FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on April 12, 2025, 11:51:19 PM

Title: பொம்மை !
Post by: சாக்ரடீஸ் on April 12, 2025, 11:51:19 PM
பொம்மை

நாம் சிலருக்கு,
சில நேரம்,
பொம்மையாய் மாறுகிறோம்.

அவர்கள் பேசியதும் நாம் பேச வேண்டும்,
அவர்கள் சிரித்ததும் நாம் சிரிக்க வேண்டும்.
அவர்கள் விருப்பம்தான் விதியாகும்,
நம் ஆசைகள் பின்னால் நிழலாகும்.

கண்கள் உண்டு,
ஆனால் கண்ணீர்க்கு உரிமை இல்லை.
இதயம் இருக்கிறது,
ஆனால் உணர்வுக்கு இடமில்லை.

விளையாட்டு முடிந்ததும்,
மறந்துவிடப்படுகிறோம்.
ஒரு பொம்மை போல,
மௌனமாக ஓரத்தில் வைத்துவிடப்படுகிறோம்.

ஆனால் நாம் மனிதர்கள்,
உணர்வுகளும் உள்ளமும் கொண்டவர்கள்.
பொம்மைகள் அல்ல,
பரவசிக்கத் தவறாத பரிசுகள் நாம்.

- சாக்கி