FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 22, 2024, 08:12:05 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 356
Post by: Forum on September 22, 2024, 08:12:05 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 356

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F356.jpg&hash=b430b24823b1b2a1c4304688c64ef4f897a99643)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 356
Post by: Mr.BeaN on September 22, 2024, 10:54:57 PM
சிப்பியில்லா முத்தொன்று
மண் செழிக்கும் சொத்தென்று
நீர்துளியாய் நமை நோக்கி வருதே
மனம்குளிற சந்தோசம் தருதே

இடி முழக்கம் இசையெனவும்
ஒளி மின்னல் வழியெனவும்
தடம் கொடுக்க தரை நோக்கி
உரைமேகம் நீராக்கி
வந்தாலோ வளம் கொழிக்கும்
நம் வாழ்வும் தான் தழைக்கும்

கடல் நீரும் சூடாகி
உரு மாறும் நீராவி
வான் சென்றால் அது மேகம்
அது தீர்க்கும் நம் தாகம்

வான்மேகம் சிந்த மழையாகி
வையத்தின் சொந்த நதியாகி
போகின்ற இடத்தை சிறப்பித்து
தாங்கிடும் பூமியின் உயிர் ஈத்து
உயிர்களுக்கெல்லம் ஒரு வித்து
தரணிக்கதுதான் பெரும் சொத்து
என்னும் மழையில் நான் நின்று
நனைதல் தானே மிக நன்று
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 356
Post by: RajKumar on September 23, 2024, 10:17:23 AM
மழை
மண்னை மகிழ்விக்க வந்த அற்புத சக்தியே
விண் மனம் குளிர்ந்து
 சுட்டெரிக்கும் ஆதவனையும் தன் நிலை மறக்க செய்து மேகங்களால் மறைத்து
மண்ணை குளிர் வித்து 
குளம் குட்டைகளை  நீர் நிலையாக நிரப்பி
விதை வித்துகளை விளைய வைத்து விவசாயத்தை செழிக்க செய்து ஒரறிவு  முதல் ஏழறிவு  ஜீவராசிகளுக்கும்
உணவுக்கு வழி வகுத்தது பஞ்சம் போக்கி
மண்ணில் வளமுடன்
வாழ வைத்து‌ மனித உள்ளங்களை மகிழ்விக்கும் மழையே

மழைத்துளி இயற்கையின் உயிர்த்துளி
விண்ணில் இருந்து மண்ணிற்கு வரும் அற்புத சக்தியே
குளிர் காற்றை அள்ளி தரும் அதிசயமே
விண்ணிலிருந்து மண்ணை தொடும்போது நல் மண்வாசனை அளித்து
மழைநீர் துளிகள் என் மேல் படும் போது சில்லென்று குளிர்க்கிறுது
 விவசாயம் செழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் மண்ணில் வாழ வைக்க வரும் மழையே
மழை மகளே வருக வருக என வரவேற்கிறோம்

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 356
Post by: சாக்ரடீஸ் on September 23, 2024, 06:43:50 PM
(https://i.postimg.cc/sxKKK1Rf/ei-S998958539.jpg) (https://postimg.cc/y3gF81d2)
(https://i.postimg.cc/cHpV35fP/ei-UNXUV90397.jpg) (https://postimg.cc/VrFGQgGF)
(https://i.postimg.cc/ydgMkz3F/ei9-I66-F90741.jpg) (https://postimg.cc/WFVWHCn3)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 356
Post by: Kavii on September 25, 2024, 01:38:53 AM
மழை – என் காதல் கவிதை

மழை சாரலில் நின்று, அவள் முகம் மழைத்துளியால் நனைந்ததும்,
அந்த சிரிப்பில் ஒரு உலகம் புதைந்து போகிறது,
அவள் சுவாசிக்கின்ற ஒவ்வொரு நொடியும்
மழையென புதியதாகிறது! மழைத்துளிகள் அவளது முகம் தீண்ட,
அவளது இதயம் துள்ளி குதிக்கிறது!

