FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thooriga on February 20, 2025, 11:19:37 AM

Title: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 20, 2025, 11:19:37 AM
ஒரு மனிதன் கலங்க,
ஒரு வார்த்தை போதுமானது....

ஒரு மனிதன் மகிழ,
ஒரு வார்த்தை போதுமானது....

ஒரு உறவு நொறுங்க,
ஒரு வார்த்தை போதுமானது...

ஒரு காதல் உடைய,
 ஒரு வார்த்தை போதுமானது...

ஒரு காதல் துளிர்க்க,
ஒரு வார்த்தை போதுமானது...

ஒரு வாழ்க்கையை மாற்ற,
ஒரு வார்த்தை போதுமானது....


வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல வாழ்க்கையை நகர்த்தும் சக்கரங்கள்
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 21, 2025, 05:56:38 PM
எல்லாவற்றிற்கும் ஆசை படும் தகுதி உனக்கு உண்டு

ஆனால்

நீ ஆசைப்பட்ட அனைத்திற்கும் உன்னை வந்து அடையும் தகுதி இல்லை

தகுதி உள்ளவை மட்டுமே உன்னோடு நிலைத்து நிற்கும்

ஆகையால் போனதை எண்ணி வருத்த படாதே
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 21, 2025, 06:03:40 PM
கசப்பான உண்மை

நான் வைத்த அன்பிலும் குறை இல்லை....

வைத்த அளவிலும் குறை இல்லை....

இருந்தும் ஏனோ ஏமாற்ற பட்டேன்...

Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 22, 2025, 06:49:29 AM
கவலைகள் யார் தந்தால் என்ன

புன்னகை உன்னிடம் தானே உள்ளது... :)
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 22, 2025, 02:06:36 PM
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்  நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 24, 2025, 11:24:46 AM
யாருக்காகவும் எதற்காகவும் நீ உடைந்து விடாதே...

முடிந்த வரை கண்டு கொள்ளாமல் இருந்து விடு ...

இல்லையேல் அவற்றை விட்டு முற்றிலும் கடந்து விடு ...

உன் அன்பிற்கு உண்மையானவர்கள் ஒரு போதும் உன்னை உடைந்து போக விட மாட்டார்கள் ...
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 24, 2025, 11:27:59 AM
வாழ்க்கை என்றால் எதாவது சாதித்தே  ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை ..

நிம்மதியாக வாழ்வதே இன்று சாதனை தான்..
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 26, 2025, 09:22:41 AM
யாரும் தேடவில்லை என்று உடைத்து எறிகிரேன் என் கைபேசியை,

இருந்தும் கண் சிமிட்டுகிறது..

நானும் இல்லை என்றால் நீயும் ஆனாதை ஆகிவிடுவாய் என்று ...😊
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 26, 2025, 02:57:11 PM
என்னை காய படுத்த எவரேனும் இருக்கிறார்களா என்று தேடிய பொழுது கிடைத்த ஒரே பதில்...

நீ...
.
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 28, 2025, 01:28:40 PM
எவ்வளவு அன்பையும் மறக்க வைக்கும் கோபம்..

எவ்வளவு கோபத்தையும் மறக்க வைக்குமா அன்பு ...??????
[/size][/color]
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on February 28, 2025, 04:00:39 PM
தொடருமா என்றும் தெரியவில்லை
முடிந்துவிட்டதா என்றும் தெரியவில்லை
ஏதோ ஒரு சிறிய உணர்வு மட்டும் உன்னை மறக்க வேண்டாம்
என்று சொல்கிறது என் மனதோரமாக
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 02, 2025, 06:13:56 PM
நான் இருக்கிறேன்

இந்த வார்த்தையின் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்து விடாது

இழந்து விட்டு நிற்பவர்களுகே  புரியும்

இந்த வார்த்தையின் அர்த்தமும் அதில் உள்ள வலியும்...

படித்ததில் பிடித்தது

இந்த வார்த்தையை யாரிடமும் முடிந்த வரை கூறாமல் இருங்கள்..  அப்படி கூறி இருந்தால் தயவு செய்து அதை காப்பாற்ற பாருங்கள் ..
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 03, 2025, 02:58:50 PM
நண்பர்கள் என்று நம்பியவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டு செல்கிறார்கள் ..

யாரோ என்று நினைத்தவர்கள் நம்பிக்கையை எடுத்து செல்கிறார்கள்..

படித்ததில் மிகவும் பிடித்தது
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 04, 2025, 01:02:00 PM
மறக்க முடியாது மூன்று உண்மைகள்

அன்பாய் இருந்தால் ஏமாளி
உண்மையாக இருந்தால் முட்டாள்
நடித்தால் மட்டுமே நல்லவன்

படித்ததில் பிடித்தது
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Ishaa on March 06, 2025, 02:59:13 AM
மௌனம்

சொற்கள் இல்லாத
வார்த்தைகள்
அல்ல
வெளிவராத
கண்ணீர்த் துளிகள்

படித்ததில் பிடித்தது
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 06, 2025, 03:03:34 PM
நம்பிக்கை துரோகம் என்பது நம்பாத ஒருவரிடம் இருந்து கிடைக்காது..

நீ அதிகம் நம்பியவர்களிடம் இருந்து மட்டுமே கிடைக்கிறது.. 

படித்ததில் பிடித்தது
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 06, 2025, 03:06:29 PM
இதயமே கொடுப்பின் முதுகில் தான் குத்துவான் துரோகி

படித்ததில் பிடித்தது
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 11, 2025, 01:43:56 PM
கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்று நம்புகிறோம்

படித்ததில் பிடித்தது
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 18, 2025, 09:18:44 AM
நம்மை சுற்றி இருப்பவர்கள் பலர் பச்சோந்தி தான்...

தங்கள் தேவைக்காக காலையும் பிடிப்பார்கள்..

தேவை முடிந்த பின் நம் கழுத்தையும் நெரிபார்கள்..

படித்ததில் பிடித்தது
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 18, 2025, 09:22:41 AM
கோபத்தில் பேசும் சிலருக்கு ஒரு அரிய குணம் உண்டு

அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள் ..

பிறரது முதுகிலும் குத்த மாட்டார்கள்

படித்ததில் பிடித்தது
Title: Re: படித்ததில் பிடித்தது
Post by: Thooriga on March 28, 2025, 12:46:54 PM
கடலில் கல் எரிவதால் கடலுக்கு வலிப்பதில்லை கல் தான் காணாமல் போகிறது..

விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும் நாம் கடலாக இருப்போம் ..


படித்ததில் பிடித்தது