FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on February 20, 2025, 07:35:54 PM

Title: அவளும் நானும் !
Post by: joker on February 20, 2025, 07:35:54 PM
(https://i.postimg.cc/QxCWXDS7/img.jpg)
உங்களுக்கு
கிடைக்கமாட்டார் என்று
தெரிந்தும்
எப்போதாவது
யாரையாவது
காதலித்திருக்கிறீர்களா ?

அவர் சொல்வதை
கேட்டிருக்கீர்களா ?

நான் சொல்வதைக் கேட்டு,
என்னைப் புரிந்து கொண்ட,
என்னை அறிந்த அவளைப் பற்றி
தெரிந்துகொள்ள எனக்கு
அதிக நேரம் ஆகவில்லை.

அவளும்
எனது வரம்புகளும்
எங்கள் அன்பின் மையமாக
இருந்தது

அவளுடைய
உடலுக்காக
நான் அவளை ஒருபோதும்
காதலிக்கவில்லை என்பதை
என்னால்
உறுதியளிக்க முடியும்

ஆனால்
அவளை
நேசித்தது
பொய்யல்ல

அவளின்
அப்பாவித்தனமே
நெருங்கி பழகக் காரணம்

அவளின்
ஒவ்வொரு துக்கமும்,
மகிழ்ச்சியும்
என்னையறியாமலேயே
என்னுடையதாகிவிட்டன

ஒவ்வொரு
சூரிய உதயமும்
அவளுக்காகவே பிறந்தது
என்பதை நான் அடிக்கடி
உணர்ந்திருக்கிறேன்

அவள் உடன் இருக்கும் நாள்
மற்ற நாட்களை விட
வித்தியாசமாகின

கிளிகள் கிசுகிசுக்கும்
ஒரு காதல் சூழலில்
நானும் அவளும்

நாங்கள் ஒருவரையொருவர்
கண்களில் பார்க்கும்போது,
​​​​அவள் வெட்கத்தில்
புன்னகையுடன்
முகத்தை தாழ்த்திக் கொள்வாள்

என் மார்பில்
அவள் தலை சாய்ந்த தருணம் போல
நான் இவ்வுலகில் வேறேதும்
விரும்பியதில்லை

எங்கள் சந்திப்பு
ஒளியின் வேகம் போல கடந்தாலும்
அவள் என்னிலிருந்து
பிரிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டாள்

இன்னொரு
பிறவி இருந்தால்
நீ என்னுடன் இருக்க வேண்டும்
அவ்வளவே என் ஆசை

ஆவலுடன் பயணிக்கையில்
சாலையோரம்
பாட்டி மரங்கள் அசைவது
எங்களை பார்த்து
கிசுகிசுப்பதை போல
உணர்ந்தேன்

நாங்கள் அமர்ந்து பேசிய
மரங்களிலிருந்து
விழும் வாடிய இலைகள்
மண்ணுக்கு எங்கள்
காதலின் உண்மைகளை
சொல்வதாய் உணர்கின்றேன்

வாழ்ந்து தீர்த்து
மண்ணில் சாயும்
பழுத்த இலைகளை
போல
காதலின்
நன்மை தீமைகளை
வேறு யாரறிவார் ?



****JOKER****
Title: Re: அவளும் நானும் !
Post by: Thooriga on February 26, 2025, 09:25:57 AM
அவளும் நானும்.. ரொம்ப நல்லா இருக்கு
Title: Re: அவளும் நானும் !
Post by: joker on March 04, 2025, 02:23:43 PM
நகைமுரண் தெறியுமா
ரணமாய்
இருக்கும் என் இதயத்தில்
வலியாகவும் அவ்வலிக்கு
மருந்தாகவும் இருப்பது
அவள் நினைவுகளே

அம்மாவின்
அன்பிற்கு பிறகு
எனக்கு அமைதியை
தந்தது அவள் உடன்
நான் இருந்த நாட்கள்

கடல் அலைகளை போல
வெளியே தெரியாமல்
என் இதயம்
கிசுகிசுக்கும்
ஆயிரம் கதைகளுக்குள்
உன் பெயர் இருக்கும் போது
இழப்பென்பது
அதன்பின்
எதையும் நிரப்பிக்கொள்ளாத
நிரந்தர வெற்றிடம்

அழத்தோன்றும் போது
கவிதை எழுத்துவெதென்பது
உன்னால் மட்டுமே
சாத்தியமாகிறது
எனக்கு

எத்தனை முறை
தழுவி சென்றும்
மீண்டும் கடல் அலைக்காய்
காத்திருக்கும்
கால்கள் போல

இவ்வாழ்வில்
அவளும் நானும்



***JOKER***
Title: Re: அவளும் நானும் !
Post by: joker on March 20, 2025, 07:57:27 PM

தெரியுமா ?

நீ என்
சுவாசமாய்
நீ என்
உயிராய்
நீ என்
அன்பாய்
நீ என்
இதய துடிப்புமாய்
இருக்கிறாய் என

உனக்கு தெரியுமா
உன் மௌனத்தில்
நின்று போகிறது என்
இதயத்துடிப்பென்று

நீ சொல்லாத
வார்த்தைகளில்
எப்போதும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
என்னை

அது வீண் என்று தெரிந்திருந்தும்
நாவல்களின் ஆழம் வரை சென்று
அலசுகிறேன்
உன் மௌனத்திற்கான
ஓர் ஆறுதல் வார்த்தை

உன் கண்களில்
என்றும் எனக்கு தோன்றியது
கனிவு மட்டுமே

நானும் மௌனம்
சாதிக்கிறேன்
நீ இல்லா வேளைகளில்
ஆனால்
சலசலத்துக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்

அவ்வப்போது
கண்களை நிரப்பிக்கொள்கிறேன்
கண்ணீரால்
அது உன் மீது நான் கொண்ட
அன்பின் வெளிப்பாடாய் கொள்க

நீ என்
அன்பின்
அருவி

என்றும்
என் அன்பின்
பொக்கிஷம்

அவளும் நானும்


****JOKER****