ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 368
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/368..jpg)
இன்னும் சில மணி நேரத்தில்...
கல்யாண புடவை கட்டும் முன், சில நினைவுகள்...
அம்மாவின் குரல் கேட்டு எழுந்தேன்
"மணி அச்சு எந்திரி மா ஐயர் வந்துட்டாரு"...
நாளை மறுவீட்டின் வெளிச்சத்தை சந்திக்க போகிறேன்...
தங்கை சத்தம் போட்டுப் எழுப்பும் காலை
இனிமேல் என் கணவனுடன்...
"பத்திரமா போயிட்டு வா மா "என்று
அப்பா சொன்ன வார்த்தைகள் ஒரு நொடியும்
இனி என் காதில் கேட்கப்போவதில்லை....
சமையலறையில் மனம் எழுப்பும் சமையல்,
அங்கிருந்து நாளை முதல் என் பயணம்...
என் அறை என்று உரிமையுடன் சொல்கிறேன் இன்று...
நாளை முதல் "நான் இருந்த அறை" என்று சொல்லி
நினைத்து பார்த்து கொள்வார்களா?
கண்ணீருடன் கலந்த என் சிரிப்புக்கு பின்னால்
என் கையெழுத்துடன் என்னுடைய வாழ்க்கை மாற்றப்பட உள்ளது...
பழைய நினைவுகளை நெஞ்சில் புதைத்து வைத்துவிட்டு
புதிய உறவுகளுக்கு வருகை தர தயாராகிறேன்...
அப்பாவின் சொல்லாத காதல்,
என் தலையில் கை வைத்த போது நடுக்கத்தை கண்டேன்,
கண்களில் கண்ணீருடன் பார்த்தபோது
மனம் பேசாமல் போனதே....
துணைவருடன் புதிய வாழ்க்கை காத்திருக்கிறது...
இருந்தும் மறக்கமுடியவில்லை என் பிறந்த வீட்டை...
அம்மா சமையலில் செய்த
உப்பு தவறு கூட ருசியாக மாறிய தருணம் இதுவா???
நாளை பிறந்த வீட்டிலிருந்து மறுவீடு செல்ல போவதை நினைத்து
மனதில் ஆயிரம் எண்ணங்கள்...
நக்கல் இல்லாத சிரிப்புடன்
என் அம்மா என்னை பார்த்து சொன்னாள்
"நாளை முதல் நீ ஒருத்தனின் பொண்டாட்டி" என்று...
அப்பாவின் தோள்களில் சாய்ந்த அந்த நிமிடம்
கண்களில் அடங்காத பெருமை, அதை சொல்லவும் முடியவில்லை...
என் குழந்தை பருவங்களை பூட்டி வைக்கிறேன்
என் துணி பெட்டிக்குள்...
எப்போதும் தீட்டிக் கொண்டிருக்கும் தாய் கிழவியே,
நாளை நீ என்னை தேட மாட்டியா?
என்னை மனைவி என்று அழைக்க
ஒரு உயிர் இருந்தாலும்...
என் உயிர் இந்த வீட்டிலேயே தான் இருக்கிறது
நான் என் புகுந்த வீட்டில் இருந்தாலும்...
இந்த இரவோடு,என் குழந்தை பருவத்தை
இங்கேயே விட்டுவிட்டு விடைபெறுகிறேன்
என் அம்மா,அப்பா வின் ஆசை மகளாக...