FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 23, 2025, 10:03:32 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: Forum on March 23, 2025, 10:03:32 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 366

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(https://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/366.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: அனோத் on March 24, 2025, 12:22:02 AM
மெழுகுவர்த்தி ஒளியில் நீயும் நானும்.....
மெளன சிரிப்பில் காதல் மழையும்......
சுடர் நெருங்க, நம் நிழல்கள் ஒன்றாக...
சுகமான நினைவுகள் துள்ளி நம்முள் ஆட....

கைகளில் உணரும், அன்பின்  தொடுகை...
கண்களில் தேடும், மௌனத்தின் உரை.....
இதழ்களில்  துடிக்கும், உன்னத முத்தம்....
இவ் - இரவினை அலங்கரிக்க எழுந்த யுத்தம்.......

வந்த வழிகள் திரும்பும்  நினைவாய்.......
வாழும்  தருணம் வீணல்ல என்றாய்.....!
மின்னும் கண்கள் சந்திரவிளக்காய்.......!
விண்ணின் நட்சத்திரம் விழுந்ததுவோ நீயாய்?

நேரம் நகர்ந்தாலும் தீபம் இருட்டுமோ ?
நெஞ்சம் நினைத்தாலும் காதல் குறையுமோ ?
இருட்டில் ஒளியாய் நெஞ்சை நெகிழ்த்தாய்,
இரட்டை உயிராய் என்னுள் கலந்தாய்.......

கண்கள் பேசும் இரவுகளில்.....
காற்று கூட காதல் மொழிகளில்....
தீபம் கருகினும் நினைவு கரையாது .......
நேரம் கடந்தாலும் ஆசை  குறையாது...........

நம் காதலை சுவைக்க சுவையான உணவு.....
எம் காதுகளை உரச   ஒலிதரும் கடலின் அலைகள்...
தம் மகரந்த வாசமாய் நின் கூந்தலின் அசைவுகள்......
இவை எனை ஆட்கொள்ளும் காதலதன்  பரிசுகள்.....

ஒளிதரும் மெழுகில் பொலிவுடனுன் முகம்
அதில் ஒளிந்திருக்கும் வெட்கம்....!
நான் காண்பதே  சொற்பம்.....!

பேரழகே ! உன்னிடத்தில் காதல் சொல்ல சம்மதி ......!

வீசும்  காற்றே கொஞ்சம் நில்லடி...!
அவள் பதிலை விரைந்து உதட்டோடு உரசிக் கேளடி.......!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: Asthika on March 24, 2025, 06:19:49 AM
நட்சத்திரங்கள் சாட்சியாக💫💫

இரவின் மௌனத்தில் நீயும் நானும்,
இதயங்கள் பேசும் இனிய கவனம்;
நட்சத்திரம் கூட நம் மீது விழிக்க,
நிழலாய் எனை தழுவி நிலைக்க.

மந்தக் காற்று மெதுவாய் மோத,
உன் ஒலி என் உள்ளம் ஈர்க்க;
சொற்கள் இல்லா உரையாடலில்,
நம் காதல் என்றும் மலர்க.


இரவின் இனிமைப்பொழுதில்...!

சிலிர்க்கும் காற்றில் உன் வாசம்,
சிந்தும் முத்தம் எனை நனைக்கும்;
காதல் சொற்கள் நெஞ்சை பூரிக்க,
உன் அருகே நான் கனவாய் மாற.

இருள் கூட வெளிச்சம் தர,
உன் அணைப்பு கண்ணீர் துடைக்கும்;
உன் விழியில் உலகம் மறந்து,
இந்த இரவு என்றும் மலரட்டும்.




இரவின் காதல் ராகம் நீயும் நானும் தான்...

இரவின் ஆழத்தில் இன்பம் பெருக,
உன் தளிர் தொடு நெஞ்சை தேட,
சிரித்திடும் நிலவு சாட்சி சொல்ல,
உன் அருகே வாழ்வு முழுமை கொள்ள.

