FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jithika on March 22, 2025, 06:48:42 PM
-
நான் இங்கே பதிவிடும் கவிதைகள் அனைத்தும் நான் எழுதியவை அல்ல, நான் ரசித்தவை.
-
🌹அனைத்து இசையும் தோற்றுப்போகும், உந்தன் கால் கொலுசின் சங்கீதத்திற்கு முன்🌹
-
🌹சிந்திய ஒலியின் சிற்றன்ன வாசல், உன் கொலுசே!🌹
-
🌹அவள் பாத கொலுசாய் இருந்து விட துடிக்கிறேன்! அனுதினமும் என்னவள் ஸ்பரிசம் பெற!🌹
-
🌹இங்கு கவலையை மறந்து சிரிப்பவர் சிலர்... கவலையை மறைக்க சிரிப்பவர் பலர்...🌹
-
🌹என் கண்களும் நீ... அதில் தோன்றும் கனவுகளும் நீ... என் இதயமும் நீ... அதில் தோன்றும் எண்ணங்களும் நீ!
கண்ணாடி கதவுகளுக்கு பின், இரு விண் மீன்கள் இங்கும் அங்கும் நீந்திக் கொண்டு, எதையோ தேடுகிறது!🌹
-
🌹மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா🌹
-
🌹தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
எதை கண்டும் அஞ்சாதே
துணிந்து நில்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்🌹
-
🌹உறங்கினால் கனவில் வருகிறாய், உறங்காவிடில் நினைவில் வதைக்கிறாய்! காத்திருக்கிறேன் உன்னை விரைவில் அருகில் காண!
இந்த இடைவெளியை கொஞ்சம் சுருக்கி விடேன்! சுருங்கிய இதயமிரண்டும், சுகமாகி துடிக்கட்டும்!
உன் நினைவுகள் எனக்கு இனிமையான துன்பத்தை தருகிறது!🌹
-
🌹வானவில்லிலும் காணாத
வண்ணம்
என்னவனின்
அழகிய எண்ணம்🌹
-
🌹நித்தம்
ஒரு புத்தம்புது
விடியலாய்
நானும் புதிதாய்
பிறக்கின்றேன்
உன் நினைவு
சாரல்
எனை நனைக்க🌹
-
🌹உன் கண்கள் செய்த மாயம், காயம் ஆனது என் இதயம்!
அவனின் கண்கள் இரண்டும், எப்பொழுதும் மாறாத அன்பின் மெளன மொழிகள்!🌹
-
🌹நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்🌹
-
🌹மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!🌹
-
🌹என் தேடலென்று
எதுவுமில்லை
நீ தொலையாத
வரையில்🌹
-
இழந்ததாகவே இருப்பினும்
ஒரு காலத்தில்
எனக்காகப் படைக்கப்பட்டது ♥️
-
🌹உன்னோடு பேச முடியாத போது தான்
உன் மீது உள்ள அன்பு இன்னும் அதிகரிக்கிறது🌹
-
உறங்கும் போது
🌹கனவிலும்
விடிந்தவுடன்
நினைவிலும்
வாழும் வரை
உயிரிலும் நீயே..🌹
-
🌹காற்றை கண்ட
உடன் நடனமாடும்
மரங்களை போல
அவனை கண்டதும்
என் மனமும்
நடனமாடுகிறது...🌹
-
🌹யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து
நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்🌹
-
🌹உன் வசீகர கண்களால், சுட்டெரிக்கிறாய் என் மனதை!
வாள் வீச்சில் தப்பிய "இதயம்" ஏனோ விழி வீச்சில் வீழ்ந்தது!🌹
-
🌹அகிம்சை ஆயுதங்கள்! உலகின் ஆகச்சிறந்த போதை! இழுத்து துடிக்க விடும் தூண்டில்! கண்கள்தான் காதல்!🌹
-
🌹உன் கால் கொலுசின் ஓசையில், கவிதை படித்தன கடல் அலைகள்!🌹
-
🌹என்னவள் வரவை எனக்கு முன்கூட்டியே உறைக்கும் ரீங்காரம், கால்களை உரசி சிணுங்கும் அவள் பாதக் கொலுசுகள்!🌹
-
🌹நீ அழகானவள் என்று என்னுள் தோன்ற வைத்தது உன் பார்வை🌹
-
🌹குடை பிடித்து எதிர்தவர்களின்
பாதங்களையும் குளிர்வித்து
செல்கிறது மழை🌹
-
இழந்துவிட்டேன் என்பதை விட
தவறவிட்டேன் என்பதே உண்மை😇❤️
-
🌹அடர்ந்த மரங்களிடை செல்லுங்கள்
கிளைகள் நெளித்தாலும்
இலைகள் சிலிர்த்தாலும்
மழை நின்ற பின்னும்
மழை நீரில் குளித்திடலாம்🌹
-
🌹மழையில் குழந்தையின்
காகித கப்பல் அழகு
மழைக்குப்பின் மண்வாசனை
அற்புதமான அழகு🌹
-
🌹கொட்டும் மழையை
நீ கொட்டும் அழகை
ரசிக்க ஒரு யுகம் போதுமா🌹
-
🌹விண்ணில் தோன்றும்
முத்துக்களே மண்ணில்
விழுந்த வித்துக்கலே🌹
-
🌹எட்டாத உயரத்தில் இருப்பதால்தான் என்னவோ எப்பொழுதும் ரசிக்கப்படுகிறது…! (நிலா)🌹
-
🌹மெளனங்கள் கூட அழகிய மொழியாய் மாறிவிடுகிறது, அவள் பேசுகையில்!🌹
-
🌹பகலில் உறங்கி விட்டு இரவில் உலா வரும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வெள்ளை தேவதை… வெள்ளி நிலா!🌹
-
🌹மழையை ரசிப்பதாய்
நினைத்துக் கொள்கிறாய்
நீ உன்னை ரசிப்பதற்காகவே
உருகி வருகிறது மழை🌹
-
🌹நிலவின் மேல் ஒட்டிக்கொண்ட நட்சத்திரம் அவள் மூக்குத்தி!🌹
-
🌹மழையே நான்
நனைக்கிறேன்
உன் சாரலில்
துடிக்கிறேன்
உன் தூரலில்🌹
-
🌹ஏன் வந்தாய்?
ஏன் சென்றாய்?
புரியவில்லை
உன் இன்ப சாரலில்
நனைகையில்🌹
-
🌹நீல வானில் தோன்றும் நிலாவென, அவ்வப்போது வந்து மறைகிறாள்!🌹
-
🌹சிறகில்லாமல் பறக்கிறேன்
கவலை இருந்தும் சிரிக்கிறேன்
உன்னை பார்த்ததால்🌹
-
🌹மழையில் குழந்தையின்
காகித கப்பல் அழகு
மழைக்குப்பின் மண்வாசனை
அற்புதமான அழகு🌹
-
🌹குடை கொண்டு உன்னை
தடுக்க விரும்பாமல் கை
விரித்து தலை உயர்த்தி
உன்னை ரசிக்கிறேன்🌹
-
🌹காணாத போது
கண்களுக்குள்
வாழ்கின்றாய்🌹
-
🌹உன் கண்ணாடி நான்
என் பிம்பம் நீ🌹
-
🌹என் தேடலென்று
எதுவுமில்லை
நீ தொலையாத
வரையில்🌹