FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on May 10, 2025, 09:03:57 AM
-
பத்து திங்கள் சுமந்து
பத்தியமும் நீ காத்து
பக்கவாட்டில் படுத்தா
பிள்ளை உடல் நோகுமென
படுக்கையிலும் கஷ்டம்
இருக்கையிலும் கஷ்டம்
இதையெல்லாம் கடந்து
இடுப்புவலி வரும்வேளை
இன்முகம்காட்டி என்னை ஈன்றாயே!
பசியறிந்து பாலூட்டி சீராட்டி
பக்குவமாய் வளர்த்து
பள்ளி செல்லவைத்ததும் நீதானே
ஈன்றபோது பெற்ற இன்பத்தை
இருமடங்காய் பெற்றாய் நான்
சான்றோன் என கேட்டபோது என்றாயே
திரை கடலோடி திரவியம் தேட
உன்னை பிரிந்து வந்தேனே அம்மா
இன்று என் நினைவால்
உன்னை வருடுகிறேன் தாயே!
அடுத்த பிறவி இருக்குமானால் நீயே
என் தாயாகவேண்டும் அம்மா!!
அனைத்து அன்னையருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்
-
தாயின் அன்பை இவ்வளவு உணர்வுடன் கவிதையாக எழுதிய விதம் மனதை நெகிழச்செய்கிறது...Nice sis❤️
-
மிக அருமையான கவிதை 🌹🌹.
நிச்சயம் தாய்க்கு நிகர் தாய் மட்டுமே.
உன் தாய் உன்னை சிரமத்துடனே பெற்றெடுத்தாள், சிரமத்துடனே வளர்த்தேடுத்தாள் அவளை "சீ" என்று கூட சொல்லிவிடாதே.. ( Al quran )..