FTC Forum
தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Jithika on April 19, 2025, 06:41:59 PM
-
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : { ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க } (2)
பெண் : கொள்ளை நிலவடிக்கும்
வெள்ளை ராத்திரியில் கோதை
ராதை நடந்தால்
பெண் : மூங்கில் காட்டில்
ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பெண் குழு : பாடல் வந்த வழி
ஆடை பறந்ததையும் பாவை
மறந்து தொலைந்தாள்
பெண் குழு : நெஞ்சை மூடிக்
கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்
பெண் : நெஞ்சின் ஓசை
ஒடுங்கிவிட்டால் நிழலை
கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து
மயங்கிவிட்டாள்
பெண் : தான் இருக்கின்ற
இடத்தினில் இருதயம்
காணவில்லை எங்கே
எங்கே சொல் சொல்
பெண் : கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா
வா கண்டுபிடிக்க
பெண் குழு : ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க
பெண் : …………………………
பெண் : கண்ணன் ஊதும்
குழல் காற்றில் தூங்கிவிட்டு
காந்தம் போல இழுக்கும்
பெண் : மங்கை வந்தவுடன்
மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
பெண் : காடு இருண்டு விட
கண்கள் சிவந்து விட காதல்
ராதை அலைந்தால்
பெண் : அவனை தேடி அவள்
கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தால்
பெண் : உதடு துடிக்கும் பேச்சு
இல்லை உயிரும் இருக்கு
மூச்சு இல்லை வந்த பாதை
நினைவு இல்லை போகும்
பாதை புரியவில்லை
பெண் : உன் புல்லாங்குழல்
சத்தம் வந்தால் பேதை ராதை
ஜீவன் கொள்வாள் கண்ணா
இங்கே வா வா
பெண் : கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க
பெண் : ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க
பெண் குழு : ……………………….
பெண் : கன்னம் தீண்டியதும்
கண்ணன் என்று அந்த கன்னி
கண்கள் விழித்தாள்
பெண் : கன்னம் தீண்டியது
கண்ணன் அல்ல வெறும்
காற்று என்று திகைத்தாள்
பெண் : கண்கள் மூடிக்கொண்டு
கண்ணன் பேரை சொல்லி
கைகள் நீட்டி அழைத்தாள்
பெண் : காட்டில் தொலைத்துவிட்ட
கண்ணின் நீர் துளியை இங்கு
கண்டு பிடித்தாள்
பெண் : விழியின் சிறகை
வாங்கிக்கொண்டு கிழக்கு
நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை
வாங்கிக்கொண்டு கூவி
கூவி அவள் அழைத்தாள்
பெண் : அவள் குறை உயிர்
கரையும்முன் உடல் மண்ணில்
சரியும்முன் கண்ணா கண்ணா
நீ வா
பெண் : கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க
-
பாடகி : ஜானகி ஐயர்
பாடகா் : பிரசன்னா
இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி
பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
பெண் : ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்
ஆண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
பெண் : கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே
ஓஹோ கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே
ஓஹோ
ஆண் : இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே
ஓஹோ ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே
ஓஹோ
பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே
பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
பெண் : ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன் மனதினை
வதைத்தாயே ஓஹோ
ஆண் : சிறு துளி விழுந்து
நிறைகுடம் ஆனாயே ஓஹோ
அரை கணம் நொடியில் நரை
விழ செய்தாயே ஓஹோ
பெண் : நீ இல்லா நொடி
முதல் உயிர் இல்லா
ஜடத்தைப்போல் ஆவேனே
ஆண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
ஆண் & பெண் : அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
ஆண் : ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
பெண் : காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்