FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Asthika on May 24, 2025, 02:50:16 PM

Title: உள்ளே வா 😹
Post by: Asthika on May 24, 2025, 02:50:16 PM
💫மன அமைதி 💫

அலைக்கடல் போல மனம் குழம்பினால்,
அமைதியின் தீபம் துளிர்க்காது வாழ்நாளில்.
சிந்தையின் சூழலை சீரமைத்திடு,
சாந்தமாய் பேசு, சுயத்தை நேசி.

வெளி உலகத்தின் சப்தம் எப்போதும் ஒலிக்கும்,
அதை நீ உள் வரை அனுமதிக்காதே!
தூணாக நின்று, தூய நினைவோடு
தூரம் போகின்ற பயணமாய் வாழ்.

காற்று எப்போதும் வீசும், அலை எப்போதும் வரும்,
ஆனால் உள்ளே அமைதியே நிலைநாட்டு.
தியானம் சிறு வித்தாய் பனித்துளியாக முளைக்கும்,
அதில் தான் பூக்கும் நிம்மதியின் மலர்.

அந்த நிம்மதியின் மலர் உன் வாழ்வை அழகாக்கும் .
கண்டுக்கொள்ளாதே தீயச்சொற்களை ,தீயவற்றை உனக்கு செய்யும் போது...
உன் வாழ்க்கை அழகு வாய்ந்ததாக இருக்கும் உனக்கு சந்தோஷத்தை தரும் வகையில் ❣️❣️❣️❣️
Title: Re: உள்ளே வா 😹
Post by: சாக்ரடீஸ் on May 24, 2025, 04:12:59 PM
shinchan அற்புதமான கவிதை !

Title: Re: உள்ளே வா 😹
Post by: Asthika on May 31, 2025, 07:42:09 AM
Sockyyyy tq 😍😍😍