மனதுள் பொங்கும் காதல் கனவு,
உன் தீண்டலால் எழும் இளமை கனவு;
உன் வசந்தம் என் உயிரை கொட்ட,
இந்த இரவு நீ எனக்கே சொந்தம்!


நீயும் நானும் – ஒரு கவிதை,
நேசிப்பதில் வண்ண சித்திரம்;
மௌனத்தில் பேசும் கண்கள்,
மழைப்பொழியும் நினைவுகள....

விழியில் உன் வடிவம் வரையும்,
மனதில் காதல் மலர்ந்து பரவும்;
ஒரு சொல்லில்லாமல் புரியும் மயக்கம்,
உன் அருகே நான் வீழ்ந்த தழுக்கம்.

காதல் கனவுகள்......

காற்றில் சிந்தும் உன் வாசம்,
நெஞ்சை நிரப்பும் ஒரு தேனமுதம்;
உன் பார்வையில் விழும் பொழுதே,
என் உலகம் நிறைவு பெறும் புதுவிதம்.

கையில் கை பற்றினால் போதும்,
நிமிஷங்கள் நூற்றாண்டாய் மாறும்;
உன் பெயரை மௌனத்தில் அழைக்க,
என் இதயம் பாடும் மெளன இசை

என்றும் நீ எனக்கே!!

நாள்கள் போக எதுவும் மாறாது,
உன் நினைவில் என் நெஞ்சம் தேக்காது;
சிறகாய் நீ எனை தூக்கிச் செல்ல,
சந்திரன் கூட நம் மீது பொறாமை கொள்ள.

உன் முத்தத்தில் ஒரு புதிய உலகம்,
உன் இதயத்தில் என் வாழ்வின் புகழ்;
என்றும் நீ – என் கனவின் கவிதை,
மறக்க முடியாத ஒரு இனிய நினைவாய்...
 
, வாழ்க்கை முழுவதும் உன் காதலியாக அல்ல..
  உன் மனைவியாக உன்னுடன் வாழ்ந்து
 தாயாக உன்னை என்மடியில்..
அரவணைப்பேன் என்னவனே !!!❤️❤️❤️

   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: VenMaThI on March 24, 2025, 12:58:28 PM

அழகிய மாலையில்
அந்தி சாயும் வேளையில்
ஆழமான சிந்தனையில்
அவனும் நானும்....

உடனிருந்த நாட்கள்
உள்ளத்தில் உறைந்தது..
எதிர்வரும் நாட்களோ
எண்ணத்தில் மலர்ந்தது...

இருள் பெரிதா இல்லை - இந்த
மௌனம் பெரிதா என்ற
வினாவுக்கான விடையாய் - தன்
வாய் திறந்து மௌனம் களைந்தாள்....

குழந்தை பருவம் முதல்
குமரிப்பருவம் வரை- என்
உடனிருந்த உயிரே
தோள் கொடுத்த தோழனே...

கணவனின் கைப்பற்றி
கண்ணாளன் அவனுடன் - என்
வாழ்க்கையை தொடங்க
வீட்டில் நாள் குறித்து விட்டனரே..

குறும்புகள் பல செய்து - என்னை
கோபமடைய செய்தவனே..
சேட்டைகள் பல செய்து - என்னை
சிரிக்க வைத்தவனே..

தேடிய போதெல்லாம் - தேடலின்
விடையாய் ஆனவனே....
அழும்போதெல்லாம் அரவணைத்து - என்
கண்ணீரை துடைத்தவனே..

துவண்ட போதெல்லாம் - எனக்கு
தோள் கொடுத்த தோழனே..
உன் அன்பு மழையால் என்றும்
என்னை நனைத்த நண்பனே....

போகும் இடத்தில் என் வாழ்வில்...

புயலும்  பூகம்பமும் கூட வரலாம் - நிம்மதியின்றி
துன்பமே என்றும் நிலைத்திருக்கலாம்...
உன்னை மிஞ்சும் ஆணாக கூட அவன் இருக்கலாம் -இடைவிடாத
இன்பம் மழையாய் என்னை நனைக்கலாம்...

