ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 370
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/370.jpg)
பசுமை புல்வெளி மேல் நம் இருவர் பாதம்,
பக்கத்தில் நீயும் பூவை போலே!!!அரசமரத்தடியில் மறைந்து பேசிய நாட்களை மறக்கமுடியுமா??
வாழை இலை கட்டிய மழை குடை வைத்து என் முன் நடந்து சென்றாய்...உன் கால் தடம் பதித்த மண்ணில் என் கால் தடம் பக்கத்தில் வைத்து ரசித்து பார்த்தேன்...
என் இதயத்தின் இசையாக மாறிய உன் கனிந்த குரல் எனக்கு என்றும் சலிக்கவில்லையே...வயலில் நனையும் ஒவ்வொரு துளியிலும்,உன் முகம் தெரியுதடா!!!
நாம் சென்ற பாதையில் பூவும் நம்மை பார்த்து ரசித்தது...மழையில் நனைந்து நீ முன்னே செல்ல, உன் முகத்தை ரசித்தவாறு நான் உன்னை பின் தொடர்ந்தேன்....
மணல்வெளியில் விழுந்த என் நிழல் கூட வாடுது உன்னை காணாமல்...நெஞ்சுக்குள் நதிபொல் ஓடும் உன் நினைவுகள்,தண்ணீர் குளங்களில் உன் முகம்...
நீ தொட்ட கொடிகளில் மலர் பூப்பது போல, நீ பேசிய வார்த்தை என் மனதில் கனவுகளாக பூத்தன...மழை பெய்யும் முன் அடிக்கும் காற்று போல,உன் வரவு தேடி மனம் புயலாக மாறியதே...
நீ சொல்லாத வார்த்தைகளில்,
ஆயிரம் கவிதை கண்டறிந்த நொடி உன்னை மீண்டும் நேசித்தேன்... மண் வாசனை போல் மலர்ந்த இந்த காதல் விரைவில் சேர ஆசைப்படுகிறதே என் இதயம்...
வழி தெரியாமல் இதயம் போனதே உன்னால்...என் கொலுசின் இசை போல நீ என்னுடன் பயணிக்க விரும்புகிறேன்...மண், காற்று, நிலா, சூரியன் சாட்சியாக நம் காதல் மாறாமல் இருக்கும் என்பதை பதிவிடுகிறேன்...