FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yazhini on February 12, 2025, 08:17:54 PM
-
ஏக்கம்
காரிருள் சூழ்ந்த வேளையிலும்
காரிகையின் இதயத்தில் வந்த வேந்தே!!!
உன் இருப்பில் இனித்த தருணம்
உன் நினைவுகளிலும் தித்திக்கின்றதே!!!
கண்ட கனவு காணல் நீர் இருப்பினும்
களையாதா நினைவு நீரூற்று...
நீ என் ஆசை இல்லை
நீ எனது ஏக்கம்...