ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 369
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/369.jpg)
இரு இதயங்கள் இணைந்த ஒரு அழகிய காவியம்...சந்தோஷ உணர்வு , குறும்புகளின் உச்சம், அழகிய உறவு – மனம் முழுதும் முத்தம் கலந்த சேட்டைகள்....
ஒவ்வொரு குறும்புகளும், சந்தோஷ சிரிப்பின் ஓசைகளும் ஒன்று சேர்ந்து பயணித்த வாழ்க்கை...
என்னவென்று சொல்வது இந்த உறவினை பற்றி...
முடிவில்லா பாசம் எங்கள் உறவின் அடையாளம்...நீ கலங்கும்போது நான் கோபமாவேன், ஏன்னோ தெரியவில்லை நீ என் தமக்கை மட்டும் அல்ல தாயும் என்று உணர்த்த தருணமாக இருக்கலாமோ???
உன் சிரிப்பை கண்டு மகிழ்ந்தேன் மனதில்...அவைகள் என் இதயத்தில் ஓவியமாய் பதிந்தன...வாழ்வின் வரமே இறுதி வரை என்னுடன் நீ பயணிக்க விரும்புகிறேன்...
சண்டையில் தான் ஆரம்பித்தோம் எப்பொழுது ஒன்றாக இணைந்தோம், எப்பொழுது இப்படி பயணிக்க ஆரம்பித்தோம் என்றே தெரியாத ஒரு பந்தம்...
இப்போது நீ இல்லை எனில் நான் இல்லை இப்படி ஒரு சூழ்நிலை எப்படி உருவானது? எனக்கே புரியாத ஒரு புதிராக உள்ளது...
பொம்மையில் ஆரம்பித்த ஒரு சண்டை இப்பொழுது சிகை அலங்காரத்தில் தொடங்கி உணவிலிருந்து ஆடைகள் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறதே... வாழ்க்கை முழுதும் இந்த பந்தம் எனக்கு சொந்தம் தானா???
அடடா ஒரு மாற்றம் இரண்டல்ல மூன்று நிழல்கள் ஒன்றாக சேர்ந்த தருணம்...வாடிய நாள் வந்தாலும் விரல் பிடித்து ஆறுதல் சொல்ல இரண்டு கைகள்...
விழுந்த கண்ணீரை புன்னகையாக்கும் மூன்றாம் பாசம்...சின்ன சிரிப்பில் சிலிர்க்கும் நாட்கள்...உயிர் உள்ள வரை பயணிக்க ஆசை...
சகோதரிகள் என்ற ஒரே சொல்லில்
பூத்து மலராக இருக்கும் பல கனவுகள் இனி உங்களோடு...பாசத்தின் மொழி பேச வார்த்தைகள் தேவை தானா???
சிரிப்பின் ஓசை என்றென்றும் தொடர வேண்டும் முடிவில்லாமல்...இவ்வாறே கைகோர்த்து பயணிப்போம் நாம் இவ்வுலகை...❤️💜💛