FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on May 06, 2025, 09:50:58 PM

Title: வாய்ப்பு எப்போதும் கையிலிருக்காது
Post by: சாக்ரடீஸ் on May 06, 2025, 09:50:58 PM

யோசிக்காமல்

சில நேரங்களில்
மனம் கொதிக்கும்போது
வார்த்தைகள் விழுங்காமல்
வெளியேறுகின்றன

யாராவது கேட்டுப் பார்த்தால்தான்
அது வலி கொடுத்ததா என்று தெரியும்

விழுந்த வார்த்தைகள்
பட்டென்று இதயத்தை பிளக்கும்

நாம் மறந்துவிடுகிறோம்
மனதுக்கும் ஒரு தோல் இருக்கிறது
அதை கீறுவது எளிது

பின்னால் புரிந்து கொள்ளும் போது
மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு
எப்போதும் கையிலிருக்காது


Title: Re: வாய்ப்பு எப்போதும் கையிலிருக்காது
Post by: Vethanisha on May 07, 2025, 10:41:51 AM
அதிக கோபத்திலும்
அதிக துன்பத்திலும்
அதிக மகிழ்ச்சியிலும்
நாம் பேச சிறந்த மொழி

மௌனமே😇
Title: Re: வாய்ப்பு எப்போதும் கையிலிருக்காது
Post by: சாக்ரடீஸ் on May 07, 2025, 12:19:34 PM
ஆமா வேதநிஷா மாப்பி🍀

மௌனம் சொல்லும் உண்மையை,
எந்த சொற்களும் இதுவரை சொல்லவில்லை.
Title: Re: வாய்ப்பு எப்போதும் கையிலிருக்காது
Post by: joker on May 07, 2025, 12:27:14 PM
உதிர்த்த சொல்லுக்கும்
உதிர்ந்த பூவுக்கும் வாழ்வு ஒன்று தான்

உதிர்க்காத  சொல்லுக்கு
அர்த்தங்கள் நூறு

சில நேரம் மௌனம்
காயப்படுத்தும்
சில நேரம்
காயம் ஆற்றும்

சில நேரம்
மௌனமாய் இருப்பதை விட
மன்னிப்பு என்ற ஒற்றை சொல்
போதுமாகிறது

சில நேரம்
மௌனமாய் இருந்திருந்தால்
மன்னிப்பு கேட்க வேண்டிய
அவசியம் இருந்திருக்காது


என்ன சொல்ல வரேன்னா ........ :) :D :)
 :D :D



Title: Re: வாய்ப்பு எப்போதும் கையிலிருக்காது
Post by: சாக்ரடீஸ் on May 07, 2025, 01:17:00 PM
ஜோக்கர் மச்சி
புரிஞ்சு போச்சு 🤣🤣

மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்தில் மன்னிப்பு கேக்கணும்
மௌனமாய் இருக்க வேண்டிய இடத்துல மௌனமா இருக்கணும்.