எது வந்த போதும் என் நண்பா - உன்னை
 நினைக்காத நாளொன்றும் இருக்காது...
நாம் ஒன்றாய் கழித்த  நினைவுகள்
 என்றும் என் மனதைவிட்டு நீங்காது...

இல்லற வாழ்வில் நீயும் ஒரு நாள்
அடியெடுத்து வைக்கலாம்
இருவரும் அவரவர் வாழ்வில்
ஓடிக்கொண்டு இருக்கலாம்...

ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்
நம் உறவுகளுக்கு நம் நட்பு புரியாமல் போகலாம்
இங்கிருந்த மௌனம் நம்மிடையே
நிலையாய் நிலைத்தும் போகலாம்....

காலம் என்ன சதி செய்தாலும்
நம் பாசம் பொய்யாய் போகாது
என்றும் உன் தோழியாய்
 இன்றுள்ள இதே அன்புடன் - என்
இறுதி மூச்சு வரை இருப்பேன்....
என்றும் என்றென்றும்
உன் தோள் சாயும் தோழியாய்.... நான்

(Marriage invitation lam waste pana maten olunga vandhu seru)❤️❤️


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: MaiVizhi on March 24, 2025, 01:10:57 PM
என்னவனே...
இந்த நாள் இந்த நொடி...
இதுக்காக காத்திருந்த
பல வருடங்கள், பல மாதங்கள்...

உன் குரலை கேட்ட காதுகள்,
உன் விழியை பார்க்க ஏங்கிய கண்கள்...
ஏக்கம் முடியும் நேரம்
என் முன்னே வந்த நிமிடம்...
நீண்ட நேரம் பேசிய உதடுகள், உன் பேச்சை ரசித்த காதுகள்...

 இன்று என் முன்னே, நீ அமர்ந்தாலும்
 என்னால் பேச முடியவில்லை,
உதடுகள் நடுங்குகிறது வார்த்தைகள் திணருகின்றன...
எதோ ஒரு தயக்கம், உன் விழியைப் பார்த்திட உயிரே...
தொலைதூரத்தில் இருந்து
ஆசையாய் பேசிய வார்த்தைகள்,
உன் கைக்களில் என் விரல்கள் படாதா
என்று மனதில் ஒரு ஏக்கம்...

இன்று மிக அருகில் இருந்தும், என்னால் முடியவில்லையே டா...
நிலவொளியில் விண்மீன் வெக்கபடுவது போல,
உன் விழியால் என் பெண்மையின் வெக்கம் நான் அறிந்துகொண்டேன்...

பேச துடிக்கும் உதடுகள் என்னவனே,
உன் அருகில் அமர்ந்து, உன் விழிகளை பார்த்து...
உன்னிடம் சொல்கிறேன்... உயிரே,
உனை பிடிக்க காரணம் தேடி நான் சோர்ந்து விட்டேன்...

உனைப் பார்க்க காத்திருந்து ஓடிய நாட்களை விட
 உன்னை பார்த்த பிறகு...
 என் இமை விட்டு இனிமேல் நீ செல்லும் நேரம் தான்
வலியானது அழகே...
இந்த ஒளியில் தெரியும் உன் முகம்...
ஒரு ஓவியமாய் உருவாக்கும் என் இதயம்...

என்னால் இமைகள் மூட முடியவில்லை...
நிலவே, சற்று நேரம் மறந்து விடு... ஒளியே, 
சற்று நேரம் அமைந்து விடு...
என்னவனின் கைகளை நான் சற்று  உணருகிறேன்.

வெக்கத்தில் மறைந்த நிலா...
புன்னகையில் அணைந்த ஒளி...
தேடினேன் உன் கரங்களே,
ஆனால் திடீரென்று ஒலித்தது ஒலி...

 என்னவளே என்று ஒலிக்கும் உன் குரல்,
ஆனால் அது காதுக்கு மிக அருகில்.
நீயோ, தொலை தூரத்தில்...
அன்பே, கனவில் கூட பார்த்தேன் டா உனை,
ஆனால் ஏங்கிய என் விரல்களை அங்கேயும் நீ எமாற்றி விட்டாய்...
எப்போது வருவாய் என்று கேள்வியுடன்...
தயங்கிய என் உதடுகள் புன்னகைத்து,
தொடங்கும் பயணம்...

