FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on February 17, 2025, 02:51:11 PM
-
ஆனந்தம் சூடி கொண்டேன்
மருத்துவர் சொன்னதும்
வெட்கம் சூடி கொண்டேன்
என் கணவரிடம் சொல்ல
சொன்னேன் அவரிடம்
நான் தாய்மை அடைந்தேன் என
என் காதலை
சொன்ன நேரம் போல்
ஆனந்தம் அடைந்தார்
தொடங்கியது எங்கள்
பிள்ளைகளுக்கான
எங்கள் தேடல்
பெயர் தேர்வு முதல்
குழந்தையை சேர்க்கும்
பள்ளி தேர்வு வரை ஆயிற்று
குழந்தையை
மார்பில் போட்டு
தாலாட்ட
கற்று கொண்டேன்
நூறு பாடல்
அக்கறையாய்
மருத்துவரிடம் கூட்டி சென்றார்
மாதமொருமுரை.
குழந்தையின்
இதய துடிப்பு
கேட்டேன்
அசைவை
காண்பித்தார்கள்
பத்து மாதம் கடந்தது
வெளியுலகு வந்து
தன்தந்தையை காணும்
ஆவலில் எட்டி உதைத்தான்
என் வயிற்றில்
ஆனந்த வலியில்
மருத்துவமனை சென்றேன்
அருகில் அன்பாய்
என் கை கோர்த்து
என் தலை கோதி
என் கணவர்
பிரசவ அறையில் நான் துடிக்க -
வெளியில் நின்று என் கணவர் துடிக்க
சொர்க்கமும்
நரகமும் ஒரு சேர
அனுபவித்தோமே ..
ஆண் பிள்ளை என்றாலும்
பெண் பிள்ளை என்றாலும்
கள்ளி பாலுக்கு இடம் இல்லை
என்றிருந்தோம்
கடைசியில் கள்ளி பால் எங்களுக்கு தந்து
சென்றாயே பிரசவ அறையை சவ அறையாக்கி
கணவனிடம் என் சொல்வேனோ ?
***JOKER***
-
10 maasam pasam konda
sisuvin uyirukkum abathu undu.
Athu pole kaalam ellam
unkoodave iruppen enru sonna
manaivikkum abathu undu.
Maranamum jananamum
oru aaraiyil irukkum idam
enra ennai porutha varaikkum
pirasava arai than.
Joker, unga kavithaiyil pol
sisuvum marainthu vidhalam.
Athupolave oru pirasavam enral
pirasavam parkum pennukum
periya abathu sila samaiyangalil.
Enga kudambathila
maranathin ellai kodu
maddhum poyi parthu vantha
singa pengalum undu.
Athunaale than ithu sollanum pole thonichu.
Pirasava valiyai thaangi
oru sisuvai pethedutha
oru singa pen midhu
enakku eppavum oru thani mariyathai undu. 🙏🙏
Pirasava valiyai thaangunaal
inthe ulagathula enna valiyum thaangalam!!
(https://i.postimg.cc/3NQRHtct/2b0edf0760d1b83e7a6504d22d53e990.jpg)
-
நன்றி ishaa உங்கள் கருத்துக்கு
மனைவியின் பிரசவ வலியை
உடன் இருந்து பார்த்தால் பின் அவன்
அவளுக்கு எந்த வலியையும் தர
முயல மாட்டான் வாழ்வில்
எல்லா பெண்களும்
சிங்க பெண்களே
-
நன்றி Joker❤️
-
இதோ மருத்துவமனை முன்
சீனி தேடி அலையும் நேரத்தில்
வழிமறந்து திரியும் எறும்பை போல
தவித்து கொண்டிருக்கிறேன்
சிலவருடம் முன்
தூரத்து உறவு சொல்லி
உறவாக்கி கொள்ள
அவளை பார்க்க செல்கையில்
கதவின் இடுக்கில் இருந்து இருவிழியால்
என் இதயத்தில் அம்பெய்துகொண்டிருந்தாள்
அவள் கால்கள் ஏனோ கோலம் இட்டுக்கொண்டிருக்க
என் மனதோ அலைக்கழிந்து கொண்டிருந்தது
அவள் பின்னால் ...
இதுதானோ காதல் என உணருமுன்
முகூர்த்தநாள் குறித்து நல்ல நேரம் பார்த்து
கழுத்தில் மூணுமுடிச்சு
ஏன் என தெரியாமல் இட்டு
எனக்கு சொந்தமாக்கினேன்
எங்கள் வாழ்க்கையில்
வருடங்கள், மாதங்களாய் உருண்டோட
விசாரிப்புகள் மெல்ல எட்டி பார்த்தன
அன்பு பகிர ஓர் உறவு வேண்டுமென
அக்கரையில் சிலர் , ஆர்வத்தில் சிலர்
அனாவசியமாய் சிலர் கேட்க
பரிச்சியமில்லா தெய்வங்களும் கண்டு
பரிகாரமாய் சொன்னதையும் செய்து
காத்திருக்கும் வேளையில் விஞ்ஞானத்தின்
துணையும் கொண்டு
என்னவள் -அவள்
வயிற்றில் கருவாய்
எங்கள் உயிர்
இதோ
கேட்கிறது எங்கள் குழந்தையின்
அழுகுரல் ஓடோடி செல்கிறேன்
அவள் இருந்த அறைக்குள்
அங்கு
குழந்தையின் கை பிடித்து
என்னவள் இருக்க
இருவர் கையும் சேர்த்து என் கை பிடிக்க
எங்கள் கண்களின் ஓரத்தில் பிறந்த
கண்ணீர் சொல்லியது
இது தான் காதல் என !!!
Happy ending kettavargalukaga
****JOKER****
-
nalla vela.. 1st pathi padichathum ayayo enna nadaka potho nu irunthathu.. thanks for the happy ending 😅