FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: சாக்ரடீஸ் on April 11, 2025, 07:22:28 PM

Title: இயற்கை அறிவு !
Post by: சாக்ரடீஸ் on April 11, 2025, 07:22:28 PM

இயற்கை அறிவு

மனிதனுக்கு பிறந்தபோதே அறிவு இயற்கையாகவே ஏற்படுகிறது. ஆனால் அந்த அறிவை நாம் உணர்வதும், வளர்த்தெடுப்பதும் மிக முக்கியம். பெரும்பாலானோர் அதற்காக நேரம் ஒதுக்குவதில்லை, ஆனால் இயற்கை அறிவு நம் வாழ்வில் வெற்றியின் அடித்தளமாக இருக்கிறது.

இயற்கை அறிவுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக பறவைகளை எடுத்துக்கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து வரும் பறவைகள், கடலுக்கு மேல் மரமோ, கட்டிடமோ இல்லாமல் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பறக்கின்றன. இந்தப் பயணம் எவ்வளவு கடினமானது என்பது பறவைகளுக்குத் தெரியும். எனவே, அவை பயணத்திற்கு முன் தேவையான புரதமும், கொழுப்பும் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டு, தங்கள் உடலை தயாராக்கிக் கொள்கின்றன.

இந்த அறிவு எந்த பள்ளியிலிருந்தோ, ஆசிரியரிடமிருந்தோ கிடைக்கவில்லை. இது இயற்கை அறிவின் ஒரு வியக்கத்தக்க எடுத்துக்காட்டு. அந்த அறிவை நாம் நம்முள் உணர்ந்து, வளர்த்தெடுத்தால் நிச்சயமாக வெற்றி நம்மைத் தேடி வரும்.

-சாக்ரடீஸ்


Title: Re: இயற்கை அறிவு !
Post by: Ishaa on April 11, 2025, 07:52:40 PM
Nice post  Socrates🤓
My Lunch break read a irunthuchu today.

Inthe post read panna enakku biology subject la solli kudukura 'Darwinian evolutionary theory' njabagam vanthichu. '
Survival of the fittest

Ithe ninaichu post panuneengala enru theriyala. But

(https://i.postimg.cc/KvBZw1zd/19731c9d432bfce6e5492e3525ff200f.jpg)

அந்த அறிவை நாம் நம்முள் உணர்ந்து, வளர்த்தெடுத்தால் நிச்சயமாக வெற்றி நம்மைத் தேடி வரும்.

Kandippa mukkiyam. But athu polave some changes accept pani vazhurathum mukkiyam.
Naan innum Nokia 3310 vechu iruntha unga post a vasikka enakku vaaipu kidaichu irukathu la athuvum 30 min gap la.

Title: Re: இயற்கை அறிவு !
Post by: சாக்ரடீஸ் on April 12, 2025, 01:00:44 PM
Ishaa intha post potathuku miga mukkiya karanam oru chinna seithi than athu padicha aprama than intha post poten ... orutharuku epadi ellam arivu vanthu serum

அறிவு என்பது மூன்று தடங்களில் நம்மை வந்து சேரும் இயற்கை அறிவு, அனுபவ அறிவு,நூல் அறிவு

இவற்றில் இருந்து பெரும் அறிவை எது சரி எது தவறு என்று புரிந்து கொள்வதன் மூலம் நாம் பெரும் அறிவே நான்காவது அறிவு அதையே பகுத்தறிவு என்கிறோம்.