FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on May 10, 2025, 12:43:50 PM
-
மஞ்சள் பூசிய மாலை வெயிலை
ஒத்ததை போல் ஓர் நிறத்தில்
பனித்துளி தேங்கிய பசும்புல்லின்
வனப்பினை ஒத்த உருவத்தில்
புலரும் புது பொழுதாய்
விரியும் மலர்விழியும்
திறமை பல கலந்தே
மொழியும் அவள் மொழியும்
சினம் கொண்டு வந்தால்
கனலாய் அனல் வழியும்
மனக்கவலை தீர்க்க
கருணை மழை பொழியும்
அவள் பக்கம் வந்தால்
அகமதுவும் தான் குளிரும்
அவள் நீங்கி சென்றால்
முகமதுவும் தான் வாடும்..
-
அட அட அட டா... 👏👏👏