ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 372
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/372.jpg)
மணலில் சிந்திய சிரிப்புகள்!!!
குட்டி குட்டி காலடிகள்,
ஓடி திரிந்த நாட்கள்...
மண்ணுக்குள் பதிந்த பாதங்கள்,ஓடி ஒளிந்தோம் மரக்கன்று பின்...
வட்டமாய் நின்று கைப்பிடித்து வளர்ந்த நட்பு, வானத்திலே மழை வர சொல்லி ஆடிய நாட்கள்....
பூக்கள் போல சிரித்த முகங்கள்,பூமியின் மேல் பதிய வைத்த கதைகள்....
மண்ணில் விழுந்தபோது, கைதட்டி சிரித்தோம்... மறந்துவிட்டோம் "வலி" என்னும் வார்த்தையை...
இன்று வாழ்கையில் கோடி பொருள்,
அன்று ஒரு பந்து போதும் முகத்தில் சிரிப்பை காண...
சுண்ணாம்பு சுவரில் கை ரேகைகளும் கவிதை தான்...
தரையில் வரைந்த ஒரு வட்டத்தில்,
தரணியே நம் விளையாட்டு மைதானம்!
"வா விளையாடலாம்"!!! என்ற சொல் வாழ்க்கையின் முதல் கவிதையாக இருந்தது அந்த நாட்களில்...
நாளையை பற்றி மறந்து இன்றை நேசித்த காலங்கள், அதுவே கடைசியோ???ஒரு கல், ஒரு குச்சி அதுவே எங்கள் விளையாட்டின் பொக்கிஷம்...
வாடாத நினைவுகள்...இன்று வரை அழிக்கப்படாத ஓவியம்!!!