FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on October 09, 2024, 02:01:32 PM

Title: கிறுக்கல் 5 - கண் எதிரே தோன்றினார்
Post by: Vethanisha on October 09, 2024, 02:01:32 PM


மாலை வேளை
எதிர்பாத்து
கார்த்திருக்கும்
என் காலை

கரை சேரா கடலும்
தரையிரங்கா சந்திரனும்
தாலாட்டும் நேரத்திலே

கண் பார்த்து
தோள் சாய்ந்து
 கை கோர்த்து
 காலார நடை போடும் 
அந்த நொடி

சுகமாய் இனித்தது
கனவு கலையும் வரை