
விலங்குகளின் அன்பின் மகத்துவம்!
நாயின் வால் ஆட்டத்தில் நெஞ்சம் தெரியும்,
பூனையின் ஒட்டலில் பாசம் உரையும்,
பறவையின் கூவலில் எதிர்பார்ப்பு,
அவை சொல்வது, “நீ என் உலகம்!”
விலங்குகள் மனம் தூய்மையானது,
வஞ்சகம் இல்லாத அன்பின் சாயல்,
அன்புக்காக உயிரும் தரும்,
அவை மனிதனுக்கு உந்தும் வாழ்வின் பாடம்.
அவனோ ஒரு மனிதன், அவனோ ஒரு நாய்,
மௌனத்தில் பேசும் இருவரின் பாசம் நாய்!
வாசலில் காத்திருக்கும் ஒரு விழி,
வருகிறான் எனும் நம்பிக்கையின் ஒளி!
பசிக்கும்போது உணவைப் பகிர்ந்தவன்,
படுப்பதற்கு அருகில் இடம் கொடுத்தவன்,
மௌன அன்பால் நெஞ்சை கவர்ந்தவன்,
மனிதனின் தோழனாய் வாழ்ந்தவன்.
விலங்கு சற்றே தலை சாய்த்தால்,
மனிதன் மனம் மகிழ்ந்துவிடும்,
மனிதன் ஒரு வார்த்தை சொன்னால்,
விலங்கு வாலாட்டி புன்னகைக்கும்!
பாசத்தின் எல்லை என்றுதான்?
இருவருக்கும் இதயம் ஒருதான்!
மொழி வேறு என்றாலும் என்ன?
அன்பு புரிந்துகொள்ளும் கண்களே சொல்!
(https://i.ibb.co/h1WB6WTm/images-10.jpg) (https://ibb.co/93TbDTdr)
-
பாசத்தின் ஊடாக
ஞானம் கொள்ள படைத்தவன்
புரிகின்ற சூழ்ச்சி என்ன...
Intha varigal nyabagam varuthu anbee ❤️
-
b]மொழி ,இனம் , ஜாதி , நிறம் வேற்றுமைகள் இல்லா அன்பு
விலங்குகளிடம் கிடைக்கும்
சேமித்து வைத்திருக்கும் அன்பில் கொஞ்சம்
விலங்குகளுக்கும் கொடுப்போம்
அன்பாய் இருப்போம்
நல்ல பதிவு [/b][/color]
-
நேரத்திற்கு ஏற்ப நிறம் மாறும்
மனிதர்களுக்கு மத்தியில் என்றும்
தரம் குறையாத வைரம் என்றும் நீ தானே