FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on May 10, 2025, 05:48:07 AM
-
(https://i.imgur.com/objWLQF.jpeg)
எப்பொழுதுமே இந்த எதிர்பார்ப்பு, Comparision இல்லையென்றால் வாழ்க்கை ஆனந்தமே.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்.
இக்கரை அக்கரை எல்லாமே பசுமைதான் என்ற மனநிலை always better.
நம்மிடம் இருப்பதில் திருப்தி கொண்டு, மேலும் முன்னேற என்ன செய்யலாம் என்று யோசிப்பது ஆக்கபூர்வமான சிந்தனை.
அதைவிட்டு விட்டு, பக்கத்து வீட்டுக்காரன் காரில், நான் பைக்கில் என்று Compare செய்ய ஆரம்பித்தால் மன உளைச்சல்தான். சிந்தனை சீராக இருக்காது. அடுத்த step மனம் தடுமாறும்.
பெற்றோர்கள் செய்யும் இன்னொரு தவறு மற்ற குழந்தைகளோடு நம் குழந்தைகளை Compare செய்து, அவனை பார் எவ்வளவு நன்றாக படிக்கிறான் என்று சொல்லும் போது, உத்வேகத்திற்கு பதிலாக தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு அதிகம்.
Comparision இருந்தால்தான் வாழ்வில் ஒரு வேகம் வரும் என்று சொல்வோரும் உண்டு.
மற்றவரோடு ஒப்பிட்டு கொண்டே இருந்தால், உயர்வு தாழ்வு மனப்பான்மை வரும் என்று அருட்தந்தை சொல்வார்.
சிலர் பணி நிமித்தமாக பல இடங்களுக்கு மாற்றல் உண்டு.போகும் ஊரிற்கு ஏற்றவாறு பரந்த மனதுடன் தங்களை தயார் செய்து கொள்வார்கள்.
எதுவும் நிறைவாக, சந்தோஷமாக இருப்பது நம் கையில்தான்.
எதிர்பார்ப்பும், Comparision
இரண்டுமே leads to Ego, Jealous.
இருப்பதில் முதலில் நிறைவுகொண்டால், இறைவன் அடுத்த நிலைக்கு நம்மை இயல்பாக உயர்த்துவார்.
நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்