FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 15, 2012, 12:19:38 AM

Title: ஏற்க்கபடாமலே !
Post by: aasaiajiith on April 15, 2012, 12:19:38 AM


முண்டாசு கவிஞனின்  பெயர்  கொண்டதனால்
ஆசைக்கு உண்டான  ஆசை  இதுவோ  ?

உலகில்  இதுவரை  பாடப்பட்ட 
" பா  "க்களுக்கெல்லாம்  விட  அழகிலும்  இனிமையிலும்  " ரதி "யாய்
விளங்கும்  சிறப்பினால்  வந்த  ஆசை இதுவோ ???

எது  எப்படியோ  ,
பொன்  வேண்டவில்லை  நான்  ,
பொருளும்  வேண்டவில்லை
மண்  வேண்டவில்லை நான்
உன்  மனமும்  வேண்டவில்லை

பொன்னை  விட பொன்னான  உன் ஒரு
பதிப்பை  தான்  வேண்டினேன்  ....

என்  வேண்டுகோள்  இன்னும்  ஏற்க்கபடாமலே  !