FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thooriga on March 28, 2025, 01:10:51 PM
-
கண்ணகியாக இருக்காதே
காணாமல் போய்விடுவாய்...
சீதையாய் இருக்காதே
சிதையில் விழுவாய்...
பாஞ்சாலியாக இருக்காதே
துகிலுரியப் படுவாய்...
புயலாய் இரு, புறமுதுகிட்டு ஓடுவர்...
கனலாய் இரு, காலில் விழுவர்...
நீ நீயாக இரு, உலகமே உன்னிடம் திரும்பும் ...