FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 05, 2025, 03:18:27 PM
-
ஒரு பெண்
தனிமையில்லாமல் இருப்பது
அவளின் இரவுகளில்
நினைவின் கதவுகள்
திறக்கும்போது தான்
ஓர் நீண்ட
பிரகாசமான
சுட்டெரிக்கும்
வெளிச்சத்தை பூமிக்கு
கடத்திய பின்
அயர்ந்த சூரியன்
மீண்டும் தன் வெளிச்சத்தை
நிலவினூடே நமக்கு
குளிர்ச்சியாய் கடத்தி
ரசிக்க வைக்கிறது
அப்படித்தான்
இந்த மனமும்
பகலெல்லாம்
பல பல வேளைகளில்
மூழ்கிருந்தாலும்
இரவில் சில நினைவுகளில்
மூழ்கிவிடுகிறது
ஒவ்வொரு இரவும்
நமக்குள்
அவளின் மௌனத்தின்
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை
கடத்தி விடுகிறது
ஒரு பெண்ணால்
எப்படி இவ்வளவு வேகமாக
தமக்குள் ஒருவனை
அனுமதிக்க முடிகிறது
அதே வேகத்தில்
தூக்கியெறியவும்
முடிகிறது என்றால்
அதன் இடைப்பட்ட காலத்திலும்
அதற்கு பின்னும் அவளின் மன போராட்டங்கள்
அவளே அறிவாள் !
அவள்
நினைவுகளை கொண்டு
ஓர் அரண்மனை
உருவாக்குவாள்
தற்காலிகமானது என தெரிந்தும்
அதை சுற்றி
விட்டில்பூச்சி போல்
சுற்றிக்கொண்டிருப்பாள்
என்றும்
தனிமையான
இரவுகளில்
அவள்
தனிமையிலில்லை
****JOKER****