🥰😘🥰
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: Dong லீ on March 24, 2025, 06:55:56 PM
எழில்மிகு மாலை
மனமெங்கும் உன் லீலை

நெளி நெளியாய் இந்த அலை
சலனமிடும் இன்ப வேளை

காத்திருந்தேன் உனை காண
எதிர்பார்த்திருந்தேன் மனம் நாண

அருகில் நீ வர வர
அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்

யாருமில்லா இந்த அறையில்
மீதமில்லா எந்தன் அன்பால்

உனை அள்ளிக்கொள்ள துடித்தேன்
உயிர் பிழைத்துக்கொள்ள மடிந்தேன்


அருகில் வேறு யாரோ
அசையாமல் எனையே பார்க்க

தகர்ந்தது என் தனிமை
கரைந்தது என் கணவு

வேறு கைகளில் நீ
என் கண்களில் நீர்

நீ எனதல்ல என்று தெரிந்தாலும்
ஏற்க மறுக்கிறேன் அன்பே

விதி செய்த விளையாட்டு
ஏதுமற்றவனாய் நிற்கின்றேன்

இந்த பாழாய்ப்போன பணம்
என்னிடமும் இருந்திருந்தால்
எனை வந்து சேர்ந்திருப்பாய் அன்பே
என் கோழி அறுபத்தி ஐந்தே

இப்படிக்கு
பக்கத்துக்கு பிலேட் சிக்கனை
வேடிக்கை பார்த்து பசி ஆறுவோர் சங்கம்
 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: Titus on March 24, 2025, 07:03:45 PM
.   உன் இதயத்தின் உள்ளே நான் நுழையும்போது, 
என் உயிரின் கவனங்கள் எல்லாம் உன்னோடு சேர்கின்றன. 
உன் ஒவ்வொரு சிரிப்பும், என் மனதை ஆட்டுகிறது, 
என் உலகம் உன் பார்வையில் புதியதாக தோன்றுகிறது.

நிறைவான பூக்களில் என் கீதங்கள் பேசும், 
உன் கைகளை பிடிக்க என் மனம் பலவீனமாக இருக்கின்றது. 
காலங்கள் கடந்து, நமதோர் காதல் நிலைக்க, 
பூமி நின்றும் வானில் நீ நிறைந்து போவது போல.

ஒரு பார்வையில் வாழும் என் காலம், 
உன் நினைவுகள் என் உடலை சுமக்கின்றன. 
பரபரப்பை விட்டேன், நானும் உன் உடலில் கண்டேன், 
சிறு நிமிடங்களிலும் எந்நாளும் அந்த உன் விரல் தீபம்.

என் காதல் உன்னோடு மழையின் பாசம் போல, 
இவை எப்போதும் தொடரும், நிறைவில் ஒரு அன்பும். 
என் வாழ்வு உன்னோடு ஒரே ஓசையாக, 
அவை உண்டாக்கும் இசையில் சங்கீதம் போல் திரும்பும்.

உன் உள்ளத்துடன் நான் உயிர் வாழ்ந்தேன், 
காதல் மேல் காதல், இனிமை நிறைந்த நித்தியத்தினால். 
ஒரு காதல் கதை நமக்கு தெரியும், 
உலகம் எத்தனையும் காண்பதாக நினைத்தாலும்.

நீ இல்லாமல் நான் வாழ்வது சோம்பல், 
உன் அருகில் நான் நிற்கும் என்பது தான் சுதந்திரம். 
காதல் எதுவும் நம்மால் முடியும், 
நீ எனக்கு தொலைவில் இருந்தாலும், என் இதயத்தின் அருகில். 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: Yazhini on March 24, 2025, 07:24:02 PM
என்னவன்

அந்திவான மயக்கத்திலே உன்னிடம் மயங்குகிறேன்.
நீயோ மது கிண்ணத்தில் போதை கொள்கின்றாய்,
நானோ உன் மீசை மயிற்கால்களில் போதை கொள்கின்றேன்.

