FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on March 28, 2025, 03:37:52 PM
-
அரசியல் பேசு!
நல்லாட்சி வந்தால் மட்டுமே
மலர்ந்திடும் நாடு !
சமத்துவம் கண்டால் மட்டுமே
உயர்ந்திடும் வாழ்வு !
மக்களுக்குப் புரிந்தால் மட்டுமே
அது சிறந்த ஓட்டு !
நாளை நம் கையில்
மாற்றம் நிகழ்த்த!
அரசியல் பேசு!
VethaNisha.M
-
100 வெள்ளி காசிற்கே
விலை போகும் மக்கள்
இருக்கும் வரை
குரல் கொடுத்தும் ,
எதிர்த்து நின்றும் ,
முன்னின்று பேசியும்
எப்பயனும் இல்லை
இறுதி வரை!
அரசியல் ஆளுமையை
அச்சடித்த காகிதம்
நிர்ணயிக்கும் வரை
எந்த போராட்டத்திற்கும்
அர்த்தமும் இல்லை!