ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 354
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
[/color][/b]
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F354.jpg&hash=26863e814faf56557bcaf4365ffcef16d5d2eded)
அன்ரோறிரவு
அவனும் நானும்
காரிருள் இருட்டினில்
இதமாய் புன்னைகைக்கும்
அழகு நிலவின் வெளிச்சத்தில்
கடற்கரை ஓரம் இணைந்து
ஓருயிராய் வலம் வருகையில்..
கடல் அலைகள்
கரையைச் செல்லமாய்
ஆராத் தழுவி, உடன்
இணையாய் மணலில்
நடைபயின்ற எங்கள் பாதங்களை
தொட்டு வருடுகையில்..
நீரும் நிலவும்
கண்ணோடு கண் வைத்து
ஒருவரை ஒருவர் ரசிக்கும் நொடி
சொல்ல முடியா சொல்லில் அடங்கா
பல உணர்வுகள் இரு இதயத்தில்
பந்தயமிட்டு கொண்டிருக்கையில்..
மிதமாய் வீசும் தென்றல்
அங்கிருக்கும் செடி கொடிகளோடு
காதல் கானம் பாடிய வேளை
என்னவனின் விரல்கள்
முதல் முறையாய்
என் கரங்களை பற்றுகையில்..
உறைந்தே போனேன் ஒருகணம்
நிலவும் நீரும் அலையும் கரையும்
யேன் வீசிடும் தென்றலும் கூட
ஒரு கணம் உறைந்தே போனது
என் நாணத்தையும் உணர்வையும்
செவ்வனே புரிந்த வண்ணமாய்..
என்னவனே
இன்று தொடங்கி
இனிவரும் ஒவ்வொரு இரவுகளையும்
இந்நிலவை ரசித்த வண்ணமாய்
இப்படியே உன்னோடு நான்
நடந்து களித்திட வேண்டும்..
உன் கரம் கோர்த்து
உன் தோள் சாய்ந்து
உன் மடியினில் கவலைகள் மறந்து
வாழும் காலம் யாவும்
உனக்காகவே வாழ்ந்து
மடிந்திட வேண்டும்..
கைக்கூடிய காதலுக்கும் கைக்கூடா காதலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்..
~ தமிழ் பிரியை மைனா ~