FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Lakshya on February 19, 2025, 08:53:58 AM
-
❤️கண்கள் பேசும் மொழிகளை நீ அறிவாயா?
ஏக்கத்தோடு பார்த்தால் காதல்...
சோகமாய் பார்த்தால் மனதின் வலி...
பேசாமல் அறியும் மொழி இது...மனதிற்கு பிடித்தவர்கள் மட்டுமே அறியும் பாஷை இது...
கண்ணீரின் கனலில் கதைகள் எத்தனை?
அவை அனைத்தும் உயிர் தீண்டும் கவிதையே!!!
உண்மையின் ஆழத்தை உருக்கமாக காட்டும் கண்கள்,
உதடுகள் பேசும் மொழிகளை கண்கள் பேசும் போது, பேசுவதற்கு வார்த்தைகள் தேவையா?
சிரிப்பில் கலந்த கவலை கண்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?உயிருள்ள பார்வையில் உலகத்தை மறந்தேன்...உன் கண்கள் பேசும் வார்த்தைகளை இதயம் கேட்குமே!!!❤️
-
கண்கள் பேசும் மொழியை இதயத்தால் கேட்கும் கண்மணியே ♥️
உன் கவிதையும் உன் கண்களை போன்று அழகே ♥️
-
Meehoon eh😍@Vethanisha
❤️கண்களில் காதல் கலந்த வெட்கம்...
உதட்டில் சிரிப்பு கலந்த பல கதைகள்...
நெடுதூரம் உன்னுடன் கைப் பிடித்து நடக்க வேண்டும் என்ற ஆசை கனவுகளில் மட்டுமே கண்டு மகிழ்ந்தேன்...
கண்கள் பேசும் மொழிகளை சேவிகள் கேட்பதில்லை , இருந்தும் பேசாமல் இருப்பதில்லை...உன்னைக் காண அடம்பிடிக்கும் மனதை தினமும் சமாளிக்கிறேன் நீ வருவாயென❤️
-
❤️காதல் மொழியின் கவிதை கண்கள் எழுதியதே!உன் பார்வையை பார்த்த நொடியில் மனதின் கதவுகள் திறந்ததே...
உன் ஒரு பார்வை போதுமே உன்னை நேசிக்க...
மீண்டும் மீண்டும் கான மனம் ஏங்குதே...
கண் எதிரில் நீ இல்லை...இருந்தும் நான் வருந்தவில்லை காரணம் கனவுகளில் வாழ்ந்து வருகிறேன் உன்னோடு❤️
-
❤️கண்ணிமைக்கும் கருவிழியே, உன்னைக் மறக்க நினைக்கும் இதயத்திற்கு மருந்து பொடும் விதமாக கண்ணாடி கதவுகளுக்கு பின் இங்கும் அங்கும் விழி தடுமாருவதை உணர்ந்தேன்...
இமைக்க மறக்கும் அளவுக்கும்
இமைக்காமல் பார்க்கும் அளவுக்கும்
அவனை ரசித்தேன் விழி வழியாக❤️
-
❤️ என் கவிதையே உன்னை கான என் கண்கள் என தவம் செய்ததோ???
உன் ஒரு பார்வையில் என் வாழ்க்கையே மாறிவிட்டதே...
சந்தோஷத்தில் மட்டும் இல்லாமல் என் கஷ்டங்களையும், நீராய் பொழிய உதவிய என் கண்களுக்கு சொந்தம் நீ தான் என்பதை நீ அறிவாயா?❤️
-
❤️காதல் வார்த்தையில் மட்டும் பூப்பது அல்ல...பார்வையிலும் பூக்கும் என்பதை அறிந்தேன் உன்னால்...அதே பார்வை வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்று நினைக்க தோன்றுதே❤️
-
🌹இது கனவா, இல்லை நினைவா? என்று கிள்ளிப் பார்த்தேன்; உன் கண்களை பார்த்து நான் உறைந்த நிமிடத்தை!🌹
-
❤️நெருங்கும் முன் விலகி போனாய்... விலகி போயும் கண்ணில் நிற்கிறாய்...
காலத்தின் கட்டாயம் உன்னை பார்க்காமல் பேசாமல் இருக்க வேண்டும் என்று, இருந்தும்
உன் விழிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை... ஏன்?❤️
-
❤️காதலின் வார்த்தைகள் காற்றில் சென்றுவிடும், உன் கண் பேசிய வார்த்தைகள் யாவும் இதயத்தில் நிலைத்து நிற்கும்❤️
-
❤️கருவிழிகள் கொண்ட அழகிய திமிரே...
அழகிய நிலவைப் போன்ற உன் கண்களில் கண்ணீர் வரலாமா???❤️
-
❤️காவியமே... உன் இமை காக்கத் துடிக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை நீ வரப்போவது இல்லை என்று...❤️
-
❤️இதழ் சொல்ல நினைத்ததை மறந்தேன்
அவன் விழி பார்த்த பின்னால்...
கண்ணீர் துடைக்க யாருமில்லா தருணங்களிலும்
நீ இருந்தாயே என் கள்வனே...❤️
-
❤️அன்பே, உன் இதழ் சொல்லாத உண்மைகளை உன் கண்கள் சொல்லுகிறது...