என்னவனே உன்னோடு இருக்கையில்
பல வருடங்களையும் சில நிமிடங்களில் கடந்து விடுவேன்.

கடலில் அலைப்பாயும் நாவாய் காட்டிலும்,
அதிகமாக என்மீது அலைபாய்கின்றது உன் கண்கள்...
நானோ உன் இமைகள் இமைக்கும் இடைவெளியில்
உன்னை உள்வாங்கிக் கொள்கின்றேன்.

நேராக உன் விழிகளை சந்திக்காமல்
நிலம் காண்கின்றேன்,
என்னையும் அறியாமல் உன்னோடு ஓருயிராகின்றேன்.

ஊடலுடன் கூடிய கூடலும்,
கூடலுடன் சேர்ந்த ஊடலும்
நம் காதலின் அச்சாணி.

விளக்கின் ஒளி என்மீது படர்வதைப் பார்த்து
என்னை நிலவென்கின்றாய்.
என் ஆதவனே ! உன்னால்தானே நான் ஒளிர்கின்றேன்

ஆணை விட பெண் அழகா?
என்னவனே உன் சிரிப்பின் பேரழகில்
சிக்கி சிறைக்கைதியாகின்றேன்.
ஆயுள் கைதியாகிவிட்டேன்.
நீயே என் இனியவன்
நீயே என் பேரழகன்..


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: Madhurangi on March 24, 2025, 08:13:48 PM
உலவிரவில் உன் அருகில்...

ஒற்றை சந்திப்புக்காய்  கடல் தாண்டி வருபவன் நீ..
உன் ஒற்றை சொல் முகம் பார்த்து பேச வருடங்களாய் காத்திருப்பவள் நான் ..
மயக்கும் விழிகள் விரிய மார்க்சியம் பேசுபவன் நீ..
காதல் கவிதை மாத்திரமே ரசிக்கத்தெரிந்த  மக்குப்பெண் நான்..

அன்போடு அரசியலும் பழக்கினாய் நீ..
பொதுநலமோங்கும் பகுத்தறிவும்
பழக்கினாய் நீ.. 
ரோஜாக்களை விட புத்தக பரிமாற்றங்களே எம்முள் அதிகம்..
காதல் சார் ரீல்களை விட சமூக நலம்கூறும் ரீல்களின் பரிமாற்றமே எம்முள் அதிகம்..

பல நாள் கனா கண்ட நாளும் வந்தது..
உன் அருகில் அமர்ந்து  .. மெழுகுதிரி ஒளியில் விழி பார்த்து.. தூர மலைகளின் தரிசனத்தோடு ஒரு இராப்போசனம்..

என்ன உண்டோம் ஞாபகமில்லை..
என்ன பேசினோம்  ஞாபகமில்லை..
உன் அருகாமை தந்த கதகதப்பும்..
மனம் நிறைந்த சிரிப்பொலிகளுமே..
நினைவுகளில் நித்தியமாய்..

என் குறைகள் நீ மறந்தாய்..
காலம் முழுதும் காதல் மட்டும் போதுமென்றாய்..
உனக்கு துணையாவதை விட சுமையாவேனோ என்றோ கலக்கம் என்னுள்..
நீட்டத்துடித்த கரங்களை இழுத்துகொண்டேன்.. என் கனவுகளை கல்லறையில் புதைத்தவாரே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: SuBa on March 25, 2025, 02:23:44 PM
இரண்டு பேருக்கே அமைக்கப்பட்ட மேசையில்
மெளனமாக மெழுகுவர்த்தி ஒளி மின்னுகிறது.
இன்றிரவு பூமியில் நாம் இருவரைத் தவிர
வேறெவரும் தெரியவில்லை.
மெழுகுவர்த்தியின் மென்மையான ஒளியில்
இரவுப் உணவு பகிர்ந்துகொள்வது,
இருவர் மனங்களும் ஒன்றாக இசைவதற்கான அழகிய தருணம்.