மழை தரும் குளிரில், அவளது நினைவுகள் மழையைக் கண்டு
அன்பின் மொழியில் கவிதையை வார்க்கின்றன!
வானம் குயிலாய் பாட, அவளது மனதில்  காதல் நனைந்து,
மழையோடு மழையாக கரைந்தோடியது !

நீர்த்துளி விழும் ஒவ்வொரு நொடியிலும்
மழையோடு அவள் காதல் மொழி பேசுகிறாள்  !
மழையோ அதன் இசையோடு அவளது கன்னத்தில் முத்துக்களாய் விழுந்து
முத்தங்களைப் பதித்து தன் காதலை வெளிப்படுத்துகிறது!

விழுந்த முத்தங்களால் அவளது கூந்தல் நனைந்து
மனம் குளிர்ந்து! குழந்தைபோல் மாறி ! முகம் மலர அவள் சிரிக்கிறாள் !
வானமும் அவளது சிரிப்பைக் கொண்டாடுகிறது
தன் இடிச்சத்தத்தை வெளிப்படுத்தி !

வானம் காணும் ஆசைகளும்,
மண்ணில் விழும் துளிகளில் உயிர் பெற,
அவளின் அழகிய மேனி மழையின் தாய்மையை
தழுவிச் செல்வது போலக் கனவுகள் பறக்கின்றன.!

அவள் முகத்தில் விழும் ஒவ்வொரு துளியுடனும்
அவள் பேசி கொண்டிருக்கிறாள்!,
அவள் இதயத்தில் நெகிழ்ந்திருக்கும் அன்பை
காதலின் மொழியாக மழை மாற்றியது !

அவளின் ஆனந்தம் மழையில் அதிகரிக்க,
அவள் பார்க்கும் வானம் எதுவும் சொல்லாமல்
மௌனமாய் முத்தங்களைப்  பதிக்க 
மழையில் நனைந்த அவளது கன்னத்தில் தெரியும்,
மழைக்கு அவள் மீது இருக்கும் காதல் !

மழையின் ரகசியங்களை
அவள் இதயம் கதறிக்கொண்டு கேட்க,
அவள் அனுபவிக்கும் அந்த காட்சி
என் கவிதையில் ஓவியமாகி நின்று
என் கவிதைக்கு உயிர் கொடுக்க,

அவள் புன்னகை அந்த ஓவியத்தின் வண்ணமாக அமைய
மழையின் சத்தமும் மழையோடு அவள் பேசும் பேச்சும்
என் கவிதைக்கு இசையாய் மெருகூட்ட !
அவள் நனைந்த அந்த நாள் ஒரு பிரியமான மழை நாளாய், அவளது வாழ்வை  ஒரு கவிதையாய் மாற்றிவிட்டது !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 356
Post by: SweeTie on September 25, 2024, 06:34:10 PM
இடியோடு  மின்னலும்  இன்னிசைபாட
காற்றோடு மரங்களும்  அசைந்தாட 
இரவோடு  குளிரும்  அவ்விடம் சூழ
கருமுகில்  களைந்து  துளித்துளியாய்
 இறங்கிவந்தாய் மண்குளிர

சிறுவன்  மனசெல்லாம்  குதூகலிக்க
உழவர்  கனவெல்லாம்  நனவாக
பாலைவனமும் பசும் புற்றரையாக
பயிர்கள்  விளைந்து  செழிப்பாக 
சோவென பெய்யும் மழையே

காடுகள்  தளைப்பதும்  உன்னாலே 
செடி கொடிகளும்  வாழ்வதும் உன்னாலே
குளம்  குட்டை   நிரம்பலும்  உன்னாலே
விலங்கினம்  வாழ்வதும் உன்னாலே 
விஷ ஜந்துக்கள்  வாழ்வதும் உன்னாலே

பாலைவனங்களும்   சோலையாகும் 
தரிசு  நிலங்களும்  சேனையாகும்
வாய்க்காலும் நிரம்பி வரம்பும் உயரும்
குட்டையில்  வாழும்      தவளைக்கூட்டமும்
கும்மாளம் அடிக்கும்  உன் வரவால்;

தூறலாய்  வருவாயோ இல்லை 
சாரலாய்   வருவாயோ   இல்லை
அடைமழையாய் வருவாயோ    அன்றி
கனமழையை பெய்வாயோ
ஆலங்கட்டி  மழை  பொழிவாயோ
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 356
Post by: VenMaThI on September 26, 2024, 01:35:46 AM


முத்து முத்து தூரலே
ஜாதி மத பேதமின்றி
எவரின் அனுமதியும் இன்றி
அனைவரையும் முத்தமிடும் தூரலே...

