FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on May 15, 2025, 11:51:38 AM

Title: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
Post by: Vethanisha on May 15, 2025, 11:51:38 AM

அந்த காற்றில் வரும்
 மூங்கில் வாசம்
இந்த நிலத்தில் எழும்
மண்ணின் வாசம்
காலையில்
கண் சிமிட்டிடும் சூரியன்
மாலையில்
மயங்க வைக்கும் சந்திரன்

இரவின் ராணிகளான
நட்சத்திரங்கள்
விண்வெளியை வியப்பூட்டும்
விறு விறு விண்மீன்கள்

மனதோடு கவிப்பேசும் மலை குன்றுகள்
சாலையோர  பூஞ்சோலை போல் மரக்கன்றுகள்

என அனைத்தும் அனைவருக்கும்
 பொதுவாய் இருப்பின்
அவற்றை படைத்தவன் மட்டும்
எப்படி வேறுபடுவான்

படைத்தவன் ஒருவனே
புரிந்து கொள் மனமே ♥️
Title: Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
Post by: Mr.BeaN on May 15, 2025, 03:47:36 PM
Arumai thozhi💐💐💐👏👏👏


Intha thalaippil nan yaethenum ithil kirukalama?
Title: Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
Post by: Vethanisha on May 15, 2025, 04:44:47 PM
kandipaga  thozha
Title: Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
Post by: சாக்ரடீஸ் on May 15, 2025, 05:58:43 PM
வேதனிஷா மாப்பி கவிதை அருமை !
 
மனம் என்பது உணர்ச்சியால் நம்மை ஒன்றிணைக்க முயற்சி செய்யும் கருணை அன்பு ஒருமைப்பாடு போன்றவற்றை நம்முள் ஏற்படுத்தும். ஆனால் புத்தி மனிதனின் பகுத்தறிவையும் மறைத்து வேற்றுமை காணவே முயற்சி செய்யும் நான் பெரியவன்,நீ சிறியவன் என்றும், நான் என்றும், பிறர் என்றும் பிரிக்கும்.

மனமும் புத்தியும் இணைந்து செயல்படும் வரை படைத்தவன் ஒருவனே என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கும்.
Title: Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
Post by: Yazhini on May 16, 2025, 07:50:02 AM
அழகான வரிகள். ஆழமான கருத்து அன்பே💜💜
Title: Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
Post by: SweeTie on May 16, 2025, 07:36:42 PM
அழகான இயற்கை.   அழகான கவிதை
Title: Re: கிறுக்கல்கள் 8 - ஒருவனே !
Post by: joker on May 17, 2025, 01:40:55 PM
பாரதி போல வார்த்தைகள் சொல்லும்
புதுமை பெண்ணின் வார்த்தைகளில்
உரக்க சொன்னீர்கள்
படைத்தவன் ஒருவனே


வாழ்த்துக்கள்