இம்மொழி எனக்கு மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது❤️
-
❤️நீ காயப்படுத்துவது என் இதயத்தை மட்டும் அல்ல, என் கண்களையும் தான்...❤️
-
❤️பார்த்தவை எல்லாம் நினைவில் நிற்பதில்லை என்று நினைத்தேன் ஆனால் உன் விழி பேசிய மொழியை கண்டு வியந்து போனது என் நெஞ்சம்...இதை இன்று வரை என் நினைவில் இருந்து அழிக்க முடியவில்லை❤️
-
❤️அழகிய நிலா போல் இருக்கும் உன் கண்களை கண்டு வியந்தேன் மீண்டும் மீண்டும்... கனவுகள் பல கண்டேன் வாழ்நாள் முழுவதும் உன் கண்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று❤️
-
❤️என் இதயத்திற்கு மட்டுமே புரியும் உன் விழிகளின் மொழிக்கு எல்லையில்லையா என் அன்பே❤️
-
❤️உன் ஒரு பார்வை போதுமே... நான் முழுவதும் உன்னில் கரைய... ஆனால் இது கனவாக மட்டுமே இருக்குமோ என்ற அச்சம் என்னுள் தோன்றுகிறதே!❤️
-
❤️தொலைந்து போனேன் ஒரு விழியில்,
கனவுகளும் அழகான சோகமும் சேர்ந்த நிலையில்…❤️
-
❤️உன் விழியில் பொழுது நிழலடுதே,
அதில் என் கனவுகளும் உறங்க மறக்குதே❤️
-
❤️ சில நேரங்களில் கவிதையைப் போல் பேசும்,
சில நேரங்களில் கண்ணீராக பேசும் உனக்கு என்ன செய்வேன் நான்?❤️
-
❤️நீ அருகில் இல்லை என்றாலும்,
என் கண்ணீர் சுமக்கிறது உன் நினைவுகளை❤️
-
❤️கண்களுக்கே தெரியாமல்,
கரைந்துபோன எங்கள் கனவுகளின் நிழலிது❤️
-
❤️அன்பே, உன் கண்கள்...
அழகான ஒரு கவிதையைப் போல்,
என்னுள் எழுந்த காதல் வரிகள் உன் பெயர் தானா?❤️
-
❤️காதல் சொல்லாமலே சொல்வதுதான் உன் கண்களின் அழகான வழக்கம்...❤️
-
❤️ஒரு பார்வையில் ஆயிரம் வார்த்தைகள்,
அவையும் காதலாய் காதில் கேட்கும்❤️
-
❤️ அவன் பேசவே வேண்டாம், அவன் பார்வையே என் கவிதையின் முதல் எழுத்து❤️
-
❤️கனவுகளுக்கு வருகை தரும் வழி, உன் விழி பார்வையில் மட்டுமே...உன் கண்கள் என்னை முழுமையாக வாசிக்கின்றது❤️
-
❤️மீண்டும் கண்கள் சந்திக்குமா?
மௌனச் சுவர் இடிக்குமா...பதில் சொல்லடி கண்மணி❤️
-
❤️காதல் சொற்களை உன் விழியில் தேடிக் கண்டுபிடித்தேன்...மௌனத்தில் பேச தெரிந்த கவிதையே உன்னை நான் மனதில் சுமபென் என்றென்றும்❤️
-
❤️உன் விழிகளில் கவிதை பிறக்குது,
வார்த்தைகள் இல்லாமலே அர்த்தங்கள் கிடைக்குது❤️
-
❤️கண்களின் காதலனே…
நீ அருகில் இல்லை, ஆனாலும் என் விழிகளில் தினமும் உன் உருவம்...❤️
-
❤️ என் கனவுகள் வாழும் சிறிய உலகம், உன் கண்கள்...உணர்வுகளின் கடலில் அலைபாயும் பார்வை❤️
-
❤️காதல் கண்டேன் உன் விழியிலே,
நீ சிரித்த நொடியிலே நான்
என் உயிரையே மறந்தேன்❤️
-
❤️விழியின் வழியே வானம் பேசியது, உன் பார்வை ஒன்றில் என் கவிதை பிறந்ததே❤️
-
❤️சிரிப்பில் ஒளி வீசும் தருணத்தில்,
சிறகடிக்கும் உன் கண்கள் என் கனவுகளாக மாறிய தருணம் இதுவே❤️
-
❤️மெல்ல மெல்ல மறைந்து போனாய்,
மனம் தெரியாமல் தொலைந்து போனாய்...
நீ பேசாத மௌனத்தின் இடையில்,
நான் சொல்லாத வார்த்தைகள் சிதறி விழுந்தன❤️
-
❤️காயப்படுத்தினாய், பேச ஆசையாக எண்ணி வரும்போது... பழகிக்கொள்கிறேன்...❤️
-
❤️சொல்லாமலே காதலைச் சொல்லும்
இமைகளுக்குள்ளே ஒரு உலகம்❤️
-
❤️நிழலாக நினைவுகள் பின்னிக் கொள்கின்றன,
நெஞ்சில் ஒளிந்த ஆசைகள் ஓவியம் ஆகின்றன❤️
-
❤️இமைகள் எனும் இருள் வாசல் திறந்ததும்,
உலகம் ஒளி பாயும் கனவின் வெளிச்சம்...
இமைகள் சிமிட்டும் ஒரு கணம்,
காதலின் மொழி பேசும் அந்த இசை நிமிடம்❤️