சில்லென்ற காற்றை துணையாய் கொண்டு
சிலிர்க்க வைப்பதை வழக்கமாய் கொண்டு
விழுந்தாலும் வலியில் அழாமல்.. யாம்
அழுவதையும் உம்முள் மறைக்கும் தூரலே...

வர்ணமற்று இருந்தாலும் காண்போரை
வியக்கவைப்பாய் உம் அழகில்...
நனைத்தாலும் எங்களை மகிழ்ச்சியில்
நகைக்கச்செய்வாய் உம் அரவணைப்பில்...

வானம் பார்த்த பூமியைக்கொண்டு - என்றும்
உம் வருகையை மட்டுமே வரமாய் கேட்கும்
விவசாயிகளின் உடன் பிறவாத் துணையே  - அவர்களின்
மகிழ்ச்சிக்கு விதையாகும் உம் வருகையே

காற்றையும் இடியையும் மின்னலையும்
நண்பர்களாய் கொண்டு - களிப்பில் வானில் குத்தாட்டம் போட்டுக்களைத்தபின் - உம்
வியர்வையைத்தான் பொழிகிறாயோ நீராய் எம்மீது??

சில்லென்ற காற்றுடன் யாவரையும்
 சிலிர்க்கவைக்கும் உம் ஸ்பரிசம்
மழலை முதல் முதியோர் வரை - அனைவரையும்
ரசிக்கவைக்கும் உம் அழகு....

உம் ராகத்தை  மிஞ்சும் ஓர் இசையை
இயற்றவில்லை யாரும் இவ்வுலகில்
சடசடவென்றாலும் படபடவென்றாலும்
கேட்போரை மயக்கும் மந்திரவாதி நீ...

சாது மிரண்டால் காடு கொள்ளாதென்பர் - இதற்கு
சாலச்சிறந்த சான்று உமையின்றி வேறில்லை ....
உன்னைப்போல்
அரவணைத்து காக்கவும் ஈடில்லை
பொங்கியெழுந்து அழிக்கவும் ஈடில்லை..

மழையே
நீரின்றி அமையாது உலகென்பர்
நீயின்றி அமையாது அந்த நீரும்...
மக்கள் வாழ நீ வீழ்வாய் - வீழ்ந்தாலும்
என்றுமே உயர்ந்து நிற்பாய் எங்கள் மனதில்...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 356
Post by: NiYa on September 27, 2024, 10:46:33 PM
மழை என்னும் அவன்


கருமேகம் சூழ்ந்த அந்த
மாலை நேரம் காத்திருந்த
எனக்கான அவன் வருகை
அதிசயம் தான்

மென்மையான காற்றுடன்
மெல்லிய துமிகளாய் ஆரம்பித்து
தூறலாயும் சாரலாயும்  மாறிய
மாறி அணைத்துக்கொண்டான் அவன்

அவன் உயிர் இல்ல இந்த உலகில்
 ஈரமற்று இறுகிப்போன
என் இதயம் அவனின் ஈரமான அந்த
அணைப்பில் இளகிப்போயிற்று

என்னதான் அந்த மழை நீர்
அணைப்பிலும்
புரிந்துகொண்டான்
அவன் என் கண்ணீரை

என் சந்தோசம் சோகம்
எல்லாவற்றையும் அவனுடன்
பகிரும் ஊடகம் தான்
இந்த மழை

அவன் இல்ல இந்த உலகில்
அவன் என்னுடன் பேசும்
காதல் மொழி தான்
இந்த மழை

என்றாவது ஒரு நாள்
அவனும் நானும்
சேர்ந்து இந்த மழையுடன்
நடை போடா ஆசை எனக்கு