FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on October 04, 2024, 01:50:26 PM
-
(https://i.ibb.co/hB5zW6s/FB-IMG-1728029800334.jpg) (https://imgbb.com/)
தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.
பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.
அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்,
காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்,
புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்..!
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.
தோல்விகண்டு
துவளுகையில்
புதுத்தெம்பூட்டி,
அடுத்த முயற்சிக்கு
அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி..!
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்
பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்..!
முடிவில்லா முடிவில்-நட்பு
வளர்ந்து நிற்கும்?
என்னை வேறு யாரும் புரிந்து இருக்கமாட்டார்கள்
என் தோழியை/நண்பனை
விட நன்றாக
என்னும் ரீதியில்...!
வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமாக
ஆண்-பெண் நட்பு.....
நண்பர்கள்தினம் முடிந்தது.
நட்புக்கு முடிவேது..?
அன்பும் நட்பும் தொடரட்டும்......