இன்றிரவு, நாம் இருவரும் கண்கள் ஒன்றாக பார்த்தபோது,
ஒரு புன்னகை மௌனமாய் உதட்டில் மலர்ந்தது,
உணர்வுகள் அவ்வொரு துளியிலும் திளைத்தன.
அந்த நொடியின் ஓட்டம் நின்றுவிட்டது,
இந்த உணர்வை பகிர்ந்து கொள்ள,
இது ஒரு அற்புதமான இரவு.

"நீ இன்று எவ்வளவு அழகாக இருக்கிறாய்!" என நீ சொன்னாய்,
அந்த கணம், நான் என்னை இளவரசியென உணர்ந்தேன்.
உன் கை என் கையைப் பற்றியபோது,
என்னையே அறியாமல் நான் சிரித்தேன்,
"என்னை ஒருபோதும் விட்டு விடாதே!" என
நீண்டிரவில் உன்னிடம் இரகசியமாய் சொன்னேன்.

காதலுக்கு பணம் தேவையில்லை,
காதல் எந்த முன்பதிவுகளும் செய்யாது,
அதற்கு விடுமுறை நாட்களும் இல்லை.
உன்னுடன் நான் செலவழிக்கும்
இந்த சிறிய நேரத்திற்கும் வார்த்தைகள் போதாது.

நாம் உணவை பகிர்ந்துகொண்டோம்,
நாம் நம்மை பகிர்ந்துகொண்டோம்,
நாம் ரகசியங்களை பகிர்ந்துகொண்டோம்,
எந்த விதமான விமர்சனம் இல்லாமல்.
இதுவே நம் உறுதி மொழியாக ஏற்றுக்கொண்டோம்.

இத்தகைய இரவுகள் பல மலரட்டும்,
நாம் மீண்டும் மீண்டும் காதலிக்கலாம்,
ஏனெனில் உண்மையான காதலுக்கு முடிவு கிடையாது.
நாம் காதலிப்பதால் மட்டுமே காதலைக் கற்றுக்கொள்ள முடியும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 366
Post by: Jithika on March 26, 2025, 07:47:21 PM
🌹 யார் இவன் ?

அன்று ஒரு நாள் சந்தித்தேன்
மாலை பொழுதின் மயக்கத்தில்
ஆழ்கடல் அமைதியின் நடுவில்
தென்றல் என்னை தீண்டிட
நிலவின் ஒளியில் என் அருகில் இவன்

யார் இவன் ?

என் இதயத்திற்கு நெருக்கமானவன்
என் மனதிற்கு மிகவும் பிடித்தமானவன்

மெய்யானவன் !

இடைவிடாமல் அலைபேசியில்
பேசிய நானோ
இன்று மௌனத்தில் உறைந்து இருக்கிறேன்
தொலைதூர செயலியில் சந்தித்த ஒருவனை
இன்று என்னை தொடும்
தூரத்தில் இருக்கின்றான்

யார் இவன் ?
நம்பிக்கையானவன் !

அழகாய் இருக்கிறேன்
என்று என்னிடம் பேசாதவன்
அன்பாய் பேசியதும்
என்னை நேசித்தவன்

ஒற்றை ரோஜா
பூவின் வாசம் பத்தாது
என்று ரோஜா கூட்டத்தின் நடுவில் என்னை அமர வைத்து பார்ப்பவன்

யார் இவன் ?
அழகானவன் !

பகல் முழுவதும்
இவன் நினைவுகளில்
இரவு முழுவதும்
இவன் கனவுகளில்
உள்ளத்தில் கூட வேறு பெண்ணை நினைக்காதவன்
எனக்காக உயிரையும் கூட கொடுப்பவன்

யார் இவன் ?
அன்பானவன் !

என் இருபத்தி ஆறு வயதின்
காத்திருப்பு இவன்
கண்ணாடியில் மட்டும்
முகம் பார்த்த என்னை
இனி அதிகாலையும்
அந்தி மாலையும்
இவன் விழிக்குள்
காணப்போகும் என்னவன்

ஓர் மாயவன் !

என் எதிர்காலமே இவனோடு தான் இனி !🌹