FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 17, 2024, 07:49:09 PM
-
இதயமே
தூரமாய் நீ இருந்தும்
நினைவில்
அருகாமையில்
இருப்பதாய் உணர்கிறேன்
தெளிவான ஆற்று நீர் போல
உன் அன்பு
எனக்கானதாய்
உணர்கிறேன்
எதனை கொண்டும்
ஈடு செய்ய முடியா அன்பு
வசந்தமான
நினைவுகளை போல
குளிர்ச்சியான தென்றல் போல
அணைத்து செல்கிறது
சோர்வாக இருக்கும்போது
ஆதரவாய்
துல்லியமாய்
தவறுகளை
சுட்டிக்காட்ட
உன்னை விட வேறு துணை
யார் இருப்பார்
ஒவ்வொரு
இதயமும்
நிகழ்காலத்தை
தள்ளிவிட்டு
எவ்வளவு தாமதமானாலும்
அடைய முடியும் என்ற
நம்பிக்கையில்
கடந்த காலத்திற்காக
காத்திருக்கிறது
ஏன் என்று தெரியவில்லை
இரவு பகல் என பாராமல்
நிறம்,மொழி கடந்த
எதிர்பார்ப்பு இல்லா
அன்பு என்றுமே
அழகானவை
விட்டு சென்ற துணை
திரும்ப வரும் வரை
காத்திருந்து
வரவில்லை எனில்
உண்ணாமல் அதன் நினைவுகளில்
வாழுமாம் மரணம் வரை
இருவாச்சி (வேழாம்பல் )
பறவை போல
ஆரம்பத்தை விட
அழகாக இருந்துவிட
துடிக்கிறது
எதிர்பாராத
அந்த உறவின்
முடிவு
வார்த்தைகளிலும்
செயல்களிலும்
நினைவுகளிலும்
முடியுமென்றால்
பார்வைகளிலும்
மற்றவர்களுக்கு
நேசிக்கப்படுபவராய்
இருங்கள்
****JOKER****